சிறுகதை: வாழ்வின் விளிம்பில்...!

பணமில்லாமல் தவித்த ஏழை இளைஞனுக்கு உயிரும் ஒளியும் தந்த மனிதநேயம். நெகிழ்ச்சியான சிறுகதை.
A sick, poor man sits in hospital
A sick, poor man sits in hospitalImage credit: Gemini AI
ஆர்.சுந்தரராஜன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
Kalki Strip
Kalki Strip

மருத்துவமனையின் நீண்ட, வெற்று நடைபாதை.

வெண்மை நிறச் சுவர்கள் மருந்து வாடையைச் சுமந்துகொண்டு குளிர்ச்சியாக இருந்தன. மூலைகளில் சோர்வு படர்ந்த முகங்கள். காத்திருப்பின் பாரம் சுமந்த நிழல்கள். அந்த நடைபாதையின் கடைசி மூலையில், சுவரில் சாய்ந்துகொண்டு ஒரு மனிதன் இருந்தான்.

அவன் வயதைச் சொல்லமுடியாது. தேய்ந்த மஞ்சள் சட்டை, கிழிந்த கால்சட்டை. கால்களில் செருப்பு இல்லை. அவன் கையில் ஒரு சிறு பிளாஸ்டிக் கப். காலியாக இருந்தது. வந்துபோகும் ஒவ்வொருவரையும் அவன் எதிர்பார்ப்புடன் பார்த்தான்.

யாராவது அருகில் வந்தால், கையை நீட்டுவான். குரல் வராது. உதடுகள் மட்டும் அசையும். "ஏதாவது... அம்மா தாயே.."

பெரும்பாலானோர் வேகமாக நடையைக் கடக்கிறார்கள். சிலர் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள். ஒரு பெண் "என்னடா இது மருத்துவமனையிலேயே பிச்சைக்காரனா?" என்று சத்தமாகவே சொல்லிவிட்டுப் போனாள். அவன் தலைகுனிந்தான்.

சில நேரங்களில், உள்ளே இருந்து ஒரு செவிலியர் வந்து, "இங்கே இருக்காதே, போ" என்பார். அவன் எழுந்து சிறிது தூரம் நகர்ந்து மீண்டும் உட்கார்ந்துகொள்வான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com