-வெங்கடராமன் சராமசுப்ரமணியன்ஆங்கிலத்தில் 60க்கும் மேற்பட்ட பிரபல நாவல்கள் எழுதிய, மிகப்பெரிய நாவலாசிரியரான ஸ்டீபன் கிங், எழுதும் கலையைப் பற்றி, தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும், தனது எழுத்துத் திறமையினை அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு பகிர்ந்த எழுத்தாளர்கள் மிகவும் சிலரே. அவர்கள் பாராட்டுதற்குரியவர்கள். அவர்கள் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் ஒளிவிளக்காக, கலங்கரை விளக்காக விளங்குகிறார்கள். ஸ்டீபன் கிங், தனது 'ஆன் ரைட்டிங்' , அதாவது ‘எழுதுவதைப் பற்றி’ என்ற புத்தகத்தில், எழுத்துக் கலையினைக் குறித்து, பல்வேறு அருமையான விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்கிறார். .எழுத்துக் கலை என்பது பரிசுத்தமான தொலையுணர்வு (telepathy); எழுத்தின் மூலம், எழுத்தாளரும் வாசகனும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பு நூற்றாண்டுகள் தாண்டியும் நிகழ்கிறது. எழுத்தாளன் கண்ட அதே காட்சி, அதே உணர்வினை வாசகனும் பெறுகிறான்.உதாரணமாக, ஒரு வெள்ளை முயல், 8 என்று ஊதா நிறத்தில் எழுதப்பட்ட சிவப்பு மேஜை விரிப்பின் மீதுள்ள ஒரு கூண்டில் இருப்பதை எழுத்தாளன் கதையில் காட்சிப்படுத்துகிறான். பல நூற்றாண்டுகள் தாண்டிய பின்பும் கூட, அதே வெள்ளை முயலை அப்படியே வாசகனும் காண்கிறான். இத்தகைய பரிசுத்தமான தொலையுணர்வு, எழுத்துக் கலையின் பிரமிக்கத்தக்க அம்சம். எனவே, எழுத்தாளனின் விவரிப்பு முக்கியம். அது மிகவும் விலாவரியாகவும் இருக்கக் கூடாது. மிகவும் மேலோட்டமாகவும் இருக்கக் கூடாது. இரண்டிற்கும் நடுவே, நிறைத்தராசினைப் போன்ற ஒரு சமநிலை முக்கியம்.எழுத்து என்பது விளையாட்டுத்தனம் அல்ல; எழுத்து மேஜைக்கு வரும் போது, அர்ப்பணிப்பு உணர்வுடன் வர வேண்டும். எழுத்தினைப் பற்றிய ஒரு உன்னதமான, பெருநோக்கம் அவசியம். அத்தகைய ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் எழுதினால், அந்த எழுத்து வாசகர்களால் புறக்கணிக்கப் படும். எழுத்துக் கலைக்கு நேர்மையுடனும், உண்மையுடனும் இருக்க வேண்டும்.தச்சர் எவ்வாறு எங்கு சென்றாலும், தனது உபகரணப் பெட்டியைக்கொண்டு செல்கிறாரோ, அவ்வாறே எழுத்தாளருக்கும் உபகரணப் பெட்டி அவசியம். அந்த உபகரணப் பெட்டியில், பல தளங்கள் உண்டு. அந்த உபகரணப் பெட்டியில், எவ்வளவு உபகரணங்களை வைத்துள்ளாரோ, அதற்கேற்றவாறு, அவரால் பல விதமான களங்களை கையாள முடியும்.பொதுவான உபகரணங்கள் மேல்தளத்தில் இருக்கும்.சொற்களஞ்சியம் (Vocabulary) முக்கியம். சிலருக்கு வளமாகவும், சிலருக்கு எளிமையான வார்த்தைகளாகவும் இருக்கும். இந்த சொற்களஞ்சியத்தை மேம்படுத்த, நிறைய படிக்க வேண்டும். படிப்பதன் மூலம், அதிக சொற்கள் பரிச்சயப்பட்டு, சொற்களஞ்சியத்தை மேம்படுத்த முடியும்.இலக்கணம் (grammar): சொற்றொடர்கள் இலக்கண சுத்தமாக முழுமையாக எழுத வேண்டும். குறைந்தபட்சம் எழுவாய், வினை என்றாவது இருக்க வேண்டும்.செயல்வினையில் எழுத வேண்டும்; செயல்வினையில் எழுதுவது அழுத்தம் திருத்தமாக இருக்கும். செயல்பாட்டு வினையில் எழுதுவது பலவீனமாக இருக்கும்.7 மணிக்கு சந்திப்போம். - செயல்வினை7 மணிக்கு நமது சந்திப்பு நடத்தப்படும் - செயல் பாட்டுவினைவினையடைகளைத் தவிர்க்க வேண்டும்; வினையடை களுக்குப் பதிலாக, அதனை உரையாடலில் கொண்டு வரவேண்டும். 'எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்' என்றாள் வள்ளி குதூகலமாக. - இங்கு குதூகலமாக என்பது வினையடை.'ஹையா. எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்' என்றாள் வள்ளி. - இங்கு உரையாடலில் வினையடையின் உணர்வு கொண்டுவரப்படுகிறது.எழுத்தாளரின் உபகரணப் பெட்டியின் கீழ்த்தளத்தில்... நடை, கதையின் கட்டமைப்பு போன்றவை உள்ளடங்கும். சிறிய பத்திகளாக புத்தகம் இருக்க, படிப்பது எளிதாகும். கதையில் பத்திகள் குறிப்பிட்ட தலைப்பில் தொடங்கி, தலைப்பினை முடித்து, அடுத்த தலைப்பிற்கு நகர வேண்டியதில்லை. கதைக்கு ஏற்றவாறு பத்திகள் பயணிக்கும். கதைகள் எழுதும்போது, கட்டுரையைப் போல், பத்திகள் ஒரு குறிப்பிட்ட வரையறையில் இருக்க வேண்டியதில்லை. எழுதும் கலையின் அடிப்படை பத்திகள்தான். சொற்றொடர்கள் அல்ல.வார்த்தைக்கு எடை உண்டு; ஒவ்வொரு வார்த்தைக்கும் எடை உண்டு. சரியான வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் அவசியமான வார்த்தைகளாக கதையில் இருக்கவேண்டும். வார்த்தைகளைக் கொண்டு, பிரம்மாண்ட படைப்புகள் படைக்க முடியும்.தினமும் எழுதுங்கள்; தினமும் எழுதாவிட்டால், உங்களது கதாபாத்திரங்கள் உங்கள் மனதில் துருப்பிடிக்கத் தொடங்கிவிடுவார்கள். துடிப்பு குறைந்துவிடும். குறைந்த பட்சம் 10 தாள்கள் எழுதுங்கள். குறைந்தபட்சம் 2000 வார்த்தைகள் எழுதுங்கள். அமைதியான இடத்தில் எழுதுங்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுதுங்கள். கற்பனை குதிரை வரும். உங்களுக்கு பிடித்ததை எழுதுங்கள். எழுத்தாளர்கள் உங்களை விட, எந்த விதத்திலும் வித்தியாசமானவர்கள் இல்லை..கதைக்கு நடை, விவரிப்பு, உரையாடல் என்ற மூன்று அங்கங்கள் உண்டு. நடை ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கதையினை நகர்த்துகிறது. விவரிப்பு , புலன்கள் சார்ந்த காட்சியமைப்பைக் கொண்டு வருகிறது. உரையாடல், கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் கண் முன்னே கொண்டு வருகிறது. கதையமைப்பு (plot) என்ற ஒன்று கிடையாது. கதை இப்படித்தான் நகர வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்தால், கதையின் தன்னியல்பான நகர்தல் (spontaneity) நடக்காது. வாழ்க்கை என்பதும் தன்னியல்பான நகர்தல் சார்ந்ததுதானே.கதை எழுதும்போது, இரண்டு வரைவு மற்றும் ஒரு மெருகேற்றல் அவசியம்; முதல் வரைவு உங்களுக்காக எழுதுகிறீர்கள். இரண்டாவது வரைவு வாசகர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கிறீர்கள்.முதல் வரைவு - 10%. முதல் வரைவு, எவ்வளவு வேகமாக எழுத முடியுமோ, எழுதப் பாருங்கள். 6 வாரம் இடைவெளி விட்டு, இரண்டாவது வரைவைத் தொடங்குங்கள். அப்போது கதையில் உள்ள ஓட்டைகள் உங்களுக்கு புலனாகும். கதாபாத்திரங்களின் நோக்கம் சரியாக உள்ளதா, அதற்கேற்ற காட்சிகள் உள்ளதா என்று பார்த்து சரிசெய்யுங்கள்.பின்புலம், கதாபாத்திரங்களின் குணாதிசய வடிவமைப் பிற்கு உதவுகிறது; கதையில் தேவைப்படும் இடத்தில் பின்புலத்தை சேர்க்கவேண்டும். அது மிகவும் நீண்டு இருக்கக்கூடாது. வாசகர்கள் கதையில், முன்பு என்ன நடந்தது என்பதை விடவும், எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். பின்புலம், கதாபாத்திரங்களின் நோக்கத்தினைப் புரிந்துக் கொள்ள உதவுகிறது.முடிந்தால் இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.
-வெங்கடராமன் சராமசுப்ரமணியன்ஆங்கிலத்தில் 60க்கும் மேற்பட்ட பிரபல நாவல்கள் எழுதிய, மிகப்பெரிய நாவலாசிரியரான ஸ்டீபன் கிங், எழுதும் கலையைப் பற்றி, தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும், தனது எழுத்துத் திறமையினை அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு பகிர்ந்த எழுத்தாளர்கள் மிகவும் சிலரே. அவர்கள் பாராட்டுதற்குரியவர்கள். அவர்கள் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் ஒளிவிளக்காக, கலங்கரை விளக்காக விளங்குகிறார்கள். ஸ்டீபன் கிங், தனது 'ஆன் ரைட்டிங்' , அதாவது ‘எழுதுவதைப் பற்றி’ என்ற புத்தகத்தில், எழுத்துக் கலையினைக் குறித்து, பல்வேறு அருமையான விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்கிறார். .எழுத்துக் கலை என்பது பரிசுத்தமான தொலையுணர்வு (telepathy); எழுத்தின் மூலம், எழுத்தாளரும் வாசகனும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பு நூற்றாண்டுகள் தாண்டியும் நிகழ்கிறது. எழுத்தாளன் கண்ட அதே காட்சி, அதே உணர்வினை வாசகனும் பெறுகிறான்.உதாரணமாக, ஒரு வெள்ளை முயல், 8 என்று ஊதா நிறத்தில் எழுதப்பட்ட சிவப்பு மேஜை விரிப்பின் மீதுள்ள ஒரு கூண்டில் இருப்பதை எழுத்தாளன் கதையில் காட்சிப்படுத்துகிறான். பல நூற்றாண்டுகள் தாண்டிய பின்பும் கூட, அதே வெள்ளை முயலை அப்படியே வாசகனும் காண்கிறான். இத்தகைய பரிசுத்தமான தொலையுணர்வு, எழுத்துக் கலையின் பிரமிக்கத்தக்க அம்சம். எனவே, எழுத்தாளனின் விவரிப்பு முக்கியம். அது மிகவும் விலாவரியாகவும் இருக்கக் கூடாது. மிகவும் மேலோட்டமாகவும் இருக்கக் கூடாது. இரண்டிற்கும் நடுவே, நிறைத்தராசினைப் போன்ற ஒரு சமநிலை முக்கியம்.எழுத்து என்பது விளையாட்டுத்தனம் அல்ல; எழுத்து மேஜைக்கு வரும் போது, அர்ப்பணிப்பு உணர்வுடன் வர வேண்டும். எழுத்தினைப் பற்றிய ஒரு உன்னதமான, பெருநோக்கம் அவசியம். அத்தகைய ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் எழுதினால், அந்த எழுத்து வாசகர்களால் புறக்கணிக்கப் படும். எழுத்துக் கலைக்கு நேர்மையுடனும், உண்மையுடனும் இருக்க வேண்டும்.தச்சர் எவ்வாறு எங்கு சென்றாலும், தனது உபகரணப் பெட்டியைக்கொண்டு செல்கிறாரோ, அவ்வாறே எழுத்தாளருக்கும் உபகரணப் பெட்டி அவசியம். அந்த உபகரணப் பெட்டியில், பல தளங்கள் உண்டு. அந்த உபகரணப் பெட்டியில், எவ்வளவு உபகரணங்களை வைத்துள்ளாரோ, அதற்கேற்றவாறு, அவரால் பல விதமான களங்களை கையாள முடியும்.பொதுவான உபகரணங்கள் மேல்தளத்தில் இருக்கும்.சொற்களஞ்சியம் (Vocabulary) முக்கியம். சிலருக்கு வளமாகவும், சிலருக்கு எளிமையான வார்த்தைகளாகவும் இருக்கும். இந்த சொற்களஞ்சியத்தை மேம்படுத்த, நிறைய படிக்க வேண்டும். படிப்பதன் மூலம், அதிக சொற்கள் பரிச்சயப்பட்டு, சொற்களஞ்சியத்தை மேம்படுத்த முடியும்.இலக்கணம் (grammar): சொற்றொடர்கள் இலக்கண சுத்தமாக முழுமையாக எழுத வேண்டும். குறைந்தபட்சம் எழுவாய், வினை என்றாவது இருக்க வேண்டும்.செயல்வினையில் எழுத வேண்டும்; செயல்வினையில் எழுதுவது அழுத்தம் திருத்தமாக இருக்கும். செயல்பாட்டு வினையில் எழுதுவது பலவீனமாக இருக்கும்.7 மணிக்கு சந்திப்போம். - செயல்வினை7 மணிக்கு நமது சந்திப்பு நடத்தப்படும் - செயல் பாட்டுவினைவினையடைகளைத் தவிர்க்க வேண்டும்; வினையடை களுக்குப் பதிலாக, அதனை உரையாடலில் கொண்டு வரவேண்டும். 'எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்' என்றாள் வள்ளி குதூகலமாக. - இங்கு குதூகலமாக என்பது வினையடை.'ஹையா. எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்' என்றாள் வள்ளி. - இங்கு உரையாடலில் வினையடையின் உணர்வு கொண்டுவரப்படுகிறது.எழுத்தாளரின் உபகரணப் பெட்டியின் கீழ்த்தளத்தில்... நடை, கதையின் கட்டமைப்பு போன்றவை உள்ளடங்கும். சிறிய பத்திகளாக புத்தகம் இருக்க, படிப்பது எளிதாகும். கதையில் பத்திகள் குறிப்பிட்ட தலைப்பில் தொடங்கி, தலைப்பினை முடித்து, அடுத்த தலைப்பிற்கு நகர வேண்டியதில்லை. கதைக்கு ஏற்றவாறு பத்திகள் பயணிக்கும். கதைகள் எழுதும்போது, கட்டுரையைப் போல், பத்திகள் ஒரு குறிப்பிட்ட வரையறையில் இருக்க வேண்டியதில்லை. எழுதும் கலையின் அடிப்படை பத்திகள்தான். சொற்றொடர்கள் அல்ல.வார்த்தைக்கு எடை உண்டு; ஒவ்வொரு வார்த்தைக்கும் எடை உண்டு. சரியான வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் அவசியமான வார்த்தைகளாக கதையில் இருக்கவேண்டும். வார்த்தைகளைக் கொண்டு, பிரம்மாண்ட படைப்புகள் படைக்க முடியும்.தினமும் எழுதுங்கள்; தினமும் எழுதாவிட்டால், உங்களது கதாபாத்திரங்கள் உங்கள் மனதில் துருப்பிடிக்கத் தொடங்கிவிடுவார்கள். துடிப்பு குறைந்துவிடும். குறைந்த பட்சம் 10 தாள்கள் எழுதுங்கள். குறைந்தபட்சம் 2000 வார்த்தைகள் எழுதுங்கள். அமைதியான இடத்தில் எழுதுங்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுதுங்கள். கற்பனை குதிரை வரும். உங்களுக்கு பிடித்ததை எழுதுங்கள். எழுத்தாளர்கள் உங்களை விட, எந்த விதத்திலும் வித்தியாசமானவர்கள் இல்லை..கதைக்கு நடை, விவரிப்பு, உரையாடல் என்ற மூன்று அங்கங்கள் உண்டு. நடை ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கதையினை நகர்த்துகிறது. விவரிப்பு , புலன்கள் சார்ந்த காட்சியமைப்பைக் கொண்டு வருகிறது. உரையாடல், கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் கண் முன்னே கொண்டு வருகிறது. கதையமைப்பு (plot) என்ற ஒன்று கிடையாது. கதை இப்படித்தான் நகர வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்தால், கதையின் தன்னியல்பான நகர்தல் (spontaneity) நடக்காது. வாழ்க்கை என்பதும் தன்னியல்பான நகர்தல் சார்ந்ததுதானே.கதை எழுதும்போது, இரண்டு வரைவு மற்றும் ஒரு மெருகேற்றல் அவசியம்; முதல் வரைவு உங்களுக்காக எழுதுகிறீர்கள். இரண்டாவது வரைவு வாசகர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கிறீர்கள்.முதல் வரைவு - 10%. முதல் வரைவு, எவ்வளவு வேகமாக எழுத முடியுமோ, எழுதப் பாருங்கள். 6 வாரம் இடைவெளி விட்டு, இரண்டாவது வரைவைத் தொடங்குங்கள். அப்போது கதையில் உள்ள ஓட்டைகள் உங்களுக்கு புலனாகும். கதாபாத்திரங்களின் நோக்கம் சரியாக உள்ளதா, அதற்கேற்ற காட்சிகள் உள்ளதா என்று பார்த்து சரிசெய்யுங்கள்.பின்புலம், கதாபாத்திரங்களின் குணாதிசய வடிவமைப் பிற்கு உதவுகிறது; கதையில் தேவைப்படும் இடத்தில் பின்புலத்தை சேர்க்கவேண்டும். அது மிகவும் நீண்டு இருக்கக்கூடாது. வாசகர்கள் கதையில், முன்பு என்ன நடந்தது என்பதை விடவும், எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். பின்புலம், கதாபாத்திரங்களின் நோக்கத்தினைப் புரிந்துக் கொள்ள உதவுகிறது.முடிந்தால் இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.