யார் யாரோ காத்திருக்கிறார்கள்
பெயர் தெரியாத வனப் பரப்பில்
நிச்சயமற்ற உறவுகளுடன்
அழைப்புகள் ஆர்ப்பரிப்புகள்
பதிலிகள்
காரணம் தெரியாத புன்னகை
திண்ணைப் பிரச்னைகள்
சோகம் மரணம் துக்கம்
எல்லாம் துகள் துகளாக
விந்தை உலகில்
நுழைந்தபின்
விடுவிக்கப் படாத புதிர்க்கட்டம்
திரும்பி வர
விரும்புவதில்லை யாரும்
சிக்கிக் கிடப்பதில் தான்
எத்தனை சுகம்!