

2012 ஆம் ஆண்டு, மங்கையர் மலர் இதழில், 'இனிய இயற்கை மருத்துவம்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
எந்தெந்த காரணங்களால் உடல் எடை அதிகமாகிறது என்பதையும், அதனால் வரும் உடல்நல அபாயங்களையும், இவற்றைப் பாதுகாப்பாக நீக்கும் இயற்கை மருத்துவ அணுகுமுறைகள் பற்றியும் பார்ப்போம்...
சிறிய மண் தொட்டியில் வளரும்போது ஒரு செடி 100 அல்லது 200 கிராம் எடை இருக்கிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களையும் தகுந்த விகித்தில் பெற்று, அது வளருகிறது. அந்தச் செடியானது, பத்து வருட வளர்ச்சியில் பெரிய மரமாகும்போது டன் கணக்கில் எடை அதிகரித்து விடுகிறது.
அந்த மரத்தை கவனமாகப் பிடுங்கி வெயிலில் காயவைத்தால், தனது பெருமளவு எடையை இழந்து விறகாகி விடுகிறது. பின் அதனைத் தீயிட்டு எரித்தால், முடிவில் மிக குறைந்த எடையில் சாம்பல் மட்டுமே கிடைக்கிறது.