கவிதை - இலக்கினை நோக்கு!

kavithai
kavithaiImage credit - pixabay
செ. கலைவாணி

செ.கலைவாணி ஓய்வுபெற்ற தமிழாசிரியை 'சிதறிய பரல்கள் கவிதை நூல்' அடர்வன மின்மினி துளிப்பா நூல் கலையும்கைவண்ணமும் கைவினை நூல் இம்மூன்று நூல்களை வெளியிட்டுள்ளேன் என் கவிதைகள் தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன முன்னணி பெண்கள் மாத வார மின்னிதழ்களில் முன்னணி செய்தித்தாள்களில் எனது கைவேலைகள் குறித்து செய்திகள் வந்துள்ளன. துளிப்பா பேரிகை விருது கவிப்பறவை விருது சதகக்கவிஞர் விருது கவித்தென்றல் விருது போன்று பலவிருதுகள் வாங்கியுள்ளேன். என் மூச்சுக் காற்றே தமிழன்னை தான் வாழ்நாள் முழுவதும் தமிழன்னைக்குக் கவிதையாரம் சூட்டுவதே என்பணி.

Updated on

வாழ்ந்திடப் பிறந்தோம்.

வாழ்வோம் ஏற்றமாய்.

சீலமுடன் வாழ்ந்தால்

சிறப்பாய் நிலைக்கலாம்.

நிலையாமை  நிலைத்த

நில்லா உலகிது.

இலக்கில்லா வாழ்க்கை

இனிமை தராது.

எப்படியும் வாழலாம்

என்பதே தவறு.

பிறரின் பின்னால்

போவதை நிறுத்து.

உனக்கென ஒருபாதை

உழைத்தே உருவாக்கிடு.

இன்னல் வந்துறுத்தும்

இடிந்து போகாதே.

உயர் இலக்கினை

மனதில்

உவந்தே கனவாக்கு.

இலக்கினை யடைந்திட

இரவுபகலாய் முயன்றிடு.

உச்சம் தொட்டிட

உடனே முடியாது.

தடையைப் படியாக்கி

தாண்டியே ஏறிடு.

வழக்கலும் சறுக்கலும்

வாகைசூட வழிகாட்டும்.

தன்னலம் பேணாதே

துவண்டே நிற்காதே.

நாட்டை உயர்த்திட

நாளும் பாடுபடு.

இலக்கினையடைந்தே

இன்பமாய் வாழ்ந்திடு.

பலரின் நினைவில்

பாங்காய்  நிலைத்திடு.

logo
Kalki Online
kalkionline.com