மனதில் நின்ற மனிதர்கள் – 2.மகேஷ் குமார் . 'அவரையும் தொவரையும் ஒண்ணுன்னு சொல்றவனெல்லாம் எனக்கு புத்தி சொல்லவேண்டாம்'னு யாராவது கத்தறது எங்கியாவது உங்க காதுல விழுந்தா அது கண்டிப்பா 'சம்மு'தான். அந்த சமயத்துல மட்டும் அவங்கிட்டயே போயிடக்கூடாது. புஸ்ஸு புஸ்ஸுனு ஈயம் பூசறதுக்கு துருத்தி மாதிரி மூச்சுவிட்டுக்கிட்டு நிப்பான். உரக்கடை முதலாளி சிவசாமி அய்யா கூட அப்பிடியே ஒதுங்கிப் போயிடுவாரு. அப்பறம் நாம எல்லாம் எம்மாத்தரம்?.வாங்க "உமையாள் உரம் விதை டிப்போ"க்கு போவோம். விஜய், பாக்டம்பாஸ், ஸ்பிக் உர ஸ்டாக்கிஸ்டு. அத்தனை வகை தானிய விதைகளும் மூட்டைலயும் கிடைக்கும்; அரைக் கிலோ பாக்கெட்லயும் கிடைக்கும். தவிர எல்லா பூ, புல்லு, பூண்டு, கறிகாய் விதைகள் சின்னச் சின்ன பாக்கெட்ல கிடைக்கும். இந்தா வரான் பாருங்க. நீலக் கரை வேட்டியும் வெளுத்துப்போன நீல முழுக்கைச் சட்டையுமா. சட்டை பாக்கெட் மேல பாருங்க. "ஸ்பிக்" பேர் எம்ப்ராய்டரி பண்ணியிருக்கா? எப்பவோ 15 வருஷம் முன்னால ஸ்பிக் உரங்களுக்கு ஸ்டாக்கிஸ்ட் ஆனபோது கம்பெனிக்காரன் குடுத்த ரெண்டு சட்டையையும் அப்ப இருந்த ஒரே சீனியர் ஸ்டாஃப் சம்முவுக்குக் குடுத்தார் முதலாளி. அன்னிலேருந்து அதுதான் அவன் யூனிஃபார்ம்..அவனோட கட்டை குட்டையான தேகத்துக்கு அந்த ரெண்டு சைஸ் பெரிய சட்டையைப் போட்டு, அது மேல வேட்டியை மடிச்சுக் கட்டி இறுக்கியிருப்பான். அது என்ன தந்திரமோ அவனுக்கு மட்டும் மடிச்ச வேட்டி அவுரவே அவுராது. கார்த்தால கடைக்கு வரும்போதே மாரியம்மன் கோயிலுக்குப் போய் குங்குமம் எடுத்து தண்ணி தொட்டு பெருசா நெத்தில வெச்சு வெச்சு, அது இப்ப சுரண்டிக் குளிச்சாலும் போகாத ஒரு தழும்பாவே ஆயிடுச்சு. நெத்திலேர்ந்து மேல…மேல…மேல (பாத்து வழுக்கி விழுந்துராம) போனா பின்கழுத்துக்குக் கொஞ்சம் மேல கொஞ்சம் முடி பார்க்கலாம். தலைல இருந்ததெல்லாம் கண்ணுக்கு மேல விழுந்த மாதிரி புருவம் ரெண்டும் அடர்த்தியா அவனுக்கு ஒரு முரட்டு லுக் குடுக்கும். வேய் வேய்னு வரதைப் பார்த்தா அவன் நடந்து வரானா நகர்ந்து வரானான்னு சந்தேகமாவே இருக்கும். ஆனா ஆள் பொதுவா நல்லவந்தான். அதிகமா பேசுவான். அவ்வளவுதான்..விதை, உரம், பூச்சி மருந்து எல்லாம் லாரியில இருந்து இறக்கறது முதல், குடோன்ல அடுக்கறது, ஸ்டாக் பாக்கற கணக்குப்புள்ளைக்கு ஒத்தாசை, கடைல முன்னால நின்னு கஸ்டமர்ககிட்ட கேக்கறது, அட்வைஸ் குடுக்கறது, சரக்கு எடுத்து கட்டி வண்டில ஏத்தி அனுப்பற வரைக்கும் பம்பரமா சுத்துவான்.."என்னங்கய்யா… இந்த வட்டமும் மக்காச்சோளந்தானே? நேத்துதான் புது ஸ்டாக் வந்துச்சு. அய்யாவுக்குன்னு மூட்டை எடுத்து குறி போட்டு வெச்சுட்டேன். எப்பன்னு சொன்னா கொண்டாந்து போடச் சொல்றேன்" என்பான் சக்கம்பாளையம் கவுண்டரிடம். அவரும் சிரித்து விட்டு அரைமணி நேரம் பேசிவிட்டு கடைக்காசில் டீயும் குடித்துவிட்டு கால் கிலோ கத்தரி விதை வாங்கிக்கொண்டு போவார்.."வாங்க நாயக்கரே. ஆடிப்பெருக்கு வருது. வீட்டுத் தோட்டத்துல தக்காளி, வெண்டை, கத்திரி எல்லாம் போடுங்க. முதலாளி பஞ்சாப்ல இருந்து பூச்செடி விதைக புதுசா கொண்டாந்துருக்காரு. விலை கொஞ்சம் அதிகந்தான். ஆனா புவ்வு ஒண்ணொண்ணும் தட்டு தட்டா இருக்கும். டேலியா, கேந்தி, அடுக்கு…"."அடப் போப்பா…போனவாட்டி போட்டதே ஒண்ணும் முளைக்கல. ஒருலாரி தண்ணி விட்டதுதான் மிச்சம்…"."நாயக்கரே…. நீங்க நான் சொன்ன மாதிரி செம்மண்ணும் அடிக்கல… எருவும் கொட்டல. இன்னிக்கே நான் ஆள அனுப்பறன்… அப்பறம் பாருங்க" என்று 4 பாக்கெட் விதை, மண் வண்டி, எரு என்று நாயக்கர் பர்சை இளைக்க வைத்து அனுப்புவான். முதலாளியோ இதெல்லாம் காதிலேயே விழாத மாதிரி ஏதோ ஸ்டாக் சரிபார்த்தபடி இருப்பார்.."நம்ம LICகாரர் வந்துருக்காரு… ஒருத்தனாவது பாக்கறானா? அய்யா… என்ன வேணும் உங்களுக்கு?"."அவரை போட்டு மச்சுல ஏத்தி விட்டுட்டேன். பூ பூக்குது. ஆனா இந்த வட்டமும் ஒரே அந்துப்பூச்சி. காய் புடிக்குமானு தெரியல. போன வட்டம் ஏதோ ஜீஎக்ஸ்10ன்னு மருந்து குடுத்த. ஒண்ணும் செரியாப் போகலையே…"."அப்பிடியா? நம்ம கடைல குடுத்திருக்க மாட்டங்களே. நாம எப்பவும் சீஎஸ்40 இல்ல தருவோம்? அந்துப்பூச்சிக்கு அதுதானே… டேய்… தம்பி… அய்யாவுக்கு அரைக் கிலோ பேக்கிட் எடுத்தா.. போ" என்று பொடியனை விரட்டிவிட்டு, முதலாளியைப் பார்த்து "பாருங்க யாரோ சொன்னாங்கன்னு சீஎஸ்10… எவனோ அய்யா தலைல கட்டிட்டான். நம்ம சீஎஸ்40 போட்டிருந்தா அந்துப்பூச்சி என்ன? ஆனைக்குட்டி கூட வராது. இல்லைங்களா?" என்பான். அவரும் பொதுவாகத் தலையாட்டி லேசாகச் சிரிப்பார்.."இதையும்… இந்தா… இவ்வளவு (கட்டைவிரலை மடக்கி நாலு விரைலக்காட்டியபடி) நல்ல மஞ்சப்பொடியும் கலந்து தெளிச்சு விடுங்க. நானே வந்து அவரை பறிச்சுக் குடுக்கறேன். அய்யா.. அரைக்கிலோ GX-40 பில் போடுங்க" என்பான்..LICக்கு அது ரெண்டுமே கெமேக்ஸின் அப்படிங்கற சாதாரண எறும்பு மருந்துதான்கறது தெரியப்போவதில்லை. என்ன.. விலை மட்டும்தான் "கொஞ்சம்" கூட இருக்கும்..பென்தியான், பாரதியான், மாலதியான், DDT என்று ஏதேதோ பேரெல்லாம் சொல்வான். தவறாமல் காலை ரேடியோவில் மாநிலச் செய்தி முடிந்ததும் கோவை மாவட்ட வேளாண் இயக்குனர் சொல்லும் தென்னைமர வெட்டு நோய், சோளத்திற்கு வர புழு, பருத்திக்கு வர சோகை, நிலக்கடலைக்கு வேர்ப்புழு, புகையிலைக்கு வர சுருள் நோய் எல்லாம் கேட்டு வெச்சுக்குவான். மதியம் சாப்பாட்டு வேளையில் நடுவே நடுவே எல்லாம் அள்ளிவிட்டு ஸ்பிக் சேர்மெனும், விஜய் சேர்மனும் "இதுக்கு என்ன செய்யலாம் மிஸ்டர்.ஷம்மு?" அப்பிடின்னு கேட்டதாக்கூடச் சொல்வான். ரொம்ப ஆர்வமா "அதுக்கு நீ என்ன சொன்ன சம்மு?" அப்பிடின்னு கேக்கறவனுக்கு சாயங்காலம் ஸ்டிராங் டீயோட கீரைவடையோ முட்டை போண்டாவோ கண்டிப்பாக் கிடைக்கும்..காலி உரப்பைகளை தினமும் சரியா எண்ணி குடோனில் ஒரு ஓரத்தில் வெச்சு சிகரெட் அட்டையில் குறிச்சுவெச்சு, மாசக் கடைசில முதலாளியிடம் 'ஒரு வார்த்தை' சொல்லிட்டு பழைய சாக்குக் கடையில் வித்துட்டு, கிடைச்ச பணத்தை கடை வேலையாள் எல்லார் கூடயும் பங்கு போட்டுக்குவான். கூடவே மாரியம்மனுக்கும் ஒரு பங்கு போட்டு, ஊர் உலகத்துல நல்ல மழை பெஞ்சு விவசாயம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு தவறாம கொடி மரத்துக்கு உப்பும் மிளகும் கொட்டிருவான்.."என்ன சம்மு… இப்பிடியே எத்தன வருசம் ஓட்டப்போற? ஒனக்குன்னு ஒரு வீடு காடு வேண்டாமா? மொதலாளியும் செவுரியமாப் போச்சுன்னு சேர்ல துண்டு போட்டு நல்லா சாஞ்சு உக்காந்திருக்காரு… ம்ம்ம்?".மூட்டை தூக்கற ஆறுச்சாமி வாய் சும்மா இருக்காம நேரம் காலம் தெரியாமல் கேட்டுப்புட்டான்.."'அவரையும் தொவரையும் ஒண்ணுன்னு சொல்றவனெல்லாம்…."..அய்ய… வாங்க நாம ஓடிப்போயிடலாம்..(தொடரும்).ஓவியம்: ராஜன்
மனதில் நின்ற மனிதர்கள் – 2.மகேஷ் குமார் . 'அவரையும் தொவரையும் ஒண்ணுன்னு சொல்றவனெல்லாம் எனக்கு புத்தி சொல்லவேண்டாம்'னு யாராவது கத்தறது எங்கியாவது உங்க காதுல விழுந்தா அது கண்டிப்பா 'சம்மு'தான். அந்த சமயத்துல மட்டும் அவங்கிட்டயே போயிடக்கூடாது. புஸ்ஸு புஸ்ஸுனு ஈயம் பூசறதுக்கு துருத்தி மாதிரி மூச்சுவிட்டுக்கிட்டு நிப்பான். உரக்கடை முதலாளி சிவசாமி அய்யா கூட அப்பிடியே ஒதுங்கிப் போயிடுவாரு. அப்பறம் நாம எல்லாம் எம்மாத்தரம்?.வாங்க "உமையாள் உரம் விதை டிப்போ"க்கு போவோம். விஜய், பாக்டம்பாஸ், ஸ்பிக் உர ஸ்டாக்கிஸ்டு. அத்தனை வகை தானிய விதைகளும் மூட்டைலயும் கிடைக்கும்; அரைக் கிலோ பாக்கெட்லயும் கிடைக்கும். தவிர எல்லா பூ, புல்லு, பூண்டு, கறிகாய் விதைகள் சின்னச் சின்ன பாக்கெட்ல கிடைக்கும். இந்தா வரான் பாருங்க. நீலக் கரை வேட்டியும் வெளுத்துப்போன நீல முழுக்கைச் சட்டையுமா. சட்டை பாக்கெட் மேல பாருங்க. "ஸ்பிக்" பேர் எம்ப்ராய்டரி பண்ணியிருக்கா? எப்பவோ 15 வருஷம் முன்னால ஸ்பிக் உரங்களுக்கு ஸ்டாக்கிஸ்ட் ஆனபோது கம்பெனிக்காரன் குடுத்த ரெண்டு சட்டையையும் அப்ப இருந்த ஒரே சீனியர் ஸ்டாஃப் சம்முவுக்குக் குடுத்தார் முதலாளி. அன்னிலேருந்து அதுதான் அவன் யூனிஃபார்ம்..அவனோட கட்டை குட்டையான தேகத்துக்கு அந்த ரெண்டு சைஸ் பெரிய சட்டையைப் போட்டு, அது மேல வேட்டியை மடிச்சுக் கட்டி இறுக்கியிருப்பான். அது என்ன தந்திரமோ அவனுக்கு மட்டும் மடிச்ச வேட்டி அவுரவே அவுராது. கார்த்தால கடைக்கு வரும்போதே மாரியம்மன் கோயிலுக்குப் போய் குங்குமம் எடுத்து தண்ணி தொட்டு பெருசா நெத்தில வெச்சு வெச்சு, அது இப்ப சுரண்டிக் குளிச்சாலும் போகாத ஒரு தழும்பாவே ஆயிடுச்சு. நெத்திலேர்ந்து மேல…மேல…மேல (பாத்து வழுக்கி விழுந்துராம) போனா பின்கழுத்துக்குக் கொஞ்சம் மேல கொஞ்சம் முடி பார்க்கலாம். தலைல இருந்ததெல்லாம் கண்ணுக்கு மேல விழுந்த மாதிரி புருவம் ரெண்டும் அடர்த்தியா அவனுக்கு ஒரு முரட்டு லுக் குடுக்கும். வேய் வேய்னு வரதைப் பார்த்தா அவன் நடந்து வரானா நகர்ந்து வரானான்னு சந்தேகமாவே இருக்கும். ஆனா ஆள் பொதுவா நல்லவந்தான். அதிகமா பேசுவான். அவ்வளவுதான்..விதை, உரம், பூச்சி மருந்து எல்லாம் லாரியில இருந்து இறக்கறது முதல், குடோன்ல அடுக்கறது, ஸ்டாக் பாக்கற கணக்குப்புள்ளைக்கு ஒத்தாசை, கடைல முன்னால நின்னு கஸ்டமர்ககிட்ட கேக்கறது, அட்வைஸ் குடுக்கறது, சரக்கு எடுத்து கட்டி வண்டில ஏத்தி அனுப்பற வரைக்கும் பம்பரமா சுத்துவான்.."என்னங்கய்யா… இந்த வட்டமும் மக்காச்சோளந்தானே? நேத்துதான் புது ஸ்டாக் வந்துச்சு. அய்யாவுக்குன்னு மூட்டை எடுத்து குறி போட்டு வெச்சுட்டேன். எப்பன்னு சொன்னா கொண்டாந்து போடச் சொல்றேன்" என்பான் சக்கம்பாளையம் கவுண்டரிடம். அவரும் சிரித்து விட்டு அரைமணி நேரம் பேசிவிட்டு கடைக்காசில் டீயும் குடித்துவிட்டு கால் கிலோ கத்தரி விதை வாங்கிக்கொண்டு போவார்.."வாங்க நாயக்கரே. ஆடிப்பெருக்கு வருது. வீட்டுத் தோட்டத்துல தக்காளி, வெண்டை, கத்திரி எல்லாம் போடுங்க. முதலாளி பஞ்சாப்ல இருந்து பூச்செடி விதைக புதுசா கொண்டாந்துருக்காரு. விலை கொஞ்சம் அதிகந்தான். ஆனா புவ்வு ஒண்ணொண்ணும் தட்டு தட்டா இருக்கும். டேலியா, கேந்தி, அடுக்கு…"."அடப் போப்பா…போனவாட்டி போட்டதே ஒண்ணும் முளைக்கல. ஒருலாரி தண்ணி விட்டதுதான் மிச்சம்…"."நாயக்கரே…. நீங்க நான் சொன்ன மாதிரி செம்மண்ணும் அடிக்கல… எருவும் கொட்டல. இன்னிக்கே நான் ஆள அனுப்பறன்… அப்பறம் பாருங்க" என்று 4 பாக்கெட் விதை, மண் வண்டி, எரு என்று நாயக்கர் பர்சை இளைக்க வைத்து அனுப்புவான். முதலாளியோ இதெல்லாம் காதிலேயே விழாத மாதிரி ஏதோ ஸ்டாக் சரிபார்த்தபடி இருப்பார்.."நம்ம LICகாரர் வந்துருக்காரு… ஒருத்தனாவது பாக்கறானா? அய்யா… என்ன வேணும் உங்களுக்கு?"."அவரை போட்டு மச்சுல ஏத்தி விட்டுட்டேன். பூ பூக்குது. ஆனா இந்த வட்டமும் ஒரே அந்துப்பூச்சி. காய் புடிக்குமானு தெரியல. போன வட்டம் ஏதோ ஜீஎக்ஸ்10ன்னு மருந்து குடுத்த. ஒண்ணும் செரியாப் போகலையே…"."அப்பிடியா? நம்ம கடைல குடுத்திருக்க மாட்டங்களே. நாம எப்பவும் சீஎஸ்40 இல்ல தருவோம்? அந்துப்பூச்சிக்கு அதுதானே… டேய்… தம்பி… அய்யாவுக்கு அரைக் கிலோ பேக்கிட் எடுத்தா.. போ" என்று பொடியனை விரட்டிவிட்டு, முதலாளியைப் பார்த்து "பாருங்க யாரோ சொன்னாங்கன்னு சீஎஸ்10… எவனோ அய்யா தலைல கட்டிட்டான். நம்ம சீஎஸ்40 போட்டிருந்தா அந்துப்பூச்சி என்ன? ஆனைக்குட்டி கூட வராது. இல்லைங்களா?" என்பான். அவரும் பொதுவாகத் தலையாட்டி லேசாகச் சிரிப்பார்.."இதையும்… இந்தா… இவ்வளவு (கட்டைவிரலை மடக்கி நாலு விரைலக்காட்டியபடி) நல்ல மஞ்சப்பொடியும் கலந்து தெளிச்சு விடுங்க. நானே வந்து அவரை பறிச்சுக் குடுக்கறேன். அய்யா.. அரைக்கிலோ GX-40 பில் போடுங்க" என்பான்..LICக்கு அது ரெண்டுமே கெமேக்ஸின் அப்படிங்கற சாதாரண எறும்பு மருந்துதான்கறது தெரியப்போவதில்லை. என்ன.. விலை மட்டும்தான் "கொஞ்சம்" கூட இருக்கும்..பென்தியான், பாரதியான், மாலதியான், DDT என்று ஏதேதோ பேரெல்லாம் சொல்வான். தவறாமல் காலை ரேடியோவில் மாநிலச் செய்தி முடிந்ததும் கோவை மாவட்ட வேளாண் இயக்குனர் சொல்லும் தென்னைமர வெட்டு நோய், சோளத்திற்கு வர புழு, பருத்திக்கு வர சோகை, நிலக்கடலைக்கு வேர்ப்புழு, புகையிலைக்கு வர சுருள் நோய் எல்லாம் கேட்டு வெச்சுக்குவான். மதியம் சாப்பாட்டு வேளையில் நடுவே நடுவே எல்லாம் அள்ளிவிட்டு ஸ்பிக் சேர்மெனும், விஜய் சேர்மனும் "இதுக்கு என்ன செய்யலாம் மிஸ்டர்.ஷம்மு?" அப்பிடின்னு கேட்டதாக்கூடச் சொல்வான். ரொம்ப ஆர்வமா "அதுக்கு நீ என்ன சொன்ன சம்மு?" அப்பிடின்னு கேக்கறவனுக்கு சாயங்காலம் ஸ்டிராங் டீயோட கீரைவடையோ முட்டை போண்டாவோ கண்டிப்பாக் கிடைக்கும்..காலி உரப்பைகளை தினமும் சரியா எண்ணி குடோனில் ஒரு ஓரத்தில் வெச்சு சிகரெட் அட்டையில் குறிச்சுவெச்சு, மாசக் கடைசில முதலாளியிடம் 'ஒரு வார்த்தை' சொல்லிட்டு பழைய சாக்குக் கடையில் வித்துட்டு, கிடைச்ச பணத்தை கடை வேலையாள் எல்லார் கூடயும் பங்கு போட்டுக்குவான். கூடவே மாரியம்மனுக்கும் ஒரு பங்கு போட்டு, ஊர் உலகத்துல நல்ல மழை பெஞ்சு விவசாயம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு தவறாம கொடி மரத்துக்கு உப்பும் மிளகும் கொட்டிருவான்.."என்ன சம்மு… இப்பிடியே எத்தன வருசம் ஓட்டப்போற? ஒனக்குன்னு ஒரு வீடு காடு வேண்டாமா? மொதலாளியும் செவுரியமாப் போச்சுன்னு சேர்ல துண்டு போட்டு நல்லா சாஞ்சு உக்காந்திருக்காரு… ம்ம்ம்?".மூட்டை தூக்கற ஆறுச்சாமி வாய் சும்மா இருக்காம நேரம் காலம் தெரியாமல் கேட்டுப்புட்டான்.."'அவரையும் தொவரையும் ஒண்ணுன்னு சொல்றவனெல்லாம்…."..அய்ய… வாங்க நாம ஓடிப்போயிடலாம்..(தொடரும்).ஓவியம்: ராஜன்