கவிதை - பாரதியும் பல்வகைத் தமிழும்!

11-12-2023 பாரதியார் பிறந்த நாள்!
பாரதியார்
பாரதியார்
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

பாட்டுக் கொரு புலவனாம் பாரதி - நம்

பாரத நாட்டினைப் போற்றிப் பாடியது

பண்புத் தமிழினிலே!

அன்னை பராசக்தியை அன்புடனே ஆராதித்து

அர்ச்சித்து பாடியது

அமுதத் தமிழினிலே!

பால் வடியும் கண்ணணை நினைத்து

பக்தி பரவசத்துடன் பாடியது

பல்சுவைத் தமிழினிலே!

பெண்மையைப் போற்றி போற்றிப்

பெருமையாக பாராட்டி பாடியது

பாங்கான (மென்மை) தமிழினிலே!

இதையும் படியுங்கள்:
இப்படி ஒரு முறை மசாலா ஆப்பம் செஞ்சி பாருங்க!
பாரதியார்

பகைவர்களை வெற்றிகொள்ள - பயமின்றி

கர்ஜித்து பாடியது

பார் போற்றும் வீரத்தமிழினிலே!

பாகுபாடின்றி பல்வேறு கருத்துகளை

பாரத மண்ணிற்காக அன்றே பாடிய

பாட்டுக்கொரு புலவன் பாரதி -

வாழிய வாழியவே!

logo
Kalki Online
kalkionline.com