அன்டோனியோ கோஸ்டாவுக்கும், கோவாவுக்கும் இடையேயான உறவை பார்த்தோம். போர்ச்சுக்கலுக்கும், இந்தியாவுக்குமான தொடர்புகள் நீண்டவை. முகலாயர் ஆட்சி இந்தியாவில் அமையும் முன்பே போர்ச்சுக்கீசிய காலனிகள் கோவாவில் அமைந்துவிட்டன..ஐரோப்பிய நாடுகளில் முதல் முதலாக காலனிகளை அமைத்த நாடு போர்ச்சுக்கல்தான். ஆண்டு 1420.கடைசியாக காலனிகளுக்கு சுதந்திரம் கொடுத்த நாடும் போர்ச்சுக்கல்தான். ஆண்டு 1974.ஆக, 550 ஆண்டுகள் விடாப்பிடியாக காலனிகளை கட்டி ஆண்டுகொண்டிருந்தது போர்ச்சுக்கல். இந்தியாவில் கோவாவை 1510ம் ஆண்டு முதல் பிடித்து வைத்திருந்தது.இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னரும் “கோவாவை கொடுக்கமாட்டேன்“ என பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தது. இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தி ஓய்ந்து போனது. அதன்பின் 1961ம் ஆண்டு இந்தியா கோவா மேல் படை எடுத்தது..ஆனாலும், அப்போதைய போர்ச்சுக்கல் அதிபர் அமெரிகோ தாமஸ், “போர்ச்சுக்கல் படைகள் சாகும்வரை போரடவேண்டுமே ஒழிய சரணடையகூடாது“ என உத்தரவிட்டார். அதன்பின் கப்பல், விமான படையை இந்தியாவை நோக்கி அனுப்பினார்.ஆனால், அப்போதெல்லாம் போர்ச்சுக்கலில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு வந்து குண்டு வீசிவிட்டு போகும் அளவு திறன் மிக்க விமானங்கள் இல்லை. பாகிஸ்தானிடம் விமானங்களை இறக்கி பெட்ரோல் போட அனுமதி கேட்க, பாகிஸ்தான் மறுத்துவிட்டது. அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் போர்ச்சுக்கல் விமானங்களுக்கு பெட்ரோல் போட மறுத்தன.இந்தியாவை நோக்கி வந்த போர்ச்சுக்கல் கப்பல் படை சூயஸ் கால்வாய்க்கு வருகையில் பேரதிர்ச்சி காத்திருந்தது.எகிப்திய அதிபர் நாசர், போர்ச்சுக்கல் படையை அனுமதிக்க மறுத்து சூயஸ் கால்வாயை மூடிவிட்டார். அவர் இந்தியாவின் நல்ல நண்பர். இதனால் கடுமையான அதிர்ச்சி அடைந்த போர்ச்சுக்கல் நாசரை திட்டி தீர்த்தது.கோவாவில் இருந்த போர்ச்சுக்கல் படை சும்மா பெயரளவுக்கு சண்டை போட்டது. 30 பேர் இறந்தார்கள். அதன்பின் சரணடைந்துவிட்டார்கள்.அதன்பின்னர் போர்ச்சுக்கல் சாமியாடியது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸை கருப்பு தினமாக அறிவித்து துக்கம் அனுஷ்டித்தார்கள். போர்ச்சுக்கல்லில் கடைகளை மூடியும், ஊர்வலம் போயும் "கோவாவை மீட்போம்" என காமெடி பண்ணினார்கள். கோவாவை பிடித்த இந்திய தளபதி மேஜர் ஜெனெரல் காண்டெத்தின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10,000 டாலர் பரிசுப்பணம் அறிவித்தார்கள்.இந்தியா முழுக்க தீவிரவாத தாக்குதல் நடத்த கோவாவில் இருந்த "தேசபக்தி உள்ள போர்ச்சுக்கீசியர்களுக்கு" அழைப்பு விடுத்தார்கள். அதன்பின் அள்ளகைகள் சிலர் மர்கோவாவில் முனிசிபாலிட்டி கட்டிடத்துக்கு குண்டுவைத்து தகர்த்தார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் பெரியதாக இல்லை. ஒரு கடைக்காரர் மட்டுமே உயிரிழந்தார். 17 பேர் மேல் குற்றம் சாட்டப்பட்டு ஒருவர் மேல் குற்றச்சாட்டு நிரூபணமாகி ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால், பேரம் பேசி அவரையும், பிடிபட்ட போர்ச்சுக்கீசிய வீரர்களையும் போர்ச்சுக்கலுக்கு கூட்டிபோய் விட்டார்கள்..அங்கே போனதும் "உயிர் போனாலும் சரணடையக்கூடாது என உத்தரவு இருக்க ஏன் சரணடைந்தீர்கள்" என சொல்லி விசாரணை நடத்தி அவர்களின் ராணுவ பதவியை பறித்து, பென்ஷனையும் ரத்து செய்தார்கள்.ஐ.நா. சபையில் மிகப்பெரிய கலாட்டாவை தொடர்ந்து செய்து வந்தார்கள். ஒட்டுமொத்த உலகின் காமடி பீஸ் அன்று போர்ச்சுக்கல்தான்..கடைசியாக 1974ம் ஆண்டுதான் போனால் போய் தொலையட்டும் என சொல்லி கோவா இந்தியாவின் பகுதிதான் என ஒப்புக்கொண்டார்கள்.(தொடரும்)
அன்டோனியோ கோஸ்டாவுக்கும், கோவாவுக்கும் இடையேயான உறவை பார்த்தோம். போர்ச்சுக்கலுக்கும், இந்தியாவுக்குமான தொடர்புகள் நீண்டவை. முகலாயர் ஆட்சி இந்தியாவில் அமையும் முன்பே போர்ச்சுக்கீசிய காலனிகள் கோவாவில் அமைந்துவிட்டன..ஐரோப்பிய நாடுகளில் முதல் முதலாக காலனிகளை அமைத்த நாடு போர்ச்சுக்கல்தான். ஆண்டு 1420.கடைசியாக காலனிகளுக்கு சுதந்திரம் கொடுத்த நாடும் போர்ச்சுக்கல்தான். ஆண்டு 1974.ஆக, 550 ஆண்டுகள் விடாப்பிடியாக காலனிகளை கட்டி ஆண்டுகொண்டிருந்தது போர்ச்சுக்கல். இந்தியாவில் கோவாவை 1510ம் ஆண்டு முதல் பிடித்து வைத்திருந்தது.இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னரும் “கோவாவை கொடுக்கமாட்டேன்“ என பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தது. இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தி ஓய்ந்து போனது. அதன்பின் 1961ம் ஆண்டு இந்தியா கோவா மேல் படை எடுத்தது..ஆனாலும், அப்போதைய போர்ச்சுக்கல் அதிபர் அமெரிகோ தாமஸ், “போர்ச்சுக்கல் படைகள் சாகும்வரை போரடவேண்டுமே ஒழிய சரணடையகூடாது“ என உத்தரவிட்டார். அதன்பின் கப்பல், விமான படையை இந்தியாவை நோக்கி அனுப்பினார்.ஆனால், அப்போதெல்லாம் போர்ச்சுக்கலில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு வந்து குண்டு வீசிவிட்டு போகும் அளவு திறன் மிக்க விமானங்கள் இல்லை. பாகிஸ்தானிடம் விமானங்களை இறக்கி பெட்ரோல் போட அனுமதி கேட்க, பாகிஸ்தான் மறுத்துவிட்டது. அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் போர்ச்சுக்கல் விமானங்களுக்கு பெட்ரோல் போட மறுத்தன.இந்தியாவை நோக்கி வந்த போர்ச்சுக்கல் கப்பல் படை சூயஸ் கால்வாய்க்கு வருகையில் பேரதிர்ச்சி காத்திருந்தது.எகிப்திய அதிபர் நாசர், போர்ச்சுக்கல் படையை அனுமதிக்க மறுத்து சூயஸ் கால்வாயை மூடிவிட்டார். அவர் இந்தியாவின் நல்ல நண்பர். இதனால் கடுமையான அதிர்ச்சி அடைந்த போர்ச்சுக்கல் நாசரை திட்டி தீர்த்தது.கோவாவில் இருந்த போர்ச்சுக்கல் படை சும்மா பெயரளவுக்கு சண்டை போட்டது. 30 பேர் இறந்தார்கள். அதன்பின் சரணடைந்துவிட்டார்கள்.அதன்பின்னர் போர்ச்சுக்கல் சாமியாடியது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸை கருப்பு தினமாக அறிவித்து துக்கம் அனுஷ்டித்தார்கள். போர்ச்சுக்கல்லில் கடைகளை மூடியும், ஊர்வலம் போயும் "கோவாவை மீட்போம்" என காமெடி பண்ணினார்கள். கோவாவை பிடித்த இந்திய தளபதி மேஜர் ஜெனெரல் காண்டெத்தின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10,000 டாலர் பரிசுப்பணம் அறிவித்தார்கள்.இந்தியா முழுக்க தீவிரவாத தாக்குதல் நடத்த கோவாவில் இருந்த "தேசபக்தி உள்ள போர்ச்சுக்கீசியர்களுக்கு" அழைப்பு விடுத்தார்கள். அதன்பின் அள்ளகைகள் சிலர் மர்கோவாவில் முனிசிபாலிட்டி கட்டிடத்துக்கு குண்டுவைத்து தகர்த்தார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் பெரியதாக இல்லை. ஒரு கடைக்காரர் மட்டுமே உயிரிழந்தார். 17 பேர் மேல் குற்றம் சாட்டப்பட்டு ஒருவர் மேல் குற்றச்சாட்டு நிரூபணமாகி ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால், பேரம் பேசி அவரையும், பிடிபட்ட போர்ச்சுக்கீசிய வீரர்களையும் போர்ச்சுக்கலுக்கு கூட்டிபோய் விட்டார்கள்..அங்கே போனதும் "உயிர் போனாலும் சரணடையக்கூடாது என உத்தரவு இருக்க ஏன் சரணடைந்தீர்கள்" என சொல்லி விசாரணை நடத்தி அவர்களின் ராணுவ பதவியை பறித்து, பென்ஷனையும் ரத்து செய்தார்கள்.ஐ.நா. சபையில் மிகப்பெரிய கலாட்டாவை தொடர்ந்து செய்து வந்தார்கள். ஒட்டுமொத்த உலகின் காமடி பீஸ் அன்று போர்ச்சுக்கல்தான்..கடைசியாக 1974ம் ஆண்டுதான் போனால் போய் தொலையட்டும் என சொல்லி கோவா இந்தியாவின் பகுதிதான் என ஒப்புக்கொண்டார்கள்.(தொடரும்)