

2012 ஆம் ஆண்டு, மங்கையர் மலர் இதழில், 'இனிய இயற்கை மருத்துவம்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
வாழ்விடம் என்பதில் உண்டு, உறங்கி வாழும் வீடே முக்கியமானதாகும். வீட்டிற்கு அருகில் திறந்தவெளியில் அல்லது மேற்கூரை மட்டுமே உள்ள இடத்தில் இரவு முழுவதும் தூங்கும் வாய்ப்பு, பெரும் பாக்கியசாலிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.
அதற்கடுத்து பனை மற்றும் தென்னை ஓலைகளாலும், சுட்ட மண் ஓடுகளாலும் இரு அடுக்காக வேயப்பட்ட மேற்கூரைகள் சிறப்பானவை. இவற்றில் நிறைய ஜன்னல்களைக் கொண்ட அறைகளில் தூங்குவது நல்லது. அறையின் பக்கவாட்டுச் சுவர்களுக்கும் மேற்கூரைக்கும் சுமார் அரை அடி இடைவெளி இருப்பது மேலும் சிறப்பு.