481 அடி உயரத்தில் ஒரு பிரம்மாண்டம்!

Egypt Pyramids
Egypt Pyramids

- மரிய சாரா

தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில், நாம் பல பிரம்மாண்டமான கட்டடங்களைப் பார்த்து வியக்கின்றோம். ஆனால், இன்றைக்குபோல் இல்லாமல், எந்தவிதமான தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில், மனிதர்களால் எழுப்பப்பட்ட பல கட்டடங்கள் பல வருடங்கள் கடந்தும் இன்றும் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

அப்படிப்பட்ட கட்டடங்களில் ஒன்றுதான் எகிப்தில் பிரம்மாண்டமாய் நிற்கும் பிரமிடுகள். எகிப்தின் பிரமிடுகள், குறிப்பாக கிசாவின் பெரிய பிரமிடு குறித்தும் பழங்கால கட்டமைப்புகள் பற்றிய சில புதிரான உண்மைகள் குறித்தும் இங்கு பார்க்கலாம்:

1. கட்டடம் கட்டப்பட்ட வரலாறு:

கிசாவின் கிரேட் பிரமிட், குஃபு அல்லது சேப்ஸ் பிரமிடு என்றும் அழைக்கப்படுகிறது, இது கிமு 2580-2560இல் பழைய எகிப்து இராச்சியத்தின் நான்காவது வம்சத்தின்போது கட்டப்பட்டது. இது பல ஆண்டுகளாக உலக அதிசயங்களில் ஒன்றாக இன்றளவும் வியக்கத்தக்க வகையில் நின்றுகொண்டுள்ளது.

2. கட்டடக்கலையின் சிறப்பு அம்சங்கள்:

கிரேட் பிரமிட் முதன்முதலில் 146.6 மீட்டர் (481 அடி) உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. மனிதனால் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான கட்டடத்திற்கு காட்சியாக இது 3,800 ஆண்டுகளுக்கும் மேலாக காட்சியளிக்கிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டமைப்பாகும். இது தோராயமாக 2.3 மில்லியன் சுண்ணாம்பு மற்றும் கிரானைட் கற்கள்கொண்டு கட்டப்பட்டுள்ளது. அவற்றில் சில 80 டன் எடை கொண்டவையாகவும் உள்ளன.

3. கட்டடத்தின் துல்லியமான அளவுகள்:

பெரிய பிரமிட், திசைகாட்டியின் கார்டினல் புள்ளிகளுடன் துல்லியமாக இணைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. அதன் அடித்தளத்தின் பக்கங்கள் திசைகாட்டியின் நான்கு கார்டினல் புள்ளிகளுடன் (வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு) நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டமைப்பின் துல்லியமான அளவுகள் மிகவும் வியக்கத்தக்கவையாக உள்ளன.

4. உழைப்பு மற்றும் பணியாளர்கள்:

அடிமைகள்தான் பிரமிடுகளைக் கட்டினார்கள் என்றும், பல திறமையான தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள்தான் அவற்றைக் கட்டினார்கள் என்றும் தொல்பொருள் சான்றுகள் பல செய்திகளைத் தெரிவிக்கின்றன. இந்தத் தொழிலாளர்கள் நன்கு உணவளிக்கப்பட்டு, அருகிலுள்ள தற்காலிக நகரங்களில் தங்க வைக்கப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!
Egypt Pyramids

5. பிரமிடுகள் கட்டப்பட்டதற்கான நோக்கம்:

எகிப்தின் மன்னர்களான பாரவோன்கள் மற்றும் அவர்களின் மனைவியர்கள் இறந்தபிறகு அவர்களின் உடலைப் பதப்படுத்தி, கல்லறைகளில் பாதுகாக்க கட்டப்பட்டவைதான் இந்தப் பிரமிடுகள். இறந்தபிறகு இப்படி உடலைப் பதப்படுத்தி வைப்பதன் மூலம் அவர்கள் மறுவாழ்வு பயணத்தை உறுதிசெய்வதாகக் கருதினர்.

6. கணித வரைவுகள்:

எகிப்தின் பிரமிடுகளின் வடிவமைப்பு மிகவும் மேம்பட்ட கணித அறிவைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பெரிய பிரமிட்டின் பரிமாணங்கள் π (பை) விகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை. அடிப்பகுதியின் சுற்றளவு இரண்டு மடங்கு உயரத்தால் வகுக்கப்படுவது தோராயமாக π-க்குச் சமமாக இருக்கும்.

7. நட்சத்திரங்களுடனான தொடர்பு:

சில கோட்பாடுகள், பிரமிடுகள் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் அல்லது விண்மீன்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றன. கிசாவின் மூன்று பிரமிடுகள் ஓரியன்ஸ் பெல்ட்டில் உள்ள நட்சத்திரங்களுடன் இணைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com