க்ரைம் தொடர்கதை: மிட்நைட் மர்டர் - 3

Crime Story Series Midnight Murder - Kathir - Balu
Kathir - Balu
ஆனந்த் ஸ்ரீனிவாசன்

என் பெயர் ஆனந்த் ஶ்ரீனிவாசன். வயது 75. நான் தபால் இலாகாவில் உயர் அதிகாரியாக பணி புரிந்து 2010இல் ஓய்வு பெற்றவன். ஆறு  வயது முதல் கல்கி வாசகன். 1985முதல் பல்வேறு பத்திரிக்கைகளில் சமூக பிரசனைப்பற்றி  எழுதி உள்ளேன்.  வாரமலர் தினமலரில் T VR நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்று முறை பரிசு பெற்றுள்ளேன். என் கதைகள் வாரமலர்,குங்குமம், கல்கி மங்கையர்மலர், விகடகவி முதலெழுத்து தினமணி கதிர் போன்ற இதழ்களில் பிரசுரம் ஆகி உள்ளன. இது வரை 75 கதைகள் எழுதி 5கதைத் தொகுப்பு வெளியிட்டு உள்ளேன். 

Updated on
Kalki Strip
Kalki

மாதங்கி அறிமுகத்துக்குப் பின் இன்ஸ்பெக்டர் சிந்துவிடம் விடியோ காலில் பேசும் போது...

"ஆமாம் சார் நான் ராம்நாத் சாருக்குக் கமிட்டாகி, மாதங்கி மேடம் போகசொன்னது உண்மை தான் சார்". ஆனா போக முடியலே! நான் பிளைட் புடிச்சு இரவு பத்து மணிக்கு இங்கே வந்துட்டேன். இங்கு அவசர வேலை. வர வேண்டிய சூழ்நிலை. நாளை மறுநாள் தான் சென்னை வருவேன்."

தன் ஆபீஸ் கேபின், தன் டிக்கெட், ரிடர்ன் டிக்கெட் எல்லாவற்றையும் ஸ்கேன் செய்து மெயில் அனுப்பி இருந்தாள்.

"உங்க இரண்டு பேரையும், தேவைப்படும்போது மீண்டும் விசாரிப்போம், இப்ப நீங்க போகலாம்.”

'மாதங்கியும் இல்லை சிந்துவும் இல்லை, வந்தது யார்? பணம் விலை உயர்ந்த பொருள்கள் அப்படியே உள்ளது. வந்தவள் பணத்துக்கோ, பொருளுக்கோ, ஆசைபடலை. போஸ்ட்மார்ட்டம் பண்ணிய டாக்டர் மாசிவ் ஹார்ட் அட்டாக் என்கிறார். கோபிநாத் இது இண்டுயூசட் மர்டர் என்கிறார். ஒரே குழப்பமா இருக்கே. ரூமில் எந்தத் தடயமும் இல்லையே? அந்த அதிகாலையில் அந்த பெண் திரும்பி போக வேண்டிய அவசியம் என்ன?...'

கேள்வி மேல் கேள்வி வந்து ராத்திரி முழுவதும் தூக்கமில்லாமல் தவித்தார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com