

அது மனிதன் அழித்துகொண்டிருக்கும் ஒரு காடு. அதில் ஒரு பெரிய மரம். மரத்தில் ஏராளமான கிளைகள். அது எத்தனை வயதானது என்று யாருக்கும் தெரியாது. அதை நட்டவன் இறந்து போயிருக்கலாம். அதை நட்டவனின் பேரனும் இறந்து போயிருக்கலாம். ஆனால், மரம் இன்னும் உயிரோடு இருந்தது. அதன் கிளைகள் வானத்தை நோக்கி விரிந்திருந்தன. அதன் வேர்கள் பூமியின் இருட்டான அடுக்குகளுக்குள் பயணித்திருந்தன.
காட்டில் இருந்த மற்ற மரங்கள் அதனை மரியாதையுடன் பார்த்தன... அது உயரமானது என்பதால் அல்ல; அது பல உயிர்களின் உலகமாக இருந்ததற்காக. பலவகை பட்ட பறவைகள் கூடு கட்டி பேரானந்தமாக வாழ்ந்து வருகின்றன காலகாலமாய். கனி தரும் மரமாகவும் இருப்பதால் பல பறவைகளுக்கு உணவும் கிடைக்கும் வகையில் அம்மரம் ஒரு சின்ன சரணாலயமாக இருப்பதற்காக. அவை எவ்வளவு நம்பிக்கையுடனும் பாதுகாப்பு உணர்வுடனும் இருப்பதை சில கூடுகளுக்குள் பயணம் மேற்கொண்டால் கண்கூடாக பார்க்கலாம்.
ஒரு கிளையில் சிட்டுக்குருவிகளின் குடியிருப்பு. மற்றொரு கிளையில் கிளிகள்.