

எமதர்மன் கம்பீரமாக தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தான். அப்போது வழக்கு விசாரணைக்கு வந்தது.
"சித்திரகுப்தா அப்படி என்ன வினோத வழக்கு இன்று நம் முன் வந்திருக்கிறது?" எமதர்மன் கேட்டார்.
உடன் சித்திரகுப்தன் கை தட்டவும் இரு எமகிங்கரர்கள் ஒரு வயதான தம்பதியை பாசக்கயிறு போட்டு இழுத்து வந்தனர்.
"மன்னா நான் முழு விவரத்தையும் கூறுகிறேன்" என்று சித்திரகுப்பதன் கூற, தர்மத்தில் மிகவும் உன்னத நிலை கொண்ட எமதர்மன்,
"வேண்டாம் பாதிக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை கொடுப்போம். அவர்கள் வாக்கு மூலம் கேட்டு பிறகு உன்னிடம் வருகிறேன்," என்றார்.
"அப்படி என்றால் உங்கள் அனுமதி தேவை. இந்த வழக்குக்கு சம்பந்தப்பட்ட இன்னும் ஒருவரை நான் சேர்க்க வேண்டும்," என்றான் சித்திரகுப்தன்.
"ஓ. தாராளமாக," என்றதும், சித்திரகுப்தன் கை தட்ட ஒரு எமகிங்கரன் ஒரு வயதான பிச்சைக்காரனை தோளில் தூக்கி அங்கு கொண்டு வந்து நிறுத்தினான்.
"வயதான தம்பதிகளுக்கு என் பணிவான வந்தனம்," என்று கூறி, "உங்கள் பிரச்னையை கூறுமாறு வேண்டுகிறேன்" என்றான் எமதர்மன்.