
எப்பல்லாம் சார் உங்க மனைவிக்கு தலைவலி வருது?
எங்க வீட்டுக்கு என்னோட அம்மா வரும்போது!
**********************************
உன் கணவர் காணாமப் போனதுக்கு ஏண்டி உன் போட்டோவை போட்டு காணவில்லைன்னு விளம்பரம் செஞ்சிருக்கே?
நான் காணாமல் போனது தெரிஞ்சா என் கணவர் உடனே வீட்டுக்கு திரும்பி வந்துடுவார்!
**********************************
என்னோட டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் நார்மல்னு என்னோட ஃபோன்ல மெசேஜ் வந்திருக்கு டாக்டர்!
அப்போ நான் சொன்ன லேப்ல டெஸ்ட் பண்ணலையா?
**********************************
மாமியார் வந்தா ஏன் கண்ணாடி போட்டுக்கறே மாலா?
தலைவலி வந்தா கண்ணாடி போட்டுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார்!
**********************************
புலவர் ஒருவேளை சோத்துக்கே கஷ்டப்படறார் அமைச்சரே!
"பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது" என்று சொல்வார்களே மன்னா!
**********************************
தலைவர் பேசப்போற மீட்டிங்க்கு எதுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கிறார்?
மைதானத்துல தனியா இருந்தா தலைவருக்கு பயம் பிடிச்சுக்குமாம்!
**********************************
போருக்குப் போகும் எனக்காக நீங்க ஒரு காரியம் செய்ய வேண்டும் அமைச்சரே!
போர் முடிந்ததும் தானே உங்க "காரியம் " செய்வாங்க மன்னா?
**********************************
அந்தக் கல்யாணத்துல கலந்துக்க வந்தவங்க 108 ரூபாய் மொய் எழுதறாங்களே?
அது ஆம்புலன்ஸ் டிரைவர் பொண்ணு கல்யாணமாம்!