

2012 ஆம் ஆண்டு, மங்கையர் மலர் இதழில், 'இனிய இயற்கை மருத்துவம்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
ஆரோக்கியத்துக்கும் நமது வாழ்க்கை முறைக்கும் உள்ள தொடர்பு பற்றி இந்த மாதம் பார்ப்போம். இதில் உழைப்பு, உடை, வாழ்விடம் ஆகியன முக்கியமான பிரிவுகளாகும்.
இயற்கை விதிப்படி, உழைப்பு என்பது நீரையும் உணவையும் தேடுதலேயாகும். நிலத்திற்குள் இருக்கும் நீரானது, மரம், செடி, கொடிகளுக்கு மட்டுமே சொந்தமானது. அவற்றின் வேர்கள் உறிஞ்சுவதற்கேற்ற வகையில்தான், மண் துகள்களுக்கிடையில் நீர் மூலக்கூறுகள் தேங்கி இருக்கும்.
மனிதனோ மிருகமோ, தனது நீர் தேவைக்கு ஆறுகளையும் ஓடைகளையும் நாடிச் செல்வதுதான் இயற்கையின் நியதி. அதாவது, உணவையும் நீரையும் தேடித் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது இயற்கையாகவே உடல் முழு ஆரோக்கியமானதாக இருக்கும்.