சித்ரா பௌர்ணமியில் தோன்றிய சித்ரகுப்தர்

சித்ரா பௌர்ணமியில் தோன்றிய சித்ரகுப்தர்
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on

கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் பாதையில் சித்திரகுப்தர், எமதர்மராஜன் கோவில் உள்ளது. இங்கு எமன் எருமை வாகனத்தில் அமர்ந்திருக்க, அவரது கணக்கரான சித்திரகுப்தன் அருகில் எழுத்தாணி, ஓலைச்சுவடியுடன் நிற்கிறார். இவர்களை சித்ரா பௌர்ணமி அன்று தரிசித்தால் மரண பயம் ஏற்படாது. கடன் தொல்லை வியாதிகள் தீரும்.‌ இங்கே சித்ரா பௌர்ணமி அன்று 101 வகை படையல்கள், பொங்கல் படைத்து சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு தனி கோவில் உள்ளது. எழுத்தாணியை வலது கையிலும், பனை ஓலை ஏட்டை இடது கையிலும் ஏந்தி காட்சி தருகிறார் சித்திரகுப்தர். இங்கு சித்ரா பௌர்ணமி அன்று காலையில் அஷ்ட ஐஸ்வர்ய பூஜை, அலங்காரம், தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறுகின்றன. மாலையில் கல்யாண உற்சவம் நடைபெறும். சித்திரகுப்தர் வீதி உலா வருவார்.

தேனி மாவட்டம் கோடாங்கி பட்டி அருகில் உள்ள தீர்த்த தொட்டி எனும் இடத்தில் சித்திர புத்திர நாயனார் கோவில் உள்ளது. இவர் கேதுவுக்கு அதிபதி என்பதால், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வணங்கினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

logo
Kalki Online
kalkionline.com