அன்னை சாரதா தேவி அருளுரை.இறைவன் நமக்கு சொந்தமானவர்தான். அது நிரந்தர உறவு. அவர் எல்லோருக்கும் சொந்தமானவர். பாவனையின் ஆழத்திற்கு ஏற்ப அதை உணர முடியும்..இறைவனே தந்தையாகவும் தாயாகவும் ஆகியுள்ளார். அவரே பெற்றோர் வடிவில் நம்மை வளர்க்கிறார். அவரே நம்மை கவனித்துக்கொள்கிறார்..இந்த ஊனக் கண்களால் கடவுளை யாராவது கண்டிருக்கிறார்களா? குருதேவரை நேரடியாகப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல..நரேன் அமெரிக்காவில் இருக்கும்போது தீவிர மன ஏக்கத்துடன் தவித்தபோது, குருதேவர் நரேனின் கையை பிடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தான். அதுவும் சில நாட்களுக்கு மட்டுமே அப்படி நடந்தது..சன்னியாசி எல்லா மாயைகளையும் வெட்டி எறிய வேண்டும். பொன் சங்கிலியும் இரும்பு சங்கிலிபோல் ஒரு தளைதான். உண்மையான துறவிகள் மாயையை வெட்டி எறிந்து நிர்வாண நிலையை அடைவார்கள். பகவானுடன் கலந்துவிடுவார்கள்..ஆசைகளின் காரணமாகவே உடம்பு தோன்றியிருக்கிறது. சிறிதளவேனும் ஆசை இருந்தால்தான் உடல் நிலைக்கும். ஆசைகள் முற்றிலுமாக ஒழியும்போது எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது..தேவர்களானாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. எல்லோரும் இந்த பூமியில் பிறக்கவே செய்கிறார்கள். சூட்சும உடலில் உண்ணவும் உடுக்கவும் பேசவும் முடியாதல்லவா! அதனால்தான் அவர்கள் அந்த நிலையில் நீண்ட காலம் வாழ முடிவதில்லை..சூட்சும உடலில் வாழ்பவர்கள் இருக்கும் இடத்திலேயே மரப்பொம்மைகள் போல யுகயுகங்களாக அப்படியே இருப்பார்கள். பகவான் விரும்பினால் அவர்களை அங்கிருந்து கீழே கொண்டு வருகிறார். ஜனலோகம், சத்தியலோகம். துருவலோகம் என்று தேவலோகங்கள் பல உண்டு. சுவாமிஜியை சப்தரிஷி மண்டலத்திலிருந்து கூட்டி வந்ததாக குருதேவர் சொல்வதுண்டு..சூட்சம உடலில் வாழ்பவர்களில் இரு பிரிவினர் உண்டு. சிலர் இந்த உலகத்தைப்போலவே மேல் உலகத்தில் பகவானுக்கு சேவை செய்பவர்களாக இருப்பார்கள். மற்றொரு பிரிவினர் மரப்பொம்மைகள் போல தியானத்தில் ஆழ்ந்திருப்பார்கள். நிர்விகல்ப நிலையை அடைந்த பிறகும் ஈசுவரகோடிகளால் தங்கள் மனத்தைத் திரட்டி சாதாரண நிலைக்குக் கொண்டுவர முடியும்..ஆசையின் சாயலே இல்லாமல்போனால்தான் பிறவியிலிருந்து விடுதலை கிடைக்கும்.கங்கையில் உடலை விட்டால்கூட ஆசையில் சாயல் இல்லாமல் இருந்தால்தான் முக்தி கிடைக்கும். வேறு எதனாலும் எந்தப் பயனும் இல்லை..இந்த மாயா உலகில் பகவான் ஒருவர்தான் எல்லாம் அறிந்தவராக இருக்க முடியும்.
அன்னை சாரதா தேவி அருளுரை.இறைவன் நமக்கு சொந்தமானவர்தான். அது நிரந்தர உறவு. அவர் எல்லோருக்கும் சொந்தமானவர். பாவனையின் ஆழத்திற்கு ஏற்ப அதை உணர முடியும்..இறைவனே தந்தையாகவும் தாயாகவும் ஆகியுள்ளார். அவரே பெற்றோர் வடிவில் நம்மை வளர்க்கிறார். அவரே நம்மை கவனித்துக்கொள்கிறார்..இந்த ஊனக் கண்களால் கடவுளை யாராவது கண்டிருக்கிறார்களா? குருதேவரை நேரடியாகப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல..நரேன் அமெரிக்காவில் இருக்கும்போது தீவிர மன ஏக்கத்துடன் தவித்தபோது, குருதேவர் நரேனின் கையை பிடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தான். அதுவும் சில நாட்களுக்கு மட்டுமே அப்படி நடந்தது..சன்னியாசி எல்லா மாயைகளையும் வெட்டி எறிய வேண்டும். பொன் சங்கிலியும் இரும்பு சங்கிலிபோல் ஒரு தளைதான். உண்மையான துறவிகள் மாயையை வெட்டி எறிந்து நிர்வாண நிலையை அடைவார்கள். பகவானுடன் கலந்துவிடுவார்கள்..ஆசைகளின் காரணமாகவே உடம்பு தோன்றியிருக்கிறது. சிறிதளவேனும் ஆசை இருந்தால்தான் உடல் நிலைக்கும். ஆசைகள் முற்றிலுமாக ஒழியும்போது எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது..தேவர்களானாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. எல்லோரும் இந்த பூமியில் பிறக்கவே செய்கிறார்கள். சூட்சும உடலில் உண்ணவும் உடுக்கவும் பேசவும் முடியாதல்லவா! அதனால்தான் அவர்கள் அந்த நிலையில் நீண்ட காலம் வாழ முடிவதில்லை..சூட்சும உடலில் வாழ்பவர்கள் இருக்கும் இடத்திலேயே மரப்பொம்மைகள் போல யுகயுகங்களாக அப்படியே இருப்பார்கள். பகவான் விரும்பினால் அவர்களை அங்கிருந்து கீழே கொண்டு வருகிறார். ஜனலோகம், சத்தியலோகம். துருவலோகம் என்று தேவலோகங்கள் பல உண்டு. சுவாமிஜியை சப்தரிஷி மண்டலத்திலிருந்து கூட்டி வந்ததாக குருதேவர் சொல்வதுண்டு..சூட்சம உடலில் வாழ்பவர்களில் இரு பிரிவினர் உண்டு. சிலர் இந்த உலகத்தைப்போலவே மேல் உலகத்தில் பகவானுக்கு சேவை செய்பவர்களாக இருப்பார்கள். மற்றொரு பிரிவினர் மரப்பொம்மைகள் போல தியானத்தில் ஆழ்ந்திருப்பார்கள். நிர்விகல்ப நிலையை அடைந்த பிறகும் ஈசுவரகோடிகளால் தங்கள் மனத்தைத் திரட்டி சாதாரண நிலைக்குக் கொண்டுவர முடியும்..ஆசையின் சாயலே இல்லாமல்போனால்தான் பிறவியிலிருந்து விடுதலை கிடைக்கும்.கங்கையில் உடலை விட்டால்கூட ஆசையில் சாயல் இல்லாமல் இருந்தால்தான் முக்தி கிடைக்கும். வேறு எதனாலும் எந்தப் பயனும் இல்லை..இந்த மாயா உலகில் பகவான் ஒருவர்தான் எல்லாம் அறிந்தவராக இருக்க முடியும்.