கடந்த பத்து நாளாக ராமர் சென்ற பாதையில் சில இடங்களுக்கு யாத்திரையாக சென்றுவந்தேன். அதில் அகஸ்தியரின் ஆசிரமம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. வால்மீகி ராமாயணத்தில் ஆரண்யக் காண்டம் ஆரம்பத்தில் ஸ்ரீராமர் அகஸ்திய முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்று அவரிடமிருந்து ஒரு வில்லைப் பெறுகிறார். அகஸ்தியர் ஆசிரமம் செல்லும் பாதையை ராமாயணம் இப்படி விவரிக்கிறது. “தென் திசையில் நான்கு யோஜனைத் தூரம் சென்றதும் ஏறக்குறைய சமதளமாக விளங்குகின்ற அந்தக் காட்டுப் பகுதியில் வென் தாமரை மலர்களும், திப்பிலி மரங்களும், பறவைகளும், மரங்களின் இலைகள் பச்சைப்பசேலென்று ஒளிவீச அங்கு அகஸ்தியரின் சகோதரர் ஆசிரமம் வரும் அங்கே ஒரு இரவை கழித்துவிட்டு காட்டை ஒட்டினாற்போல் தெற்கு திசையை நோக்கிச் சென்றால் ஒரு யோஜனை தூரத்தில் மனங்கவரும் வனப்பகுதியில் ஏராளமான மரங்கள் சூழ்ந்திருக்க அகஸ்தியரின் ஆசரமம் தென்படும்” என்கிறது. ( ஒரு யோஜனை = 12.8 கிமீ ) .இவ்வளவு துல்லியமாக ’கூகிள் மேப்’ இல்லாத அந்த காலத்தில் விவரித்த இடத்தை பேருந்து, டிராக்டர் மற்றும் தற்காலிகமாக அமைத்த பாலம் மூலம் கடந்து மந்தாகினியின் ஓடை சலசலப்பு செய்து கால்களை வருடச் சின்ன குன்றின் மீது ஆசரமம் அமைந்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் வால்மீகி ராமாயணத்தில் சொன்ன வென் தாமரை மலர்களும், பறவைகளும், பச்சை பசேலென்ற இலைகளும் இன்றும் பார்க்க முடிகிறது. .குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ராமாயணச் சுருக்கத்தைப் பத்தே பாசுரங்களில் காப்ஸ்யூல் வடிவத்தில் கொடுத்திருக்கிறார். அதில் ”வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி” என்ற ஒரு வரியில் தமிழ் மாமுனி என்று அகஸ்தியரை ராமர் சந்தித்து அவரிடமிருந்து வில்லை பெற்றர் என்று குறிப்பிடுகிறார். மத்தியப் பிரதேசத்தில் ‘சித்ரகூட்’ என்ற இடத்திலிருந்து 150 கிமீ தொலைவில் அகஸ்தியரின் ஆசிரமம் இருக்கிறது. “பொதிகை மலையின் தெற்குப் பகுதியில் வாழ்ந்தவர் அகஸ்தியர்” என்று சீர்காழி கோவிந்தராஜன் நடித்த நம் அகஸ்தியருக்கு வடக்கே ஆசிரமமா ? என்று தோன்றலாம். அகஸ்தியர் பிறந்து வளர்ந்தது எல்லாம் வடக்கே. பிறகு அவர் தெற்கே வந்தபோது அதன் அழகிலும், பக்தியிலும் மயங்கி இங்கேயே இருந்துவிட்டார். அவர் கொடுத்த தமிழால் இன்று இந்த கடைசிப் பக்கத்தை நீங்கள் படிக்கிறீர்கள்!’ஆசாரிய ஹிருதயம்’ என்ற வைணவ நூலில் அகஸ்தியர் தெற்கு திசைக்கு வந்த பிறகு எல்லோரும் தெற்கு திசை நோக்கித் தொழுவார்கள். அவரால் தெற்கு திசைக்குப் பெருமை. அது போலத் தெற்கில் அவதரித்த நம்மாழ்வாரால் தெற்கு திசை பெருமை பெற்றது என்ற குறிப்பு வருகிறது. .அகஸ்தியர் ஆசிரமம் சுற்றி பழைய புராதனக் கோயில் என்பதற்கு எல்லாச் சான்றுகளும் அங்கே தென்பட சில சந்நிதிகளில் என்ன என்றே தெரியாமல் செடிகள் மூடியிருந்தன. அந்த சந்நிதிகள் என்ன என்று ஊர் மக்களிடம் கேட்டேன். அவர்களுக்குத் தெரியவில்லை, பல வருடங்களுக்கு உள்ளே உள்ள மூர்த்திகள் திருடு போய்விட்டது என்றார்கள். அந்த சந்நிதிகள் என்னவாக இருக்கும் என்று ராமாயணத்தில் தேடினேன். அதில் அகஸ்தியர் ஆசரமம் வளாகத்தில் பிரம்மா, அக்னி, சூரியன், சந்திரன், வருணன்… வந்து தங்குவதற்கான வசிப்பிடங்கள் என்ற குறிப்பு ராமாயணத்தில் வருகிறது. இந்த சின்ன சந்நிதிகள் அதுவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. கண்ணை மூடிக்கொண்டு இவை எல்லாம் இந்தியத் தொல்லியல் ஆய்வின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். .அகஸ்திய ஆசிரமத்தில் மகா விஷ்ணு, அகத்திய முனிவர், பழைய உடைந்த சிற்பங்களில் ராமர் நடந்து செல்லும் காட்சி, அனுமார் தரிசித்துவிட்டு கொண்டு வெளியே வந்த போது அந்த ஊர் ஏழை மக்கள் எங்களுக்கு (2000 பேர்களுக்கு ) டீ கொடுத்து உபசரிக்க, இளைஞர்கள் மாவுடன் நெய் சர்க்கரை கலந்த பிரசாதத்தை மூட்டையில் கொண்டு வந்து சிப்-லாக்கில் கொடுத்தார்கள். எவ்வளவு முயன்றும் நான் கொடுத்த பணத்தை "இது சேவை" என்று வாங்க மறுத்துவிட்டார்கள். என்னை மரத்தடியில் அவர்கள் சமைத்த உணவைச் சாப்பிட அழைத்தார்கள்!டீ, பிரசாதம் கொடுத்த அவர்களை நாம் "பானி பூரி" விற்பவர்கள் என்று கிண்டல் செய்கிறோம்.
கடந்த பத்து நாளாக ராமர் சென்ற பாதையில் சில இடங்களுக்கு யாத்திரையாக சென்றுவந்தேன். அதில் அகஸ்தியரின் ஆசிரமம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. வால்மீகி ராமாயணத்தில் ஆரண்யக் காண்டம் ஆரம்பத்தில் ஸ்ரீராமர் அகஸ்திய முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்று அவரிடமிருந்து ஒரு வில்லைப் பெறுகிறார். அகஸ்தியர் ஆசிரமம் செல்லும் பாதையை ராமாயணம் இப்படி விவரிக்கிறது. “தென் திசையில் நான்கு யோஜனைத் தூரம் சென்றதும் ஏறக்குறைய சமதளமாக விளங்குகின்ற அந்தக் காட்டுப் பகுதியில் வென் தாமரை மலர்களும், திப்பிலி மரங்களும், பறவைகளும், மரங்களின் இலைகள் பச்சைப்பசேலென்று ஒளிவீச அங்கு அகஸ்தியரின் சகோதரர் ஆசிரமம் வரும் அங்கே ஒரு இரவை கழித்துவிட்டு காட்டை ஒட்டினாற்போல் தெற்கு திசையை நோக்கிச் சென்றால் ஒரு யோஜனை தூரத்தில் மனங்கவரும் வனப்பகுதியில் ஏராளமான மரங்கள் சூழ்ந்திருக்க அகஸ்தியரின் ஆசரமம் தென்படும்” என்கிறது. ( ஒரு யோஜனை = 12.8 கிமீ ) .இவ்வளவு துல்லியமாக ’கூகிள் மேப்’ இல்லாத அந்த காலத்தில் விவரித்த இடத்தை பேருந்து, டிராக்டர் மற்றும் தற்காலிகமாக அமைத்த பாலம் மூலம் கடந்து மந்தாகினியின் ஓடை சலசலப்பு செய்து கால்களை வருடச் சின்ன குன்றின் மீது ஆசரமம் அமைந்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் வால்மீகி ராமாயணத்தில் சொன்ன வென் தாமரை மலர்களும், பறவைகளும், பச்சை பசேலென்ற இலைகளும் இன்றும் பார்க்க முடிகிறது. .குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ராமாயணச் சுருக்கத்தைப் பத்தே பாசுரங்களில் காப்ஸ்யூல் வடிவத்தில் கொடுத்திருக்கிறார். அதில் ”வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி” என்ற ஒரு வரியில் தமிழ் மாமுனி என்று அகஸ்தியரை ராமர் சந்தித்து அவரிடமிருந்து வில்லை பெற்றர் என்று குறிப்பிடுகிறார். மத்தியப் பிரதேசத்தில் ‘சித்ரகூட்’ என்ற இடத்திலிருந்து 150 கிமீ தொலைவில் அகஸ்தியரின் ஆசிரமம் இருக்கிறது. “பொதிகை மலையின் தெற்குப் பகுதியில் வாழ்ந்தவர் அகஸ்தியர்” என்று சீர்காழி கோவிந்தராஜன் நடித்த நம் அகஸ்தியருக்கு வடக்கே ஆசிரமமா ? என்று தோன்றலாம். அகஸ்தியர் பிறந்து வளர்ந்தது எல்லாம் வடக்கே. பிறகு அவர் தெற்கே வந்தபோது அதன் அழகிலும், பக்தியிலும் மயங்கி இங்கேயே இருந்துவிட்டார். அவர் கொடுத்த தமிழால் இன்று இந்த கடைசிப் பக்கத்தை நீங்கள் படிக்கிறீர்கள்!’ஆசாரிய ஹிருதயம்’ என்ற வைணவ நூலில் அகஸ்தியர் தெற்கு திசைக்கு வந்த பிறகு எல்லோரும் தெற்கு திசை நோக்கித் தொழுவார்கள். அவரால் தெற்கு திசைக்குப் பெருமை. அது போலத் தெற்கில் அவதரித்த நம்மாழ்வாரால் தெற்கு திசை பெருமை பெற்றது என்ற குறிப்பு வருகிறது. .அகஸ்தியர் ஆசிரமம் சுற்றி பழைய புராதனக் கோயில் என்பதற்கு எல்லாச் சான்றுகளும் அங்கே தென்பட சில சந்நிதிகளில் என்ன என்றே தெரியாமல் செடிகள் மூடியிருந்தன. அந்த சந்நிதிகள் என்ன என்று ஊர் மக்களிடம் கேட்டேன். அவர்களுக்குத் தெரியவில்லை, பல வருடங்களுக்கு உள்ளே உள்ள மூர்த்திகள் திருடு போய்விட்டது என்றார்கள். அந்த சந்நிதிகள் என்னவாக இருக்கும் என்று ராமாயணத்தில் தேடினேன். அதில் அகஸ்தியர் ஆசரமம் வளாகத்தில் பிரம்மா, அக்னி, சூரியன், சந்திரன், வருணன்… வந்து தங்குவதற்கான வசிப்பிடங்கள் என்ற குறிப்பு ராமாயணத்தில் வருகிறது. இந்த சின்ன சந்நிதிகள் அதுவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. கண்ணை மூடிக்கொண்டு இவை எல்லாம் இந்தியத் தொல்லியல் ஆய்வின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். .அகஸ்திய ஆசிரமத்தில் மகா விஷ்ணு, அகத்திய முனிவர், பழைய உடைந்த சிற்பங்களில் ராமர் நடந்து செல்லும் காட்சி, அனுமார் தரிசித்துவிட்டு கொண்டு வெளியே வந்த போது அந்த ஊர் ஏழை மக்கள் எங்களுக்கு (2000 பேர்களுக்கு ) டீ கொடுத்து உபசரிக்க, இளைஞர்கள் மாவுடன் நெய் சர்க்கரை கலந்த பிரசாதத்தை மூட்டையில் கொண்டு வந்து சிப்-லாக்கில் கொடுத்தார்கள். எவ்வளவு முயன்றும் நான் கொடுத்த பணத்தை "இது சேவை" என்று வாங்க மறுத்துவிட்டார்கள். என்னை மரத்தடியில் அவர்கள் சமைத்த உணவைச் சாப்பிட அழைத்தார்கள்!டீ, பிரசாதம் கொடுத்த அவர்களை நாம் "பானி பூரி" விற்பவர்கள் என்று கிண்டல் செய்கிறோம்.