கவிதைத் தூறல்: உன்னதம்!

Kavithai
Kavithai
Published on

-எஸ்.பவானி, திருச்சி

பாலின் உன்னதம்

அருந்தும் கன்றுக்கு

மட்டுமே தெரியும்

கறக்கும் வியாபாரிக்கு

தெரியாது!

__________________________________

அர்த்தம்

வாடி என்று

கணவர் செல்லமாய்

அழைத்தால் கனிவு!

உரத்துச் சொன்னால்

கட்டளை!

ஒரே சொல்லின்

உச்சரிப்பு தருகிறது

மாறுபட்ட அர்த்தம்.

___________________________________

குறட்டை

அவர் அதை செலவழிக்கவில்லை

பிறருக்கு கொடுக்கவும் மனமில்லை

நாய் உருட்டும் தேங்காய் என

பணம் பாதாளத்தில் குறட்டை விடுகிறது.

__________________________________

அழுகையும் சிரிப்பும்

உயிரிழந்த பிரமுகரின்

இல்லத்தில் சோகம்

மயானத்தில்

வெட்டியானுக்கு

அமோக வருமானம்

அழுகையும் சிரிப்பும்

ஒரே நேரத்தில்.

___________________________________

பயம்

பூட்டை உடைத்து

தைரியமாய் நுழையும் திருடன்

திறந்திருந்த

வீட்டிற்குள் நுழைய

பயம் கொள்கிறான்

____________________________________

அரசியல்

காரியம் கைகூட

காலில் விழுவது

தப்பே இல்லை

என்கிறது அரசியல்

முதல் பாடம்.

___________________________________

இக்கவிதை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com