தீபாவளி சிறப்புக் கவிதை!

தீபாவளி சிறப்புக் கவிதை!

Published on

ஏக்கம் 

புத்தாடை ஜொலி ஜொலிக்க

புது வெடியை நான் வெடிக்க

தித்திக்கும் இனிப்புகளை

என் நாவும் ருசி பார்க்க

பந்தங்கள் புடைசூழ

சொந்தங்கள் சேர்ந்திருக்க

தீப ஒளி திருநாளை

மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க

கொண்டாட ஏங்குகிறது என் மனம்

ஆனால்,

உண்ண உணவுமில்லை

உடுத்த உடையுமில்லை

அணைக்க அன்னையுமில்லை

அரவணைக்க தந்தையில்லை

இருக்க இருப்பிடமில்லை

இல்லை என்ற சொல் மட்டுமே

நிறைய உண்டு எம் போன்று

வறுமையில் வாடும் சிறார்களுக்கு.

-நளினி ராமச்சந்திரன், கோவை.

------------------------------------------------------------------

மலரட்டும் தீபாவளி 

ல்லிகையின் மணம்போல

மலரட்டும் தீபாவளி 

மணப்பெண்ணின் வெட்கம் போல்

விலகட்டும் இருள் அரக்கன்

விடியட்டும் பொன்னான நன்னாளாம்

இத் தீபாவளித் திருநாள்

புனித நீராடி

புத்தாடை அணிந்திடுவோம்

தீயவை அழியவும்

நன்மைகள் பெருகவும்

தீபமேற்றி வணங்கிடுவோம் 

சுற்றமும் நட்பும் சூழ்ந்து

சுவைத்திடுவோம் இனிப்புகளை

இந்நாள்போல்

எந்நாளும் பொன்னாளாக,

வழங்கிடுவோம் வாழ்த்துக்களை

வையகத்தார் அனைவருக்கும்!

-ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com