கவிதை; கரையும் நேரம்!

Kavithai: Karaiyum Neram!
time management
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

கைக் கடிகாரமும்...

சுவர்க் கடிகாரமும்...

விநாடிகளை நிமிடங்களாக்கி...

நிமிடங்களை மணிகளாக்கி...

வாழ்நாளைச் சுருக்குவதில்

வருத்தமின்றிச் செயலாற்றுகின்றன!

தினசரி நாட்காட்டி...

ஒவ்வொரு நாளையும் உதிர்த்து...

தானும் மெலிதாகி...

நம் வாழ்வையும் குறைவாக்கி

சுவரிலிருந்தபடியே

எச்சரிக்கிறது தினமும்!

மாத நாட்காட்டியோ...

முப்பது...முப்பத்தொரு நாட்களை

ஒட்டு மொத்தமாய்...

ஒவ்வொரு சமயமும்...

நம் கண்ணில் காட்டி...

அபாயத்தை அறிவிக்கிறது!

மேஜையில் உள்ள 

பஞ்சாங்கப் புத்தகமோ...

ஆண்டு ஒன்று அகல்வதை...

விரிவாய்... விளக்கமாய்...

நமக்கு அறிவுறுத்தி...

அமைதி காக்கிறது!

வ்வொன்றும் நமது வாழ்நாள்...

கொஞ்சங் கொஞ்சமாய்

குறைந்து வருவதை

சூசகமாய் நமக்கு 

அறிவிப்பு செய்யும்

சாதனங்கள்... அறிக!

வைகளைப் பார்க்கையில்...

நேரம் நமக்கு 

நெருங்கிக்கொண்டிருப்பதை...

உணர்ந்தே நாமும்...

உறுதிகொண்டே

உழைத்திட வேணும்!

வ்வொரு விநாடியும்

உயர்வென்று உணர்த்தும்...

கடிகாரம்...தினசரி நாட்காட்டி...

மாத நாட்காட்டி...பஞ்சாங்கம்...

அத்தனையும் வாழ்வைச் செப்பனிடும்

வழிகாட்டிகள்! உணரவேண்டும்!

logo
Kalki Online
kalkionline.com