பகுதி - 4இலக்கியத் தம்பதி.‘தலையோலப் பறம்பு’ – இயற்கை அழகுமிகு கேரளக் கிராமத்தில் அப்துர் ரஹ்மான் – குஞ்ஞாச்சம்மா தம்பதியின் பிள்ளைகளில் ஒருவன். தன் உடன் பிறந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல; மற்ற குழந்தை களிடமிருந்தெல்லாம் வித்தியாசமான பிள்ளை. மற்ற குழந்தைகளைக் கவரும் துருதுருச் செயல்பாடு.தலையோலப் பறம்பு மத வேறுபாடில்லா மக்களைக் கொண்டது. பள்ளியில் படிக்கும்போது சுதந்திரப் போராட்டக் காலம் என்பதால் அவனையும் அறியாது அதிலொரு ஈடுபாடு. அந்த வயதிலேயே அவனொரு காந்தியவாதி. தன்னுடைய ஊருக்கு வந்த காந்தியின் காலை சிறு வயதில் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தவன். வைக்கம் வந்த காந்தியின் வலது தோள்பட்டையை தன்னுடைய பள்ளிப் பருவத்தில் தொட்டுப் பார்த்ததோடு மட்டுமல்ல அவர் பேச்சினால் ஈர்க்கப்பட்டு காந்தி தண்டி யாத்திரை புறப்படுகிற வேளையில் கேரளக் கடற் கரையில் உப்பு காய்ச்சுவதற்காக இவனும் சிலரோடு புறப்பட, தங்கியிருந்த இடத்திலிருந்து படியிறங்கவும் முதுகில் போலீசாரின் அடி இடியென இறங்கியது. காவல் நிலையத்தில் குனிய வைத்து காவலரால் முதுகில் குத்தியதில் 27 வரை மட்டுமே எண்ணும் திராணி இருந்தது. சின்ன வயதில் சிறை. காந்தி – இர்வின் உடன் படிக்கைக்குப் பின் விடுதலையான 600 பேரில் ஒருவராக வெளிவந்தான் சிறுவன்.வெளி வந்த வேகத்தில் அவன் தேடிப்பிடித்தது பிச்சுவா கத்தியொன்று. முதுகில் குத்திய காவலரை (எண் 270) தேடி வெறியோடு கிளம்புகிறான். ‘ஒரு சத்தியாக்கிரகியைப் பழி வாங்கும் எண்ணம் தீண்டக்கூடாது’ என்றும் ‘அடிவாங்கிப் பல் இழந்த காந்திஜியின் கதை தெரியாதா?’ என்றும் அச்சுதன் என்ற நண்பன் கூற, மனம்மாறி காவல் துறையினர் ஏற்படுத்திய காயங்களோடு, பெற்றோர் முன்பு நிற்க விரும்பாது சுதந்திர தாகமும் வேகமும் கொண்ட சில நண்பர்கள் வானர (குரங்கு) சேனா என்ற அமைப்பை உருவாக்க, அதில் இணைகிறான். பிச்சுவா கைவிட்டு போனாலும் விரல் பிடித்த பேனாவின் உக்கிரம் பிரபா என்ற பெயரில் ‘உஜ்ஜீவனம்’ பத்திரிகையில் கட்டுரைகளாக வெளிவர, தேசாந்திரியாய் புறப் படுகிறான். அதிகபட்சம் அவனுக்கோ அகவை 18.கண்ணூர், குடகு, பெங்களூரு, மைசூர், ஹைதராபாத், பூனே, பம்பாய், ஆப்கானிஸ்தான், கோவா, கோலாப்பூர், லாகூர், கராச்சி, தில்லி, காசி, அஜ்மூர், புத்த கயா, ஹிமாச்சல், காஷ்மீர், ராவல்பிண்டி, பெஷாவர், கல்கத்தா இவையெல்லாம் அவனுடைய தேசாந்திரப் பயணத்தில் பார்த்து, தங்கி, பழகி, வாழ்ந்த இடங்கள்..எவரையும் கண்ட மாத்திரத்தில் கவர்ந்துவிடும் சுபாவம். ஆரம்பத்தில் அவனுடைய கைரேகை மற்றும் முகலட்சண ஜோசியம் அவனுக்குச் சாப்பாடு போட்டது. வைத்தியசாலை, கப்பல், பத்திரிகை அச்சகம் ஆகியவை அவன் வேலை செய்த இடங்கள். பாலைவன வெப்பத் திலிருந்து காப்பாற்றிய நிர்வாணச் சாமியார்களுடன் 3 ஆண்டு பழக்கம். சூஃபி துறவிகளுடனான தியான அனுபவம், கை நிறை காசில்லை. ஆனால், கையில் காசு. உழைக்காததை விரும்பாத உயர்ந்த குணம்.எந்த வேலையிலும் அவன் விடாததொன்று வாசிப்பே. வாசிப்பில் அவன் முன்னேறிச் செல்லத் தூண்டுகோளாக அவன் விரும்பிய பல புத்தகங்கள் கொடுத்துதவியது பம்பாய் (மும்பை) நகரம். பிரபலமான எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அவனைக் கவர்ந்தன. வாசிப்பிற்குப் பின்பு கதையின் கனவில் மிதப்பதில் அவனுக்கு ஒரு சுகம். இந்த வாசிப்பும் கற்பனா சக்தியும்தான் அவனை வழி நடத்தப் போகிறது என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.அவனின் தேசாந்திர உலாவில் சமுதாயத்தின் உதிரி மனிதர்களான சூதாட்டக்காரர்கள், திருடர்கள், பிக்பாக்கெட்காரர்கள், விபச்சாரிகள், ஒடுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட, விலக்கப்பட்ட, மறுக்கப்பட்டவர்கள் மீது அவன் பார்வை மட்டுமல்ல; அவன் மனமும் கனிவான பார்வைகொண்டிருந்தது.எவ்வித நோக்கமும் இல்லாது புறப்பட்ட பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு, எண்ணற்ற அனுபவங்களைச் சுமந்தவனாக, 1936ல் வெறுங்கையும் வீசிய கையுமாய் தலையோலப் பறம்பு திரும்பியவன்தான் வைக்கம் முகம்மது பஷீர்.பணம் இல்லாவிட்டால் என்ன, மகன் திரும்பி வந்ததே போதும் என்று வாப்பாவும் உம்மாவும் சந்தோஷப்பட்டனர்..ஊர் திரும்பியவரின் உள்ளங்கை அரிக்கவே ராஜ்ய அபிமானி, தீபம், பவுர நாகம், பிரகாசம் போன்ற பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். திருவாங்கூர் மன்னர் ஆட்சியைப் பற்றி ‘பாக்கியம் கெட்ட என் நாடு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று தீபம் இதழில் வெளிவர, இதழ் பறிக்கப்பட்டதோடு தேச துரோக வழக்கொன்று பஷீர் மீது பதிவானது.அதே நேரத்தில் கல்லூரி ஒன்றில் முகம்மது பஷீர் என்ற மாணவன் தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்க, காவல் துறையினர் அவனைப் பின் தொடர, பெயர் குழப்பத்தைப் போக்க ‘வைக்கம் முகம்மது பஷீர்’ என மாற்றியதோடு வைக்கம் சரணடைந்தார். 1942 – 43 இரண்டு ஆண்டுகள் திருவனந்தபுரம் சிறையில் சாப்பாடு. காவல் துறையிலும் அவரின் வாசகர்கள் இருப்பதை அவரால் உணர முடிந்தது. சமுதாயத்தில் எழுத்துக்கான ஆளுமையைக் காண முடிந்தது.விடுதலையான பின்பு மங்களோதயம், ஜயகேரளம் ஆகிய பத்திரிகைகளின் தொடர்பும் ஆரம்பித்த புத்தகக் கடையும் எழுத்து வளர்ச்சிக்கு வழிவகுத்தன. அரசியல் ஈடுபாடுகளைத் தவிர்க்க எழுத்தில் முழுக் கவனமும் திரும்பியது.சிறுகதை, நாவல், தொடர்கதைகள், திரைக்கதை, வசனம், நாடகம், உரைநடைக் கவிதைகள் என பலவும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தன. இவையெல்லாம் கைகொடுத்ததற்குக் காரணம் அவருடைய முதல் சிறுகதையான ‘என்டே தங்கம்’ என்ற கதைதான். ஜெயகேசரியில் வெளிவந்தது.தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டவரைத் தேடி வந்ததோ தேசிய விருதுகள் நான்கு; மாநில விருது ஒன்று.கண்டிப்பு மிகுந்த வாப்பா பாசம் மிகுந்த உம்மா இருவரின் வளர்ப்பினால் குடும்ப உறவை மறவாத பஷீர், பாத்திமா பீவியை பெண் பார்க்கின்றபோது அவர் பெண்ணிடம் கேட்ட முதல் கேள்வி “வயது வித்தியாசத்தில் ஏதாவது பிரச்னையா?” என்பதுதான்.கோயக்குட்டி மாஸ்டர், கதீஜா தம்பதியின் 7 பிள்ளைகளில் மூத்தவரான பாத்திமா பீவி ஆசிரியராகப் பணியிலி ருந்தவர். பஷீரின் எழுத்துக்களில் பரிச்சயமும் விருப்பமும் இருந்ததால் முழுமனதோடு அவரை ஏற்றுக்கொள்ள, கரம் பற்றினார் வைக்கம்.பாத்திமா பீவியை முதல் நாளே பேபி என்று பஷீர் அழைக்க, பாத்திமா பீவி பேபி பஷீரானார்.பேபி பஷீர் கணவரின் இலக்கிய விவாதத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் அவரைத் தேடி வருகிற அத்துனை பேர்களையும் அன்போடு உபசரித்தது கி.ரா.வின் மனைவி கணவதியை நினைவுபடுத்துவதாக உள்ளது. மகன் அனீஷ் ஒரு பொறியாளர். மகள் ஷாஹீனா. குடும்பத்தில் அவரின் துயரத்தை அதிகப்படுத்திய நிகழ்வு அவருடைய மருமகன் இறப்புதான்.‘மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரின் அன்புக்குரியவர் என்று தன்னைப் பற்றி எழுதுகிறார் பேபி பஷீர். ஆணவமே இல்லாத ஒரு ஆண் மகன் அவர். அவருக்கு மனைவி என்பதில் எனக்குப் பெருமை’ என்று குறிப்பிடுகிறார்..‘நானும் எழுதட்டுமா?’ என்று பேபி பஷீர் கேட்டபோது, “மலையாளிகளின் ஒரு தலைமுறையின் மனச்சோர்வு, பேரினவாதம் மற்றும் காதல் ஆகியவற்றின் கலவையுடன் எடி நீங்கள் எழுதும் இலக்கிய கலைமணி நிரப்பப்பட்ட ஒரு குடுவையை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதைப் பருகுகிறேன்” என்று சொன்னதாக பேபி பஷீர் குறிப்பிடுகிறார். அவர் எழுதிய நூலான ‘பஷிரண்டே எடியே’ என்பதின் மூலம் மலையாள இலக்கியத்திற்கான பஷீரின் படைப்பில் ஒரு திலகமிட்டது போல் அமைகிறது.முறைப்பெண் பெண்கொடியை உம்மா பெண் கேட்டு சென்றபோது பஷீர் வசதியில்லாதவர் என்ற காரணத்தால் பெண் கொடுக்கவில்லை என்ற சம்பவம் அவருடைய ஆழ்மனதில் ஒரு சோகம் என்று தெரிகிறது.வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அதன் வரவிலேயே இயல்பாக வரவேற்பதுதான் பஷீரின் குணம். அவருடைய எழுத்துக்கான உபகரணங்கள் ‘ஈஸிச்சேர், துண்டு பீடி, கிராமபோன், கட்டஞ்சாயா’ என்பதாகும்.1994ல் வைக்கம் முகம்மது பஷீரும் 2015ல் பேபி பஷீரும் இலக்கியத் தம்பதிகளாக மறைந்தாலும் இருவருமே இலக்கிய வட்டத்தில் ஒன்றாய் சுற்றிக் கொண்டிருப்பதே அவர்கள் வாழ்ந்த வாழ்வின் சிறப்பாகும்.
பகுதி - 4இலக்கியத் தம்பதி.‘தலையோலப் பறம்பு’ – இயற்கை அழகுமிகு கேரளக் கிராமத்தில் அப்துர் ரஹ்மான் – குஞ்ஞாச்சம்மா தம்பதியின் பிள்ளைகளில் ஒருவன். தன் உடன் பிறந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல; மற்ற குழந்தை களிடமிருந்தெல்லாம் வித்தியாசமான பிள்ளை. மற்ற குழந்தைகளைக் கவரும் துருதுருச் செயல்பாடு.தலையோலப் பறம்பு மத வேறுபாடில்லா மக்களைக் கொண்டது. பள்ளியில் படிக்கும்போது சுதந்திரப் போராட்டக் காலம் என்பதால் அவனையும் அறியாது அதிலொரு ஈடுபாடு. அந்த வயதிலேயே அவனொரு காந்தியவாதி. தன்னுடைய ஊருக்கு வந்த காந்தியின் காலை சிறு வயதில் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தவன். வைக்கம் வந்த காந்தியின் வலது தோள்பட்டையை தன்னுடைய பள்ளிப் பருவத்தில் தொட்டுப் பார்த்ததோடு மட்டுமல்ல அவர் பேச்சினால் ஈர்க்கப்பட்டு காந்தி தண்டி யாத்திரை புறப்படுகிற வேளையில் கேரளக் கடற் கரையில் உப்பு காய்ச்சுவதற்காக இவனும் சிலரோடு புறப்பட, தங்கியிருந்த இடத்திலிருந்து படியிறங்கவும் முதுகில் போலீசாரின் அடி இடியென இறங்கியது. காவல் நிலையத்தில் குனிய வைத்து காவலரால் முதுகில் குத்தியதில் 27 வரை மட்டுமே எண்ணும் திராணி இருந்தது. சின்ன வயதில் சிறை. காந்தி – இர்வின் உடன் படிக்கைக்குப் பின் விடுதலையான 600 பேரில் ஒருவராக வெளிவந்தான் சிறுவன்.வெளி வந்த வேகத்தில் அவன் தேடிப்பிடித்தது பிச்சுவா கத்தியொன்று. முதுகில் குத்திய காவலரை (எண் 270) தேடி வெறியோடு கிளம்புகிறான். ‘ஒரு சத்தியாக்கிரகியைப் பழி வாங்கும் எண்ணம் தீண்டக்கூடாது’ என்றும் ‘அடிவாங்கிப் பல் இழந்த காந்திஜியின் கதை தெரியாதா?’ என்றும் அச்சுதன் என்ற நண்பன் கூற, மனம்மாறி காவல் துறையினர் ஏற்படுத்திய காயங்களோடு, பெற்றோர் முன்பு நிற்க விரும்பாது சுதந்திர தாகமும் வேகமும் கொண்ட சில நண்பர்கள் வானர (குரங்கு) சேனா என்ற அமைப்பை உருவாக்க, அதில் இணைகிறான். பிச்சுவா கைவிட்டு போனாலும் விரல் பிடித்த பேனாவின் உக்கிரம் பிரபா என்ற பெயரில் ‘உஜ்ஜீவனம்’ பத்திரிகையில் கட்டுரைகளாக வெளிவர, தேசாந்திரியாய் புறப் படுகிறான். அதிகபட்சம் அவனுக்கோ அகவை 18.கண்ணூர், குடகு, பெங்களூரு, மைசூர், ஹைதராபாத், பூனே, பம்பாய், ஆப்கானிஸ்தான், கோவா, கோலாப்பூர், லாகூர், கராச்சி, தில்லி, காசி, அஜ்மூர், புத்த கயா, ஹிமாச்சல், காஷ்மீர், ராவல்பிண்டி, பெஷாவர், கல்கத்தா இவையெல்லாம் அவனுடைய தேசாந்திரப் பயணத்தில் பார்த்து, தங்கி, பழகி, வாழ்ந்த இடங்கள்..எவரையும் கண்ட மாத்திரத்தில் கவர்ந்துவிடும் சுபாவம். ஆரம்பத்தில் அவனுடைய கைரேகை மற்றும் முகலட்சண ஜோசியம் அவனுக்குச் சாப்பாடு போட்டது. வைத்தியசாலை, கப்பல், பத்திரிகை அச்சகம் ஆகியவை அவன் வேலை செய்த இடங்கள். பாலைவன வெப்பத் திலிருந்து காப்பாற்றிய நிர்வாணச் சாமியார்களுடன் 3 ஆண்டு பழக்கம். சூஃபி துறவிகளுடனான தியான அனுபவம், கை நிறை காசில்லை. ஆனால், கையில் காசு. உழைக்காததை விரும்பாத உயர்ந்த குணம்.எந்த வேலையிலும் அவன் விடாததொன்று வாசிப்பே. வாசிப்பில் அவன் முன்னேறிச் செல்லத் தூண்டுகோளாக அவன் விரும்பிய பல புத்தகங்கள் கொடுத்துதவியது பம்பாய் (மும்பை) நகரம். பிரபலமான எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அவனைக் கவர்ந்தன. வாசிப்பிற்குப் பின்பு கதையின் கனவில் மிதப்பதில் அவனுக்கு ஒரு சுகம். இந்த வாசிப்பும் கற்பனா சக்தியும்தான் அவனை வழி நடத்தப் போகிறது என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.அவனின் தேசாந்திர உலாவில் சமுதாயத்தின் உதிரி மனிதர்களான சூதாட்டக்காரர்கள், திருடர்கள், பிக்பாக்கெட்காரர்கள், விபச்சாரிகள், ஒடுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட, விலக்கப்பட்ட, மறுக்கப்பட்டவர்கள் மீது அவன் பார்வை மட்டுமல்ல; அவன் மனமும் கனிவான பார்வைகொண்டிருந்தது.எவ்வித நோக்கமும் இல்லாது புறப்பட்ட பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு, எண்ணற்ற அனுபவங்களைச் சுமந்தவனாக, 1936ல் வெறுங்கையும் வீசிய கையுமாய் தலையோலப் பறம்பு திரும்பியவன்தான் வைக்கம் முகம்மது பஷீர்.பணம் இல்லாவிட்டால் என்ன, மகன் திரும்பி வந்ததே போதும் என்று வாப்பாவும் உம்மாவும் சந்தோஷப்பட்டனர்..ஊர் திரும்பியவரின் உள்ளங்கை அரிக்கவே ராஜ்ய அபிமானி, தீபம், பவுர நாகம், பிரகாசம் போன்ற பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். திருவாங்கூர் மன்னர் ஆட்சியைப் பற்றி ‘பாக்கியம் கெட்ட என் நாடு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று தீபம் இதழில் வெளிவர, இதழ் பறிக்கப்பட்டதோடு தேச துரோக வழக்கொன்று பஷீர் மீது பதிவானது.அதே நேரத்தில் கல்லூரி ஒன்றில் முகம்மது பஷீர் என்ற மாணவன் தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்க, காவல் துறையினர் அவனைப் பின் தொடர, பெயர் குழப்பத்தைப் போக்க ‘வைக்கம் முகம்மது பஷீர்’ என மாற்றியதோடு வைக்கம் சரணடைந்தார். 1942 – 43 இரண்டு ஆண்டுகள் திருவனந்தபுரம் சிறையில் சாப்பாடு. காவல் துறையிலும் அவரின் வாசகர்கள் இருப்பதை அவரால் உணர முடிந்தது. சமுதாயத்தில் எழுத்துக்கான ஆளுமையைக் காண முடிந்தது.விடுதலையான பின்பு மங்களோதயம், ஜயகேரளம் ஆகிய பத்திரிகைகளின் தொடர்பும் ஆரம்பித்த புத்தகக் கடையும் எழுத்து வளர்ச்சிக்கு வழிவகுத்தன. அரசியல் ஈடுபாடுகளைத் தவிர்க்க எழுத்தில் முழுக் கவனமும் திரும்பியது.சிறுகதை, நாவல், தொடர்கதைகள், திரைக்கதை, வசனம், நாடகம், உரைநடைக் கவிதைகள் என பலவும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தன. இவையெல்லாம் கைகொடுத்ததற்குக் காரணம் அவருடைய முதல் சிறுகதையான ‘என்டே தங்கம்’ என்ற கதைதான். ஜெயகேசரியில் வெளிவந்தது.தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டவரைத் தேடி வந்ததோ தேசிய விருதுகள் நான்கு; மாநில விருது ஒன்று.கண்டிப்பு மிகுந்த வாப்பா பாசம் மிகுந்த உம்மா இருவரின் வளர்ப்பினால் குடும்ப உறவை மறவாத பஷீர், பாத்திமா பீவியை பெண் பார்க்கின்றபோது அவர் பெண்ணிடம் கேட்ட முதல் கேள்வி “வயது வித்தியாசத்தில் ஏதாவது பிரச்னையா?” என்பதுதான்.கோயக்குட்டி மாஸ்டர், கதீஜா தம்பதியின் 7 பிள்ளைகளில் மூத்தவரான பாத்திமா பீவி ஆசிரியராகப் பணியிலி ருந்தவர். பஷீரின் எழுத்துக்களில் பரிச்சயமும் விருப்பமும் இருந்ததால் முழுமனதோடு அவரை ஏற்றுக்கொள்ள, கரம் பற்றினார் வைக்கம்.பாத்திமா பீவியை முதல் நாளே பேபி என்று பஷீர் அழைக்க, பாத்திமா பீவி பேபி பஷீரானார்.பேபி பஷீர் கணவரின் இலக்கிய விவாதத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் அவரைத் தேடி வருகிற அத்துனை பேர்களையும் அன்போடு உபசரித்தது கி.ரா.வின் மனைவி கணவதியை நினைவுபடுத்துவதாக உள்ளது. மகன் அனீஷ் ஒரு பொறியாளர். மகள் ஷாஹீனா. குடும்பத்தில் அவரின் துயரத்தை அதிகப்படுத்திய நிகழ்வு அவருடைய மருமகன் இறப்புதான்.‘மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரின் அன்புக்குரியவர் என்று தன்னைப் பற்றி எழுதுகிறார் பேபி பஷீர். ஆணவமே இல்லாத ஒரு ஆண் மகன் அவர். அவருக்கு மனைவி என்பதில் எனக்குப் பெருமை’ என்று குறிப்பிடுகிறார்..‘நானும் எழுதட்டுமா?’ என்று பேபி பஷீர் கேட்டபோது, “மலையாளிகளின் ஒரு தலைமுறையின் மனச்சோர்வு, பேரினவாதம் மற்றும் காதல் ஆகியவற்றின் கலவையுடன் எடி நீங்கள் எழுதும் இலக்கிய கலைமணி நிரப்பப்பட்ட ஒரு குடுவையை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதைப் பருகுகிறேன்” என்று சொன்னதாக பேபி பஷீர் குறிப்பிடுகிறார். அவர் எழுதிய நூலான ‘பஷிரண்டே எடியே’ என்பதின் மூலம் மலையாள இலக்கியத்திற்கான பஷீரின் படைப்பில் ஒரு திலகமிட்டது போல் அமைகிறது.முறைப்பெண் பெண்கொடியை உம்மா பெண் கேட்டு சென்றபோது பஷீர் வசதியில்லாதவர் என்ற காரணத்தால் பெண் கொடுக்கவில்லை என்ற சம்பவம் அவருடைய ஆழ்மனதில் ஒரு சோகம் என்று தெரிகிறது.வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அதன் வரவிலேயே இயல்பாக வரவேற்பதுதான் பஷீரின் குணம். அவருடைய எழுத்துக்கான உபகரணங்கள் ‘ஈஸிச்சேர், துண்டு பீடி, கிராமபோன், கட்டஞ்சாயா’ என்பதாகும்.1994ல் வைக்கம் முகம்மது பஷீரும் 2015ல் பேபி பஷீரும் இலக்கியத் தம்பதிகளாக மறைந்தாலும் இருவருமே இலக்கிய வட்டத்தில் ஒன்றாய் சுற்றிக் கொண்டிருப்பதே அவர்கள் வாழ்ந்த வாழ்வின் சிறப்பாகும்.