சாதனைப் பெண்மணி - 2 : பிரேமா சௌத்ரி
அறிமுகப்படுத்தியவர்: வி. ரத்தினா
அறிமுக உரை:
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வசிக்கும் இந்த நாகோல் என்ற இடம் ஹைதராபாதின் புறநகர் பகுதியில் சிறிய கிராமமாக இருந்தது. விரைவான நகரமயமாக்கல் காரணமாக இந்த நாகோல் கிராமம் அனைத்து வணிக மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கும் முக்கியமான இடமாக மாறியுள்ளது. மேலும், இது நகரத்தின் முக்கியமான இடங்களை இணைக்கும் பல மேம்பாலங்கள் மற்றும் அகலமான சாலைகளுடன் மிக விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மெட்ரோ மற்றும் பிற போக்குவரத்து வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நாகோல் ஒரு முக்கியத்துவமான பகுதியாக மாறியது. மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் இதன் வளர்ச்சிக்கு பலர் பங்களித்துள்ளனர். அவர்களில் ஒருவரான திருமதி பிரேமா சௌத்ரியின் பங்களிப்பு இந்த கிராம வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒன்று.
இருபது வருடங்களுக்கு முன் ஏழை குழந்தைகளுக்காக உயர்தர கல்வி உள்கட்டமைப்புடன் ஒரு உயர்நிலைப் பள்ளியை இங்கு நிறுவினார் பிரேமா. ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவதில் அவர் கொண்டிருந்த அதீத ஈடுபாடு மக்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது மட்டுமல்லாமல், அரசாங்க அதிகாரிகளிடமிருந்து வெகுமதிகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. இன்றும் இங்கு உள்ள மக்கள் அவரை மிகவும் மதித்து தனிப்பட்ட ஆலோசனையில் அவரது உதவியைப் பெறுகிறார்கள்.
பிரேமா அவர்களின் சொந்த ஊர் ஶ்ரீபெரும்புதூர். முதுகலை பட்டம் பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு ஹைதராபாத் வந்தார். கணவர் கல்வித் துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பவர். அவர் ஊக்கமளிக்கவே மேற் கல்விக்காக ஆஸ்திரேலியா சென்று மேலும் சில சிறப்பு பயிற்சிகளில் தேர்ச்சி பெற்று திரும்பினார். கணவரும் பொது சேவை செய்வதில் ஆர்வமுள்ளவராக இருந்ததால் தன்னையும் சமூக சேவை பணிகளில் இணைத்துக்கொண்டார். பிரேமா மேடம் ஆசிரியையாக இருந்தாலும் அனாதை இல்லம், முதியோர் இல்லம், மருத்துவ பராமரிப்பு மையம் போன்ற பல பொது நடவடிக்கைகளில் பங்கேற்களானார்.
பிரேமாவின் அன்பு மற்றும் பாசம், நல்ல அணுகுமுறை, உதவும் மனப்பான்மை போன்றவை அனைவரையும் மிகவும் கவர்ந்தன. கொரோனா காலத்தில் அவர் ஆற்றிய பணி மகத்தானது.. தினமும் அவரும் அவரது குடும்பத்தினரும் தேவையான மருந்துகள் மற்றும் உணவுடன் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் பல செய்தார்கள். அவரது மகிழ்ச்சியான வார்த்தைகள் மற்றும் நேர்மறையான அணுகுமுறை எங்கள் அனைவரையும் மிக விரைவில் குணப்படுத்தி முழுமையாக குணமடையச் செய்தது. சர்வ வல்லமையுள்ள கடவுளின் பிரதிநிதி என்பதை அவரது சேவையின் உற்சாகத்தில் நாங்கள் உணர்ந்தோம்.
தனிப்பட்ட முறையிலும் எனக்கு பிரேமா மேடம் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் நீண்ட ஆயுளுடன் மேலும் மக்கள் சேவையை தொடர நாங்கள் எப்போதும் பிரார்த்திக்கிறோம். என்னைப் பொறுத்தவரை அவர் தான் எங்களின் சூப்பர் வுமன்.
சாதனைப் பெண்மணி - 2 : பிரேமா சௌத்ரி
சுய அறிமுக உரை:
என் பெயர் பிரேமா சௌத்ரி மல்லவரப்பு. நான் பிறந்தது தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள நெமிலி என்ற சிறிய கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்தபிறகு சென்னை லயோலா கல்லூரியில் எம்.எஸ்சி வேதியியல் படித்தேன். ஏலூரு புனித தெரசா கல்லூரியிலும் பின்னர் ஹைதராபாதில் செயின்ட் ஆன்ஸ் கல்லூரியிலும் விரிவுரையாளராக எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். பத்தாண்டுகள் பணி அனுபவத்தைத் தொடர்ந்து, எனது கணவரின் உத்வேகத்தால் இங்கு நாகோல் கிராமத்தில் குட் ஷெப்பர்ட் உயர்நிலைப் பாடசாலையை ஆரம்பித்து, கடந்த மூன்று தசாப்தங்களாக பிரின்சிபல் ஆக பணியாற்றி வருகிறேன்.
கடின உழைப்புதான் என் ஸ்டைல். மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும், ஒழுங்குபடுத்தவும் எனக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. எனது மாணவர்கள் என்னிடம். "உங்களால்தான் நான் வெற்றி பெற்றேன், நாங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" என்று கூறும்போது நான் பெருமையாகவும் திருப்தியாகவும் உணர்கிறேன்.
எனது பகுதி நாகோலின் வளர்ச்சியில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். ஏழை எளியவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற சமூக சேவையில் ஆர்வம்கொண்ட என் கணவரால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். பல கிராமப்புறக் குழந்தைகளை உயர் கல்வியின் மூலம் மேம்படுத்தி வருகிறோம்
அன்னை தெரசாவை பின்பற்றி ஆதரவற்ற, மிகவும் நம்பிக்கையற்ற, முதியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன்.
மங்கையர் மலர் அறிவித்த ‘எங்க ஊரு Super Woman’ அறிமுக அணிவகுப்பில் நானும் இடம் பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்னை அறிமுகப்படுத்திய ரத்னினா அவர்களுக்கும் மங்கையர் மலருக்கும் நன்றிகள் பல.
இந்த சாதனைப் பெண்மணிகளின் அணிவகுப்பில் 'SUPER WOMAN' யார் என்பது இறுதிப் பதிவாக ஏப்ரல் 8 அன்று வெளியிடப்படும்.