- வெங்கடராமன் ராமசுப்ரமணியன்பயணக் கட்டுரைகள் , பயணங்கள் சார்ந்த இலக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயணங்கள் மனிதனின் பார்வையினை விரிவாக்குகின்றன. கிணற்றுத் தவளையாக இருந்த மனிதன், பயணிக்கும் போது, சமுத்திர தவளையாக மாறுகிறான். அவனது கண்ணோட்டம் விரிகிறது. குறுகிய மனப்பான்மை அழிகிறது. மக்களின் கலாசாரம், வாழ்க்கை முறை, திருவிழா, உணவு, உடை, இருப்பிடம், நம்பிக்கை என மற்றொரு சமூகத்தினை மூன்றாவது நபர் பார்வையில் பார்க்கும் மனிதன், தன்னை மேம்படுத்திக்கொள்கிறான். பால், சாதி, மதம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டி, அவன் தன்னை உலகின் ஜீவராசிகளில் ஒன்றாக ஐக்கியப்படுத்திக் கொண்டு, உலகத்தின் அங்கமாக மாறுகிறான்.தமிழில் முதல் பயண இலக்கியம் 1888ம் ஆண்டே துவங்கிவிட்டது. சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு அவர்கள் எழுதிய ஆரிய திவ்யதேச யாத்திரையின் சரிதம், தமிழின் முதல் பயண இலக்கியம் எனப்படுகிறது. கல்கி, தேவன் போன்ற ஜாம்பவான்களும் பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். அதன் பின்னர், இதயம் பேசுகிறது மணியன் ஏறத்தாழ எல்லா நாடுகளுக்கும் சென்று பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தொ.மு. பாஸ்கர தொண்டைமான், பரணீதரன் போன்றவர்களும் நிறைய பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இப்போதும் கூட, இணையத்தில் வெங்கட் நாகராஜ் போன்ற எழுத்தாளர்கள் அருமையான பயணக் கட்டுரைகளை எழுதி, அதனைப் புத்தகமாகவும் வெளியிடுகின்றனர்..நீங்களும் பயணக்கட்டுரை எழுதுவதற்கு, இதோ சில குறிப்புகள்: 1.பயணத்தில் குறிப்பேடு வைத்திருங்கள்; பயணத்தில் கேட்கும் விஷயங்கள், பார்த்த விஷயங்கள் போன்றவற்றைக் குறிப்பேட்டில் அவ்வப்பொழுது குறித்துக்கொள்ளுங்கள். சுற்றுலா வழிகாட்டி குறிப்பிடும் அருமையான தகவல்களை, வரலாற்று குறிப்புகளைக் குறித்துக்கொள்ளுங்கள். விழிப்புடன் இருந்து, பயணத்தினை அனுபவியுங்கள். உங்களது பார்வைக் கோணங்களைக் குறித்துக்கொள்ளுங்கள். மேலும், புகைப்படம், காணொலி போன்றவற்றைப் பதிவாக்கிக்கொள்ளுங்கள். சுற்றுலாத் தலத்தில் கிடைக்கும் குறிப்பேடுகளை, புத்தங்கங்களை வாங்கிப் பத்திரப்படுத்துங்கள். சுற்றுலாத் தலம் குறித்து கேள்வி எழுப்பி, அதற்கு விடையினைக் குறித்துக்கொள்ளுங்கள். உள்ளூர் மக்களுடன் உரையாடி, அவர்களது வாழ்க்கையைப் பற்றிப் புரிந்துக்கொள்ளுங்கள். 2.பயணத்திற்கு முன்கூட்டியே, சுற்றுலாத் தலத்தினைக் குறித்து இணையத்தில் ஆராய்ந்து வைத்திருங்கள்; இவ்வாறு முன்கூட்டியே ஆராய்ந்து வைத்திருந்தால், சுற்றுலாத் தலத்தினை நோக்கிச் செல்லும்போது, அதனை நம்மால் இன்னும் நன்றாக உணர்ந்து, லயிக்க முடியும். தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்ட விஷயங்களைக் குறித்து அறிந்து, தஞ்சை பெரியக்கோயில் சென்றால், அதன் பிரம்மாண்டம் நமக்கு இன்னும் அதிகமாகப் பிரமிப்பு ஊட்டும். அதற்குப் பின்னே உள்ள உழைப்பு, கண் முன் விரியும். இவ்வாறு ஆராய்வது, சுற்றுலாவில் மேலும் சில இடங்களைச் செல்லும் வழியில் காண வழிவகுக்கும். 3.சுற்றுலா கட்டுரையை தன்னிலையில்(first person) எழுதுங்கள்; உங்களது சுற்றுலாக் கட்டுரை, வாசகருக்கு பயன்பட வேண்டும். தன்னிலையில் எழுதும்போது, கதை போன்ற விவரணை எளிதில் கிட்டும். கட்டுரையின் மீதான நம்பகத்தன்மை கூடும். உங்களோடு பயணித்த அனுபவம் வாசகருக்குக் கிட்டும். உங்களது பயணத்தின் மூலம், வாசகர்கள் தங்களது பயணத்தினை திட்டமிட ஏதுவாக இருக்கும்..4.சுற்றுலாக் கட்டுரை அடிப்படையில் முன்று பாகங்களைக் கொண்டிருக்க வேண்டும் - தொடக்கவுரை, பொருளுரை, முடிவுரை. இதன் மூலம், வாசகருக்கு, பயணத்தின் புரிதல் விரிவுபடும். தொடக்கவுரை(introduction); சுற்றுலாத் தலம் நீங்கள் ஏன் சென்றீர்கள்? அதனை நோக்கி உங்களைத் தூண்டிய உந்துசக்தி (motivation) எது? அதனைத் தீவிரப்படுத்திய கிரியாசக்தி (catalyst) எது? போன்றவற்றை இங்கு கூறுவதன்மூலம், வாசகனுக்கும் அந்த உந்துதல் கடத்தப்படுகிறது.பொருள் (body): சுற்றுலாத் தலத்தில் உங்களது அனுபவங்கள், சுற்றுலாத் தலத்தின் பின்புல வரலாறு, சந்தித்த நபர்கள், சுவாரசிய விஷயங்கள் போன்றவற்றை இங்கு நீங்கள் விளக்கலாம்.முடிவுரை (conclusion): சுற்றுலாத் தலத்தின் மொத்த அனுபவங்களின் சாராம்சத்தை நீங்கள் எழுதலாம். அந்த இடத்தில் நீங்கள் எத்தகைய அனுபவத்தைப் பெற்றீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அந்த தலத்தினைப் பரிந்துரைக்கிறீர்களா இல்லையா என்பதைப் போன்ற விஷயங்கள் நீங்கள் குறிப்பிடலாம்..5.காலக்கிரமத்துடன் (Chronological) கட்டுரையை எழுதுங்கள்; காலக்கிரமத்துடன் விவரிக்கும்போது, அருமையான ஒரு பயணக்கட்டுரை அமைகிறது. இல்லையேல், முன்னும் பின்னும் கட்டுரை பயணித்தால், வாசகருக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள் பயணித்த விஷயத்தைக் காலை முதல் மாலை வரை, முதல் நாள், அடுத்தநாள் என்று காலக்கிரமத்துடன் விவரிக்க பயணக் கட்டுரையில் வாசகர் உங்களுடன் பயணிப்பது எளிதாகிறது. முடிந்தால், சேர்ந்த நாள் திங்கட்கிழமை, திரும்பியநாள் வெள்ளிக்கிழமை என்று கிழமை வாரியாக எழுதினால், வாசகர்களுக்குப் புரிவது எளிதாகும். அங்கங்கு சுற்றுலாத்தலத்தின் பின்புலம், வரலாறு போன்றவற்றை இணைத்து எழுதும்போது, அந்தச் சுற்றுலாத் தலத்தின் புரிதல் வாசகனுக்கு அதிகமாகும்.6.பயணக் கட்டுரையில் மிக முக்கிய நபர், சுற்றுலாத் தலமல்ல, நீங்கள் தான்; ஒரு சுற்றுலாத்தலத்தினைப் பற்றி பல்வேறு கட்டுரைகள் இருக்கும். அரைத்த மாவையே அரைத்தால் வாசகர் வெறுத்து விடுவார். ஒரு வாசகர் உங்களுடைய கட்டுரையைப் படிப்பது, அந்த சுற்றுலாத் தலத்தினைப் பற்றிய உங்களுடையப் பரிமாணத்தை, உணர்வுகளை, புரிதலை அறிந்துக் கொள்வதற்காகவே. எனவே, உங்களுடைய நோக்கில், பார்வையில், பயணக்கட்டுரையை எழுதுங்கள். நீங்கள் எடுத்தப் புகைப்படங்களை இணையுங்கள். இவை உங்களது கண்ணோட்டத்தை வாசகனுக்கு காட்சிப்படுத்தும்..7.உண்மையை மட்டும் எழுதுங்கள்; சுற்றுலாத் தலத்திற்கு அருகில் ஒரு இடம் பிரபலமாக இருந்தாலும், அங்கு நீங்கள் செல்லவில்லையெனில் அதைப் பற்றி எழுத வேண்டாம். செல்லாத இடத்தைப் பற்றி உங்களுடையப் பார்வை தவறாக இருக்க வாய்ப்பு அதிகம். செல்லாத இடங்களை மட்டும் குறிப்பிட்டு, முடிந்தால், அதனைச் சுற்றிப் பார்க்குமாறு கூறுங்கள். மேலோட்டமாக, விளையாட்டுத்தனமாக எழுதாதீர்கள். 8.பயணம் சென்று வந்து விட்டவுடன், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பயணக் கட்டுரை எழுதுங்கள். அவ்வாறு எழுதும்போது, உங்களுடைய நினைவுகள் பசுமையாக இருக்கும். நினைவு கூறுவது எளிது..9.சுற்றுலா தலத்திற்குத் தயாராவது, பயணத்தின்போது செய்யவேண்டியது குறித்து எழுதுங்கள்; சுற்றுலாத் தலத்திற்கு சரியான சீதோஷ்ண நிலை எப்போது, எவ்வாறு அங்கு பயணிக்கத் தயாராக வேண்டும்? வெளிநாடு என்றால் எவ்வாறு அனுமதி சீட்டு வாங்குவது? சுற்றுலாத் தலத்தில் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது எவை? சுற்றுலாத் தலத்தில் தங்குவதற்கு , உணவு அருந்துவதற்கு நல்ல விடுதிகள், உணவகங்கள் எவை? மேலும் அவற்றிற்கு ஆகும் செலவுகள் எவ்வளவு? சுற்றுலாத் தலத்தில் கண்டிப்பாக வாங்க வேண்டிய பொருட்கள் எவை? போன்றவற்றைக் குறிப்பிட, வாசகர்கள் தங்களைத் தயார் படுத்திக்கொள்வது எளிதாகும்.10.சுற்றுலாத் தலத்தினைக் குறித்து உணர்வுபூர்வமாக எழுதுங்கள்; பயணக் கட்டுரையில் நீங்கள் சந்தித்த நபர்கள், சுவாரசியமான உரையாடல்கள், நினைவு கூரத்தக்க நிகழ்வுகள் போன்றவற்றை உணர்வுப் பூர்வமாக எழுதுங்கள். பயணக் கட்டுரை திசைகாட்டி மரம் அல்ல. சுற்றுலாத் தலத்தின் கலாச்சாரம், உணவு, உடை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கை சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் தலம். அந்த கலாசாரத்தில் உங்களுக்கு ஏற்புடைமை இல்லாவிட்டால், அதனைப் பழித்து, வாசகர்களிடம் உங்களது வெறுப்பினைத் திணிக்காதீர்கள். நடுநிலைமை முக்கியம். நகைச்சுவையை முடிந்த அளவு இணையுங்கள். அது கட்டுரையை இன்னும் சுவாரசியமாக்கும்.தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இப்போது அதிகம் பயணிக்கின்றனர். எதிர்காலத்தில், பயணக்கட்டுரைகள் தமிழில் மேன்மேலும் வளரும் என நம்புவோம்.
- வெங்கடராமன் ராமசுப்ரமணியன்பயணக் கட்டுரைகள் , பயணங்கள் சார்ந்த இலக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயணங்கள் மனிதனின் பார்வையினை விரிவாக்குகின்றன. கிணற்றுத் தவளையாக இருந்த மனிதன், பயணிக்கும் போது, சமுத்திர தவளையாக மாறுகிறான். அவனது கண்ணோட்டம் விரிகிறது. குறுகிய மனப்பான்மை அழிகிறது. மக்களின் கலாசாரம், வாழ்க்கை முறை, திருவிழா, உணவு, உடை, இருப்பிடம், நம்பிக்கை என மற்றொரு சமூகத்தினை மூன்றாவது நபர் பார்வையில் பார்க்கும் மனிதன், தன்னை மேம்படுத்திக்கொள்கிறான். பால், சாதி, மதம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டி, அவன் தன்னை உலகின் ஜீவராசிகளில் ஒன்றாக ஐக்கியப்படுத்திக் கொண்டு, உலகத்தின் அங்கமாக மாறுகிறான்.தமிழில் முதல் பயண இலக்கியம் 1888ம் ஆண்டே துவங்கிவிட்டது. சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு அவர்கள் எழுதிய ஆரிய திவ்யதேச யாத்திரையின் சரிதம், தமிழின் முதல் பயண இலக்கியம் எனப்படுகிறது. கல்கி, தேவன் போன்ற ஜாம்பவான்களும் பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். அதன் பின்னர், இதயம் பேசுகிறது மணியன் ஏறத்தாழ எல்லா நாடுகளுக்கும் சென்று பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தொ.மு. பாஸ்கர தொண்டைமான், பரணீதரன் போன்றவர்களும் நிறைய பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இப்போதும் கூட, இணையத்தில் வெங்கட் நாகராஜ் போன்ற எழுத்தாளர்கள் அருமையான பயணக் கட்டுரைகளை எழுதி, அதனைப் புத்தகமாகவும் வெளியிடுகின்றனர்..நீங்களும் பயணக்கட்டுரை எழுதுவதற்கு, இதோ சில குறிப்புகள்: 1.பயணத்தில் குறிப்பேடு வைத்திருங்கள்; பயணத்தில் கேட்கும் விஷயங்கள், பார்த்த விஷயங்கள் போன்றவற்றைக் குறிப்பேட்டில் அவ்வப்பொழுது குறித்துக்கொள்ளுங்கள். சுற்றுலா வழிகாட்டி குறிப்பிடும் அருமையான தகவல்களை, வரலாற்று குறிப்புகளைக் குறித்துக்கொள்ளுங்கள். விழிப்புடன் இருந்து, பயணத்தினை அனுபவியுங்கள். உங்களது பார்வைக் கோணங்களைக் குறித்துக்கொள்ளுங்கள். மேலும், புகைப்படம், காணொலி போன்றவற்றைப் பதிவாக்கிக்கொள்ளுங்கள். சுற்றுலாத் தலத்தில் கிடைக்கும் குறிப்பேடுகளை, புத்தங்கங்களை வாங்கிப் பத்திரப்படுத்துங்கள். சுற்றுலாத் தலம் குறித்து கேள்வி எழுப்பி, அதற்கு விடையினைக் குறித்துக்கொள்ளுங்கள். உள்ளூர் மக்களுடன் உரையாடி, அவர்களது வாழ்க்கையைப் பற்றிப் புரிந்துக்கொள்ளுங்கள். 2.பயணத்திற்கு முன்கூட்டியே, சுற்றுலாத் தலத்தினைக் குறித்து இணையத்தில் ஆராய்ந்து வைத்திருங்கள்; இவ்வாறு முன்கூட்டியே ஆராய்ந்து வைத்திருந்தால், சுற்றுலாத் தலத்தினை நோக்கிச் செல்லும்போது, அதனை நம்மால் இன்னும் நன்றாக உணர்ந்து, லயிக்க முடியும். தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்ட விஷயங்களைக் குறித்து அறிந்து, தஞ்சை பெரியக்கோயில் சென்றால், அதன் பிரம்மாண்டம் நமக்கு இன்னும் அதிகமாகப் பிரமிப்பு ஊட்டும். அதற்குப் பின்னே உள்ள உழைப்பு, கண் முன் விரியும். இவ்வாறு ஆராய்வது, சுற்றுலாவில் மேலும் சில இடங்களைச் செல்லும் வழியில் காண வழிவகுக்கும். 3.சுற்றுலா கட்டுரையை தன்னிலையில்(first person) எழுதுங்கள்; உங்களது சுற்றுலாக் கட்டுரை, வாசகருக்கு பயன்பட வேண்டும். தன்னிலையில் எழுதும்போது, கதை போன்ற விவரணை எளிதில் கிட்டும். கட்டுரையின் மீதான நம்பகத்தன்மை கூடும். உங்களோடு பயணித்த அனுபவம் வாசகருக்குக் கிட்டும். உங்களது பயணத்தின் மூலம், வாசகர்கள் தங்களது பயணத்தினை திட்டமிட ஏதுவாக இருக்கும்..4.சுற்றுலாக் கட்டுரை அடிப்படையில் முன்று பாகங்களைக் கொண்டிருக்க வேண்டும் - தொடக்கவுரை, பொருளுரை, முடிவுரை. இதன் மூலம், வாசகருக்கு, பயணத்தின் புரிதல் விரிவுபடும். தொடக்கவுரை(introduction); சுற்றுலாத் தலம் நீங்கள் ஏன் சென்றீர்கள்? அதனை நோக்கி உங்களைத் தூண்டிய உந்துசக்தி (motivation) எது? அதனைத் தீவிரப்படுத்திய கிரியாசக்தி (catalyst) எது? போன்றவற்றை இங்கு கூறுவதன்மூலம், வாசகனுக்கும் அந்த உந்துதல் கடத்தப்படுகிறது.பொருள் (body): சுற்றுலாத் தலத்தில் உங்களது அனுபவங்கள், சுற்றுலாத் தலத்தின் பின்புல வரலாறு, சந்தித்த நபர்கள், சுவாரசிய விஷயங்கள் போன்றவற்றை இங்கு நீங்கள் விளக்கலாம்.முடிவுரை (conclusion): சுற்றுலாத் தலத்தின் மொத்த அனுபவங்களின் சாராம்சத்தை நீங்கள் எழுதலாம். அந்த இடத்தில் நீங்கள் எத்தகைய அனுபவத்தைப் பெற்றீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அந்த தலத்தினைப் பரிந்துரைக்கிறீர்களா இல்லையா என்பதைப் போன்ற விஷயங்கள் நீங்கள் குறிப்பிடலாம்..5.காலக்கிரமத்துடன் (Chronological) கட்டுரையை எழுதுங்கள்; காலக்கிரமத்துடன் விவரிக்கும்போது, அருமையான ஒரு பயணக்கட்டுரை அமைகிறது. இல்லையேல், முன்னும் பின்னும் கட்டுரை பயணித்தால், வாசகருக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள் பயணித்த விஷயத்தைக் காலை முதல் மாலை வரை, முதல் நாள், அடுத்தநாள் என்று காலக்கிரமத்துடன் விவரிக்க பயணக் கட்டுரையில் வாசகர் உங்களுடன் பயணிப்பது எளிதாகிறது. முடிந்தால், சேர்ந்த நாள் திங்கட்கிழமை, திரும்பியநாள் வெள்ளிக்கிழமை என்று கிழமை வாரியாக எழுதினால், வாசகர்களுக்குப் புரிவது எளிதாகும். அங்கங்கு சுற்றுலாத்தலத்தின் பின்புலம், வரலாறு போன்றவற்றை இணைத்து எழுதும்போது, அந்தச் சுற்றுலாத் தலத்தின் புரிதல் வாசகனுக்கு அதிகமாகும்.6.பயணக் கட்டுரையில் மிக முக்கிய நபர், சுற்றுலாத் தலமல்ல, நீங்கள் தான்; ஒரு சுற்றுலாத்தலத்தினைப் பற்றி பல்வேறு கட்டுரைகள் இருக்கும். அரைத்த மாவையே அரைத்தால் வாசகர் வெறுத்து விடுவார். ஒரு வாசகர் உங்களுடைய கட்டுரையைப் படிப்பது, அந்த சுற்றுலாத் தலத்தினைப் பற்றிய உங்களுடையப் பரிமாணத்தை, உணர்வுகளை, புரிதலை அறிந்துக் கொள்வதற்காகவே. எனவே, உங்களுடைய நோக்கில், பார்வையில், பயணக்கட்டுரையை எழுதுங்கள். நீங்கள் எடுத்தப் புகைப்படங்களை இணையுங்கள். இவை உங்களது கண்ணோட்டத்தை வாசகனுக்கு காட்சிப்படுத்தும்..7.உண்மையை மட்டும் எழுதுங்கள்; சுற்றுலாத் தலத்திற்கு அருகில் ஒரு இடம் பிரபலமாக இருந்தாலும், அங்கு நீங்கள் செல்லவில்லையெனில் அதைப் பற்றி எழுத வேண்டாம். செல்லாத இடத்தைப் பற்றி உங்களுடையப் பார்வை தவறாக இருக்க வாய்ப்பு அதிகம். செல்லாத இடங்களை மட்டும் குறிப்பிட்டு, முடிந்தால், அதனைச் சுற்றிப் பார்க்குமாறு கூறுங்கள். மேலோட்டமாக, விளையாட்டுத்தனமாக எழுதாதீர்கள். 8.பயணம் சென்று வந்து விட்டவுடன், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பயணக் கட்டுரை எழுதுங்கள். அவ்வாறு எழுதும்போது, உங்களுடைய நினைவுகள் பசுமையாக இருக்கும். நினைவு கூறுவது எளிது..9.சுற்றுலா தலத்திற்குத் தயாராவது, பயணத்தின்போது செய்யவேண்டியது குறித்து எழுதுங்கள்; சுற்றுலாத் தலத்திற்கு சரியான சீதோஷ்ண நிலை எப்போது, எவ்வாறு அங்கு பயணிக்கத் தயாராக வேண்டும்? வெளிநாடு என்றால் எவ்வாறு அனுமதி சீட்டு வாங்குவது? சுற்றுலாத் தலத்தில் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது எவை? சுற்றுலாத் தலத்தில் தங்குவதற்கு , உணவு அருந்துவதற்கு நல்ல விடுதிகள், உணவகங்கள் எவை? மேலும் அவற்றிற்கு ஆகும் செலவுகள் எவ்வளவு? சுற்றுலாத் தலத்தில் கண்டிப்பாக வாங்க வேண்டிய பொருட்கள் எவை? போன்றவற்றைக் குறிப்பிட, வாசகர்கள் தங்களைத் தயார் படுத்திக்கொள்வது எளிதாகும்.10.சுற்றுலாத் தலத்தினைக் குறித்து உணர்வுபூர்வமாக எழுதுங்கள்; பயணக் கட்டுரையில் நீங்கள் சந்தித்த நபர்கள், சுவாரசியமான உரையாடல்கள், நினைவு கூரத்தக்க நிகழ்வுகள் போன்றவற்றை உணர்வுப் பூர்வமாக எழுதுங்கள். பயணக் கட்டுரை திசைகாட்டி மரம் அல்ல. சுற்றுலாத் தலத்தின் கலாச்சாரம், உணவு, உடை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கை சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் தலம். அந்த கலாசாரத்தில் உங்களுக்கு ஏற்புடைமை இல்லாவிட்டால், அதனைப் பழித்து, வாசகர்களிடம் உங்களது வெறுப்பினைத் திணிக்காதீர்கள். நடுநிலைமை முக்கியம். நகைச்சுவையை முடிந்த அளவு இணையுங்கள். அது கட்டுரையை இன்னும் சுவாரசியமாக்கும்.தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இப்போது அதிகம் பயணிக்கின்றனர். எதிர்காலத்தில், பயணக்கட்டுரைகள் தமிழில் மேன்மேலும் வளரும் என நம்புவோம்.