தினம் தினம் பூக்கும் மலராக விளங்கும் மங்கையர் மலர்.

தினம் தினம் பூக்கும் மலராக விளங்கும்  மங்கையர் மலர்.
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on

43 வருடங்களாக தொடர்ந்து மங்கையர் மலருடன் பயணித்து வருவது மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும் உள்ளது. தொடர்ந்து  எழுதுவதில் ஆர்வம் சற்று கூட குறையைல்லை. அதே ஆர்வம் இன்றளவும் தொடர்வது நான் செய்த பெரும் பாக்கியம் என்று எண்ணுகிறேன். தினம் தினம் பூக்கும் மலராக விளங்கும்  மங்கையர் மலரின், 92 வயது வரையில் வாழ்ந்த என் மாமியார் தீவிர வாசகியாக இருந்தார் என்பதைப் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். பல ஆண்டுகளாக வாசகிகளைக்  கட்டிப் போட்டிருக்கும் வசீகரம் இம்மலருக்கே உரிய தனிச்சிறப்பு என்றால் அது மிகையாகாது. பெங்களூரில் பல வருடங்கள் முன்பு நடிகை மனோரமா தலைமையில்  நடந்த மங்கையர் மலர் வாசகர்கள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு நிறைய பரிசு பெற்றது இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது. மங்கையர் மலர் நூறாண்டு காலம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

logo
Kalki Online
kalkionline.com