சிசு பாலனம் 5 - குழந்தை உயிரும் உணர்ச்சியும் கொண்ட ஒரு உயர்ந்த பொருள்!

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
Rajaji - Sisu Balanam
Rajaji - Sisu Balanam
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on
kalki strip
Kalki

கையைச் சுட்டுக்கொள்ளுவதும் வெட்டிக்கொள்ளுவதும் விழுந்து காயப்படுவதும் குழந்தைக்கு இயற்கை. இதை முழுதும் தவிர்க்க முடியவேமுடியாது என்பதைப் பெற்றோர்கள் மனதில் நிச்சயம் செய்துகொள்ள வேண்டும். வலி உண்டாவதினால் ஒன்றும் பிரமாதமில்லை. குழந்தைக்கு வலி யனுபவம் அவசியம். எவ்வாறு தேகத்தை உபயோகிக்கவேண்டும் என்பதை வலி அனுபவத்தினால்தான் குழந்தை தெரிந்துகொள்ளமுடியும்.

அவ்வப்போது சிறு காயங்கள் உண்டாகிப் பொறுத்துக்கொள்ளுவது குழந்தைக்கு ஒரு முக்கியமான படிப்பேயாகும். நம்முடைய குழந்தையின் உடம்பில் காயமே உண்டாகாமல் பாதுகாப்பது இயலாத காரியம். அவ்வாறு பாதுகாக்க முயற்சி செய்வதினால் குழந்தைக்கு நஷ்டமே யொழிய லாபமில்லை.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com