கவிதைத் தூறல்: உன்னதம்!

Kavithai
Kavithai
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

-எஸ்.பவானி, திருச்சி

பாலின் உன்னதம்

அருந்தும் கன்றுக்கு

மட்டுமே தெரியும்

கறக்கும் வியாபாரிக்கு

தெரியாது!

__________________________________

அர்த்தம்

வாடி என்று

கணவர் செல்லமாய்

அழைத்தால் கனிவு!

உரத்துச் சொன்னால்

கட்டளை!

ஒரே சொல்லின்

உச்சரிப்பு தருகிறது

மாறுபட்ட அர்த்தம்.

___________________________________

குறட்டை

அவர் அதை செலவழிக்கவில்லை

பிறருக்கு கொடுக்கவும் மனமில்லை

நாய் உருட்டும் தேங்காய் என

பணம் பாதாளத்தில் குறட்டை விடுகிறது.

__________________________________

அழுகையும் சிரிப்பும்

உயிரிழந்த பிரமுகரின்

இல்லத்தில் சோகம்

மயானத்தில்

வெட்டியானுக்கு

அமோக வருமானம்

அழுகையும் சிரிப்பும்

ஒரே நேரத்தில்.

___________________________________

பயம்

பூட்டை உடைத்து

தைரியமாய் நுழையும் திருடன்

திறந்திருந்த

வீட்டிற்குள் நுழைய

பயம் கொள்கிறான்

____________________________________

அரசியல்

காரியம் கைகூட

காலில் விழுவது

தப்பே இல்லை

என்கிறது அரசியல்

முதல் பாடம்.

___________________________________

இக்கவிதை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

logo
Kalki Online
kalkionline.com