சிறுகதை: நன்றியறிதல்!

Old man in the crematorium
Old man in the crematorium
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

பிச்சனுக்கு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை! வயதாகிப் போய், பார்வையும் குறைந்து போனபிறகு, மகன் மருதனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ‘அக்கடா’ என்று இருந்தாலும், நேற்று தேவர் இறந்த செய்தி கேட்டதிலிருந்து பிச்சனுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை! தேவரைப் பிச்சனால் எப்படி மறக்க முடியும்?

பிச்சனை அந்த ஊர் வெட்டியானாக நியமித்ததே முருகையா தேவர்தான். அப்பொழுது அவர் அந்த ஊரின் பட்டாமணியார். சிறு வயதிலேயே அப்பா-அம்மாவை இழந்து, சித்தப்பா-சித்தியுடன் சிரமப்பட்டுக் கொண்டு கிடந்த அவனுக்கு அவர்தான் அந்த வழியைக் காட்டினார். சுமார் 300 வீடுகளைக் கொண்ட அந்தச் சிறிய கிராமத்தில், மூன்று வெட்டியான்களில் அவனும் ஒருவன் ஆனான்.

இறப்புச் செய்திகளை உறவினர்களுக்கு அறிவிப்பது, மரணமடைந்தவர்களுக்குச் சிதை தயாரிப்பது, இறந்த உடல்கள் முழுதும் வேகும் வரை உடனிருந்து பார்த்துக் கொள்வதென வெட்டியான்களின் பொறுப்பு அதிகம்! அதோடு மட்டுமா?

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com