
தேவையான பொருட்கள்:
நேந்திரம் பழம் – 4, நெய் - 5 ஸ்பூன், வெல்லம் - 300 கிராம், தேங்காய்த் துருவல் – 1 கப், பால் – 1 கப், ஏலப்பொடி – ½ ஸ்பூன், முந்திரி - 10.
செய்முறை:
நேந்திரப் பழத்தைப் பெரிய துண்டுகளாக்கிக் கொதிநீரில் போட்டு வேகவைத்து எடுத்துத் தோல் நீக்கி நன்கு மசித்துக்கொள்ளவும். கடாயில் 4 ஸ்பூன் நெய் விட்டுக் காய்ந்ததும் மசித்த பழத்தைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு இத்துடன் துருவிய தேங்காய், வெல்லம், பால் சேர்த்து நன்கு கிளறி கொதிக்கவிடவும். தேவையானால் ¼ கப் தண்ணீர் சேர்க்கவும் அல்லது பால். மேலும் ½ கப் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி விடவும். ஏலப்பொடியையும் கொதிக்கும்போதே சேர்த்து விடவும். பிறகு நெய்யில் முந்திரியைத் துண்டுகளாக்கி வறுத்துச் சேர்த்துச் சூடாகப் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.