கொட்டும் மழையில் கொச்சி விமான நிலையத்தில் அந்த விமானத்தைத் தரை இறக்கிய கேப்டன் பகவத் ஒரு ஜென்டில்மேன். பயணிகள் எல்லோரும் பத்திரமாக வெளி வந்த பிறகு கடைசியாக வந்த அவர் அதிகாரிகளிடம் “ஐ அம் சாரி... இது என் தவறுதான்” என்றாராம். என் உத்தியோகமும் அப்போதே பிழைத்துக் கொண்டது.அந்த விமானத்தில் காற்றாடிகளை இறக்கியதும் வேகத்தை வெகுவாகக் குறைப்பதற்காக ஆங்கிள் மாற்றிச் சுற்ற வைப்பார்கள். அத்தோடு காரில் இருப்பது போல பிரேக்குகளையும் காலால் மிதித்து வேகத்தைக் குறைப்பார்கள். இதில் எது கோளாறு ஆனதோ தெரியாது... விமானம் ரன்வேயிலிருந்து விலகிப் போய் சைடில் பள்ளத்தில் போய் இறங்கி வாலைத் தூக்கிக் கொண்டு நின்றுவிட்டது. நல்ல வேளை. யாருக்கும் காயம்கூட இல்லை. வெறும் அதிர்ச்சி மட்டும்தான்..இதுபோன்ற இன்னொரு சம்பவமும் அங்கே நடந்தது. நான் வழக்கம் போல விமானம் இறங்குவதை வெளியே நின்று பார்த்துக் கொண்டிருக்கையில் கோவையில் இறங்கிய பெங்களூர் விமானம் சிறிது தாறுமாறாக ஓடி ரன்வே ஓரத்தில் வலது இறக்கையைத் தூக்கிக் கொண்டு நின்ற மாதிரி ஆகிவிடவே, கிராஷ் டெண்டர் வண்டி உடனே விரைந்தது. “வலது புற மெயின் வீல் டயர் வெடித்து விட்டது” என்று எங்கள் சீனியர்களும் அங்கே விரைந்தார்கள். என்னுடன் நின்று விமானம் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஜினீயர் கிருஷ்ணன் மட்டும் வித்தியாசமாக ஆபீசுக்கு உள்ளே ஓடினார். “அவர் தானே முதலில் அங்கே போக வேண்டும்” என்று நான் யோசித்து பின்னால் போனபோது அவரோ அவசரமாக டெலிபோனைச் சுழற்றி சென்னையை STD இல் கூப்பிட்டு ‘கோயம்புத்தூர் விமானம் கிளம்பிவிட்டதா’ என்று கேட்டார். “இல்லை... இப்போதுதான் கதவைச் சாத்தப் போகிறோம்” என்று பதில் வந்ததும் அதை அங்கேயே சில நிமிடங்கள் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். “இங்கே பிரேக் அசெம்பிளி, வீல் ஜாக்குகள் முதலியவை தேவைப்படலாம். டயர் பர்ஸ்ட் ஆகியிருக்கிறது” என்று சொல்லிவிட்டு பிறகு விமானத்தைப் பார்க்க விரைந்தார்..திரும்பி வந்து என்ன ஸ்பேர் வேண்டும் என்று அவர் சொல்லி சென்னையிலிருந்து அவையும் வந்து சேர்ந்தது. வீல் சேஞ்ச் ஆன பிறகு இரண்டு விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிளம்பிச் சென்றன. அவர் இம்மாதிரி செயல்படாமல் இருந்திருந்தால் அங்கே விமானமும் கிளம்பி இருக்கும், இங்கே ரிப்பேர் ஆன விமானம் அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டி வந்திருக்கும். சென்னையில் ஸ்பேர் பார்ட்கள்தான் இருந்தனவே தவிர, ஸ்பேர் விமானங்கள் இருக்கவில்லை.கிருஷ்ணனுடைய இந்தச் செயல்பாடு எனக்குப் பிடித்திருந்ததால் நானாகவே அவரைப் பாராட்டி எங்கள் ஹவுஸ் மேகஸினுக்கு ஒரு செய்தியை டைப் அடித்து அனுப்பிவிட்டேன். அடுத்த இஷ்யூவில் அந்தச் செய்தி வந்ததைப் பார்த்து என் மேனேஜர் கொதித்துப் போய்விட்டார். யாரைக் கேட்டு இப்படிச் செய்தி அனுப்பினாய் என்றும் கடிந்து கொண்டார். “என்னடா இது... வம்பாய் போய்விட்டது, இதற்கெல்லாம் கூடவா மேனேஜர் பர்மிஷன் வாங்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இரண்டு வாரங்களில் ‘இமேஜ்’ என்ற எங்கள் பத்திரிக்கைக்கு கோவை கரஸ்பாண்டாக நியமித்து உத்தரவே வந்துவிட்டது.பத்திரிகை எங்கள் டெல்லி ஆபீஸில் பப்ளிக் ரிலேஷன்ஸ் துறையால் நடத்தப்பட்டது. என் செய்தி அவர்களுக்குப் பிடித்துப் போய்விடவே தன்னிச்சையாக அவர்களும் இதைச் செய்து விட்டார்கள். என் சீனியர்களுக்கும் இப்போது மேனேஜரையும் சேர்த்து என் மேல் கடுப்பு அதிகமாகிவிட்டது. இதுவரை கார்கோ செக்ஷன் என்று தனியாக இருந்திராத நிலையில் எப்போதோ வரும் சில காட்டன் மற்றும் ஹேண்ட்லூம் துணி பார்சல்களுக்காக ஒரு பிரிவை உருவாக்கி, அதில் கொண்டு என்னை போட்டு விட்டார்கள். பில்டிங் பேஸ்மெண்டில் இடம் ஒதுக்கி அங்கேயே எனக்கு புக்கிங் ஆபீஸ் செட் அப் செய்து கொடுத்து விட்டார்கள். என் சீனியர்களுக்கு என்னைப் பழிவாங்கிவிட்ட ஒரு குரூர திருப்தியும் கிடைத்துவிட்டது.அங்கு வரும் பார்சல்கள் காட்டன் வியாபாரிகள் சேம்பிள் அனுப்புவதும், கரூர், கோவை, ஹேண்ட்லூம் உற்பத்தியாளர்கள் சேம்பிள் அனுப்புவதும் மட்டும்தான் அவை பெங்களூர் வழியாக பம்பாய் செல்லும். மற்றபடி கொச்சிக்கும் சென்னைக்கும் பார்சல் வராது. மொத்தமாகவே 500 கிலோவுக்கு மேல் அனுப்ப முடியாத நிலை. விமானத்தில் அதற்கு மேல் இடமும் இருக்காது. ஆனால், பெங்களூரில் இருந்து பம்பாய் செல்லும் விமானங்கள் பெரியவை... அவற்றில் இரண்டு மூன்று டன்கள் அனுப்பலாம். ஒரு நாளைக்கு நான்கு விமானங்கள் அங்கிருந்து செல்லும். என்னுடன் ஹைதராபாத் ட்ரெயினிங் வந்திருந்த சிலர் பெங்களூர் கார்கோவில் பணியில் இருந்ததால் அவர்களுக்கு போன் செய்து, “இங்கிருந்து ரெண்டு மூன்று டன்கள் தினமும் அனுப்பினால் உங்களால் அங்கே ஏற்றிவிட முடியுமா” என்று கேட்டுக் கொண்டேன். கோவை, பெங்களூர், பம்பாய் விமான ரேட் அதிகம். அந்த ரேட்டில் புக் செய்து கொண்டு இங்கிருந்து பெங்களூர் வரை தினமும் ஒரு டிரக்கில் இரவோடிரவாக அங்கு அனுப்புவது என்றும் ஏற்பாடு செய்து கொண்டேன். “இப்படியெல்லாம் செய்ய முடியும்” என்று எனக்கு ட்ரெய்னிங்கில் ஏற்கெனவே கற்றுக் கொடுத்திருந்தார்கள். இதற்கெல்லாம் பர்மிஷன் மெட்ராஸில் இருக்கும் கார்கோ மேனேஜரிடம் இருந்து வாங்கி விட்டேன். கரூரிலிருந்து ஏற்றுமதி ஜவுளிகள் டன் கணக்கில் வர ஆரம்பித்தன. இப்படியே ஓர் இரண்டு மாதங்கள் ஓடியதும் திடீரென்று ஒரு நாள் என் மேனேஜர் என்னைக் கூப்பிட்டார். “திட்டப் போகிறாரோ” என்று கலவரத்துடன் சென்ற என்னை வாயெல்லாம் பல்லாக வரவேற்றார். கூட இருந்த சீனியர்கள் எனக்கு கைகுலுக்கினார்கள். “என்னடா இது புதுக்கதையாக இருக்கிறதே” என்று நான் குழப்பத்தில் நின்று விட்டேன்.(தொடரும்)
கொட்டும் மழையில் கொச்சி விமான நிலையத்தில் அந்த விமானத்தைத் தரை இறக்கிய கேப்டன் பகவத் ஒரு ஜென்டில்மேன். பயணிகள் எல்லோரும் பத்திரமாக வெளி வந்த பிறகு கடைசியாக வந்த அவர் அதிகாரிகளிடம் “ஐ அம் சாரி... இது என் தவறுதான்” என்றாராம். என் உத்தியோகமும் அப்போதே பிழைத்துக் கொண்டது.அந்த விமானத்தில் காற்றாடிகளை இறக்கியதும் வேகத்தை வெகுவாகக் குறைப்பதற்காக ஆங்கிள் மாற்றிச் சுற்ற வைப்பார்கள். அத்தோடு காரில் இருப்பது போல பிரேக்குகளையும் காலால் மிதித்து வேகத்தைக் குறைப்பார்கள். இதில் எது கோளாறு ஆனதோ தெரியாது... விமானம் ரன்வேயிலிருந்து விலகிப் போய் சைடில் பள்ளத்தில் போய் இறங்கி வாலைத் தூக்கிக் கொண்டு நின்றுவிட்டது. நல்ல வேளை. யாருக்கும் காயம்கூட இல்லை. வெறும் அதிர்ச்சி மட்டும்தான்..இதுபோன்ற இன்னொரு சம்பவமும் அங்கே நடந்தது. நான் வழக்கம் போல விமானம் இறங்குவதை வெளியே நின்று பார்த்துக் கொண்டிருக்கையில் கோவையில் இறங்கிய பெங்களூர் விமானம் சிறிது தாறுமாறாக ஓடி ரன்வே ஓரத்தில் வலது இறக்கையைத் தூக்கிக் கொண்டு நின்ற மாதிரி ஆகிவிடவே, கிராஷ் டெண்டர் வண்டி உடனே விரைந்தது. “வலது புற மெயின் வீல் டயர் வெடித்து விட்டது” என்று எங்கள் சீனியர்களும் அங்கே விரைந்தார்கள். என்னுடன் நின்று விமானம் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஜினீயர் கிருஷ்ணன் மட்டும் வித்தியாசமாக ஆபீசுக்கு உள்ளே ஓடினார். “அவர் தானே முதலில் அங்கே போக வேண்டும்” என்று நான் யோசித்து பின்னால் போனபோது அவரோ அவசரமாக டெலிபோனைச் சுழற்றி சென்னையை STD இல் கூப்பிட்டு ‘கோயம்புத்தூர் விமானம் கிளம்பிவிட்டதா’ என்று கேட்டார். “இல்லை... இப்போதுதான் கதவைச் சாத்தப் போகிறோம்” என்று பதில் வந்ததும் அதை அங்கேயே சில நிமிடங்கள் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். “இங்கே பிரேக் அசெம்பிளி, வீல் ஜாக்குகள் முதலியவை தேவைப்படலாம். டயர் பர்ஸ்ட் ஆகியிருக்கிறது” என்று சொல்லிவிட்டு பிறகு விமானத்தைப் பார்க்க விரைந்தார்..திரும்பி வந்து என்ன ஸ்பேர் வேண்டும் என்று அவர் சொல்லி சென்னையிலிருந்து அவையும் வந்து சேர்ந்தது. வீல் சேஞ்ச் ஆன பிறகு இரண்டு விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிளம்பிச் சென்றன. அவர் இம்மாதிரி செயல்படாமல் இருந்திருந்தால் அங்கே விமானமும் கிளம்பி இருக்கும், இங்கே ரிப்பேர் ஆன விமானம் அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டி வந்திருக்கும். சென்னையில் ஸ்பேர் பார்ட்கள்தான் இருந்தனவே தவிர, ஸ்பேர் விமானங்கள் இருக்கவில்லை.கிருஷ்ணனுடைய இந்தச் செயல்பாடு எனக்குப் பிடித்திருந்ததால் நானாகவே அவரைப் பாராட்டி எங்கள் ஹவுஸ் மேகஸினுக்கு ஒரு செய்தியை டைப் அடித்து அனுப்பிவிட்டேன். அடுத்த இஷ்யூவில் அந்தச் செய்தி வந்ததைப் பார்த்து என் மேனேஜர் கொதித்துப் போய்விட்டார். யாரைக் கேட்டு இப்படிச் செய்தி அனுப்பினாய் என்றும் கடிந்து கொண்டார். “என்னடா இது... வம்பாய் போய்விட்டது, இதற்கெல்லாம் கூடவா மேனேஜர் பர்மிஷன் வாங்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இரண்டு வாரங்களில் ‘இமேஜ்’ என்ற எங்கள் பத்திரிக்கைக்கு கோவை கரஸ்பாண்டாக நியமித்து உத்தரவே வந்துவிட்டது.பத்திரிகை எங்கள் டெல்லி ஆபீஸில் பப்ளிக் ரிலேஷன்ஸ் துறையால் நடத்தப்பட்டது. என் செய்தி அவர்களுக்குப் பிடித்துப் போய்விடவே தன்னிச்சையாக அவர்களும் இதைச் செய்து விட்டார்கள். என் சீனியர்களுக்கும் இப்போது மேனேஜரையும் சேர்த்து என் மேல் கடுப்பு அதிகமாகிவிட்டது. இதுவரை கார்கோ செக்ஷன் என்று தனியாக இருந்திராத நிலையில் எப்போதோ வரும் சில காட்டன் மற்றும் ஹேண்ட்லூம் துணி பார்சல்களுக்காக ஒரு பிரிவை உருவாக்கி, அதில் கொண்டு என்னை போட்டு விட்டார்கள். பில்டிங் பேஸ்மெண்டில் இடம் ஒதுக்கி அங்கேயே எனக்கு புக்கிங் ஆபீஸ் செட் அப் செய்து கொடுத்து விட்டார்கள். என் சீனியர்களுக்கு என்னைப் பழிவாங்கிவிட்ட ஒரு குரூர திருப்தியும் கிடைத்துவிட்டது.அங்கு வரும் பார்சல்கள் காட்டன் வியாபாரிகள் சேம்பிள் அனுப்புவதும், கரூர், கோவை, ஹேண்ட்லூம் உற்பத்தியாளர்கள் சேம்பிள் அனுப்புவதும் மட்டும்தான் அவை பெங்களூர் வழியாக பம்பாய் செல்லும். மற்றபடி கொச்சிக்கும் சென்னைக்கும் பார்சல் வராது. மொத்தமாகவே 500 கிலோவுக்கு மேல் அனுப்ப முடியாத நிலை. விமானத்தில் அதற்கு மேல் இடமும் இருக்காது. ஆனால், பெங்களூரில் இருந்து பம்பாய் செல்லும் விமானங்கள் பெரியவை... அவற்றில் இரண்டு மூன்று டன்கள் அனுப்பலாம். ஒரு நாளைக்கு நான்கு விமானங்கள் அங்கிருந்து செல்லும். என்னுடன் ஹைதராபாத் ட்ரெயினிங் வந்திருந்த சிலர் பெங்களூர் கார்கோவில் பணியில் இருந்ததால் அவர்களுக்கு போன் செய்து, “இங்கிருந்து ரெண்டு மூன்று டன்கள் தினமும் அனுப்பினால் உங்களால் அங்கே ஏற்றிவிட முடியுமா” என்று கேட்டுக் கொண்டேன். கோவை, பெங்களூர், பம்பாய் விமான ரேட் அதிகம். அந்த ரேட்டில் புக் செய்து கொண்டு இங்கிருந்து பெங்களூர் வரை தினமும் ஒரு டிரக்கில் இரவோடிரவாக அங்கு அனுப்புவது என்றும் ஏற்பாடு செய்து கொண்டேன். “இப்படியெல்லாம் செய்ய முடியும்” என்று எனக்கு ட்ரெய்னிங்கில் ஏற்கெனவே கற்றுக் கொடுத்திருந்தார்கள். இதற்கெல்லாம் பர்மிஷன் மெட்ராஸில் இருக்கும் கார்கோ மேனேஜரிடம் இருந்து வாங்கி விட்டேன். கரூரிலிருந்து ஏற்றுமதி ஜவுளிகள் டன் கணக்கில் வர ஆரம்பித்தன. இப்படியே ஓர் இரண்டு மாதங்கள் ஓடியதும் திடீரென்று ஒரு நாள் என் மேனேஜர் என்னைக் கூப்பிட்டார். “திட்டப் போகிறாரோ” என்று கலவரத்துடன் சென்ற என்னை வாயெல்லாம் பல்லாக வரவேற்றார். கூட இருந்த சீனியர்கள் எனக்கு கைகுலுக்கினார்கள். “என்னடா இது புதுக்கதையாக இருக்கிறதே” என்று நான் குழப்பத்தில் நின்று விட்டேன்.(தொடரும்)