ஏக்கம்!

ஏக்கம்!

கவிதை
Published on

ந்தையின் கைப்பிடித்து

பள்ளி சென்றபோது

பொறாமையாக இருந்தது

ரிக்ஷாவில் வந்த

சகமாணவர்களைக் கண்டு!

சைக்கிளில் கல்லூரி

சென்றபோது ஏக்கம்

‘பைக்’கில் வந்த

மாணவர்களைக் கண்டு!

‘பைக்’கில் அலுவலகம்

சென்றபோது பொறாமை

காரில் வந்தவர்கள் மீது!

ணமாகி மழலைச் செல்வம்

இல்லாதபொது ஏக்கம்

பிள்ளை பெற்றவர்களைக் கண்டு!

பெற்ற பிள்ளைகள்

காதலில் விழுந்து

சொன்ன பேச்சை கேட்காமல்

பிரிந்து சென்றபோது

பொறாமை

கீழ்படியும் பிள்ளைகளைப்

பெற்றவர் மீது!

யதாகி நோயுற்று

உறவினர்களிடம்

உதாசீனப்பட்டு

உழல்கையில்

பொறாமையாக உள்ளது

வீதியில் செல்லும்

சவ ஊர்வலங்களைக் கண்டு!

- ஆர். ரகோத்தமன், ஸ்ரீபெரும்புத்தூர்

logo
Kalki Online
kalkionline.com