சிறுகதை: யாருக்காக அழுகிறான் அவன்?

Tamil short story Yaarukkaaga Azhukiraan
Man in railway station
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

தஞ்சை ரயில்வே ஜங்ஷன்!

சென்னை ரயிலுக்கு இன்னும் நேரமிருந்ததால் நடைமேடை காலியாகவே கிடந்தது.

ரவியின் மனதுக்குள் அப்பாவின் மீதும் அந்த அரசியல்வாதி மீதும் டன் கணக்கில் கோபம் இருந்தது. டாக்டரேட் வாங்கி விட்ட அவனால் அவர்கள் வலையிலிருந்து வெளியே வர வழி தெரியவில்லை.

ம்! நாட்டு நடப்பு இப்போதெல்லாம் அப்படித்தானே இருக்கிறது. அந்த அரசியல்வாதி மெல்ல மெல்ல முன்னேற அப்பாவின் கடின உழைப்பும் ஒரு காரணம்.

ஆனாலும் அவனுக்கு வேலை என்று வந்தபோது, மார்க்கட் ரேட்டை அந்த அரசியல்வாதி சொல்லி, ஒன்றிரண்டை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளச் சொல்லி கூற, இருந்த இரண்டு ஏக்கர் நிலமும் கையை விட்டுப் போயிற்று. அந்த இன்டர்வியூவில் கலந்து கொள்ளத்தான் சென்னை செல்கிறான் ரவி!

கையிலிருந்த ப்ரீப் கேசை கீழே வைத்தவன், நடைமேடையிலிருந்த ஷாப்பில் சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தான். 

திரும்பியவன் அதிர்ந்தான்.

ப்ரீப் கேசைக் காணவில்லை!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com