

தலைவர், வேம்புவையும், அழகேசனையும் தனியாக அழைத்தார்.
“ஏன் அழகேசா, இவரு இறந்துபோன உங்க கிராம மிராசுதார் மருமகன்தானே?”
அழகேசனும், “ஆமாம். வேம்பு என் உயிர் நண்பனும் கூட” என்றார்.
“சரி.. இந்த மணப்பெண், அவருக்கு எப்ப மகளாயிற்று?”
“தலைவரே, அவங்க மனைவியைப் பார்த்தீங்களா. படுத்தபடுக்கையா ஸ்டிரச்சரில். அப்படியே ஒரு ஆம்புலன்சும் நிக்குது, பாருங்க. அவர் மனைவிக்கு, முதுகு தண்டு வடத்தில, பெரிய ஆபரேஷன் ஆகி, அது பெஃயிலாயிடுத்து. எவனோ பெஃயிலாபோன பயல் பணம் கொடுத்து, டாக்டர் ஆகி, ஆபரேஷனும் செஞ்சு, லட்சக்கணக்குல பணத்தையும் பிடிங்கி விட்டுட்டான். இவருக்கும் முடியலே. அதனால, யாரோ நண்பர்கள் கூறவும், இந்தப் பெண்ணை, தன் பெண்ணாக, ‘தத்து’ எடுத்துக்கொண்டு விட்டார். இப்ப இந்தக் கிராமத்துக்கே சாப்பாடு முழதும் இவர் செலவுதான். அந்த பெண் மீது அத்தனை பாசம்."
மேடையில் ஒரு ஓரத்தில் ஸ்டிரெசரில் படுத்திருந்த வேம்புவின் மனைவியும் ‘ஆமாம்’ என்று தலை அசைத்து, அழகேசன் கூறியதை கன்ஃபார்ம் செய்தார்கள்.