இடக்கான கேள்விகளும் மிடுக்கான பதில்களும்! – சில சுவாரஸ்ய நிகழ்வுகள்!

ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா
ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா

ந்திய ராணுவத்தின் ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். அப்போது "குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால்னதான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள்.

பேச்சை நிறுத்திவிட்டு மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே தீர்க்கமாக பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். ராணுவத்தில் உள்ள சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்; மராத்தி மொழியை, மராத்தா ரெஜிமெண்ட்டிடம்; மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ்; பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி; ஏன்,... கூர்க்கா ரெஜிமென்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக்கூட கற்று இருக்கிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக... குஜராத்தில் இருந்து ஒரு வீரர்கூட இதுவரை இல்லை... எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர...!" என்றார்.

அனைவரும் வாயடைத்தனர்.

பிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங் (இவர் இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் முதல் ராணுவ லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டவர் பல சாதனைகள் செய்தவர்), பிரெஞ்ச் கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக்கொண்டார்.

"இதுதான் தாங்கள் பிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருவதா?" என்று நக்கலாக கேட்டார் அதிகாரி. "இல்லை இதற்கு முன்பும் வந்திருக்கிறேன்..."

"அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டுமே, உங்களுக்கு..." என்றார் அந்த அதிகாரி.

"நான் கடைசியாக வந்தபொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை..."

இதையும் படியுங்கள்:
நீங்கள் என்றென்றைக்கும் பிறரால் மதிக்கப்பட வேண்டுமா?
ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா

"சான்ஸே இல்லை.... அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும்பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை கண்டிப்பாக காட்ட வேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி..." என உறுமினார் அந்த அதிகாரி!

சில வினாடிகள் அந்த அதிகாரியை உற்றுப் பார்த்தவாறே, அந்த அமெரிக்கர் சொன்னார்: "இரண்டாம் உலகப் போரின்போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, அதிகாலை
04:40 மணிக்கு உங்களின் ஒமஹா கடற்கரையில் நான் எனது படையுடன்  வந்து இறங்கியபொழுது... என் பாஸ்போர்ட்டை காண்பிக்கக் கோரி ஒரு ஃபிரெஞ்சுக்காரர்கூட அங்கில்லை..." என்றார். வாயடைத்துப் போனார் பிரெஞ்சுக்கார அதிகாரி.

                         +++++++++++

ம் நாட்டின் விடுதலைக்குப் பிறகு இந்திய பிரதமராய் அமர்ந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.

ஜவஹர்லால் நேரு ...
ஜவஹர்லால் நேரு ...

"நமக்கு ராணுவத்தை நிர்வகித்து நடத்த போதிய அனுபவம் இல்லாததால், ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்..." என்று துவங்கினார்.

பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர். ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் ஒரு ராணுவ உயரதிகாரி மட்டும் எழுந்து தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார். சுயமாய் சிந்திக்கும் இந்த இராணுவ அதிகாரியின் போக்கைக் கண்டு சற்று துணுக்குற்றாலும், நேரு அவரை பேச அனுமதி அளித்தார்.

"சார்.... நமக்கு நம் நாட்டை ஆளவும்கூடதான் அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது...?" என்று கேட்டார்.

லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா
லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா

விக்கித்து போன நேரு இத்தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்துக்கொண்டு அவரை பார்த்து கேட்டார்:

அவ்வாறாயின் "முதல் ராணுவத் தளபதியாக நீ ஆகிறாயா?" "இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்... அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்..பொருத்தமானவர்" என்றார். இப்படித்தான் ஜெனரல் கரியப்பா அவர்கள் முதல் இந்திய ராணுவத் தளபதியான வரலாறு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com