முகநூல் மாயம்!

கவிதை!
முகநூல் மாயம்!
Published on

யார் யாரோ காத்திருக்கிறார்கள்

பெயர் தெரியாத வனப் பரப்பில்

நிச்சயமற்ற உறவுகளுடன்

அழைப்புகள் ஆர்ப்பரிப்புகள்

பதிலிகள்

காரணம் தெரியாத புன்னகை

திண்ணைப் பிரச்னைகள்

சோகம் மரணம் துக்கம்

எல்லாம் துகள் துகளாக‌

விந்தை உலகில்

நுழைந்தபின்

விடுவிக்கப் படாத புதிர்க்கட்டம்

திரும்பி வர

விரும்புவதில்லை யாரும்

சிக்கிக் கிடப்பதில் தான்

எத்தனை சுகம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com