
1. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் 'ஆப்பு'
- அது என்ன?
2. இனிப்பு என்றாலும் இதில் காரம் இருக்கும் - அது என்ன?
3. இந்த ஆட்டம் காதைக் கிழிக்கும் - அது என்ன?
4. தீபாவளியன்று பெரியவர்களிடம் வாதம் செய்யக் கூடாது. இந்த வாதம் வாங்க வேண்டும் - அது என்ன?
5. பூக்களைத் கொடுத்தாலும், வெடிகளைத் தொடுத்தாலும் பெயர் என்னவோ இதுதான் - அது என்ன?
6. தையல்காரருக்குப் பிடித்த வெடி - அது என்ன?
7. வருமுன் காக்கும் மருந்து வருடத்திற்கு ஒரு முறை சாப்பிடும் மருந்து - அது என்ன?
8. பெருமாள் கையில் இருக்கும் மத்தாப்பு - அது என்ன?
9. மாட்டு வண்டிக்காரரிடம் இருக்கும்; தீபாவளியன்று குழந்தைகள் கையிலும் இருக்கும் - அது என்ன?
10. பருப்பு இல்லாமல் கல்யாணம் இல்லை; டிவியில் இது இல்லாமல் தீபாவளியும் இல்லை - அது என்ன?
11. செடி கொடிகளில் மட்டுமின்றி, தீபாவளி சமயத்தில், பத்திரிகைகளிலும் மலரும் - அது என்ன?
12. வாலில் நெருப்பு; வானில் பறப்பு - அது என்ன?
சென்ற இதழில் இடம்பெற்ற தீபாவளி விடுகதைகளுக்கான விடைகள்:
1. மத்தாப்பு, 2. பலகாரம்,, 3. ஆட்டம் பாம், 4. ஆசீர்வாதம் , 5. சரம் , 6. ஊசி வெடி, 7. தீபாவளி மருந்து, 8. சங்கு சக்கரம், 9. சாட்டை, 10. பட்டிமன்றம், 11. தீபாவளி மலர், 12. தீபாவளி ராக்கெட்.
- ஆர். பிரசன்னா ஸ்ரீரங்கம்.