ஈக்கள் தொல்லையா? அதை விரட்ட சில எளிய வழிகள்!

ஈக்கள் தொல்லையா? அதை விரட்ட சில எளிய வழிகள்!
Published on

* வீட்டில் ஆங்காங்கே புதினா இலைகளை கசக்கி போட்டு வைத்தால் ஈக்கள் பறந்து விடும்.

* தண்ணீரில் சிறிது சமையல் உப்பைக் கரைத்து வீடு முழுவதும் தெளித்தால் ஈக்கள் வராது.

* சிறிதளவு வசம்பை நீர் விட்டு அரைத்து வீடு முழுவதும் தெளித்தால் ஈக்கள் நெருங்காது.

* ஈக்கள் வரும் இடங்களில் கற்பூரத்தை பொடித்து, நல்லெண்ணெய் கலந்து தெளித்தால், ஈக்கள் நெருங்காது. இருந்தாலும் பறந்து விடும்.

* ஆரஞ்சு பழத்தோலை ஒரு துணியில் கட்டி, ஈக்கள் வரும் இடங்களில் வைத்தால், ஈக்களின்தொல்லை நீங்கும்.

* உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும். எரிச்சலூட்டும் ஈக்களை அகற்ற இக் கரைசலை தெளிக்கவும்.

* வீட்டை சுத்தம் செய்வதற்கு கிராம்பு எண்ணெயை பயன்படுத்தலாம். கிராம்பின் வாசனையை பொறுக்காத ஈக்கள், அடுத்த நொடியே வீட்டை விட்டு ஓடிவிடும்.

* வெள்ளரிக்காய் துண்டுகளை உங்கள் வீட்டை சுற்றிலும் வைத்திருப்பதன் மூலம், ஈக்கள் வீட்டுக்குள் வருவதை தவிர்க்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com