கவிதை - இளமை சொன்னதும் முதுமை மறுத்ததும்!

கவிதை...
கவிதை...
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on

இளமை சொன்னது

கடற்கரையில் கரம் கோர்த்து

கடைக்கண் பார்வை பார்த்து. 

கைபிடித்த ஸ்பரிசம் தந்த

மின்சாரம் தான் காதல் என்று

விண்ணை வளைத்து

அந்த வெண்ணிலவைப் பிடித்து

நிலவில் நின்று நீல வானம் தரும்

கனவு தான் காதல் என்று

மறுத்தது முதுமை

அதுமட்டுமல்ல காதல் என்று 

முதுமை எட்டிப் பார்க்கும்

முதல் அனுபவம் கூட காதல் தான் 

நிபந்தனை ஏதுமில்லா

நிரந்தர அன்பும் காதல் தான் 

இளமை தந்த கசப்பான அனுபவங்கள்

கற்றுத் தந்த பாடமும் கூட காதல் தான் 

கசப்பை கைக்குள் அடக்காது

காற்றில் பறக்க விட்டு 

துவண்டு விடாமல் துணை நிற்பதும்

முதிர்ந்த காதல் தான்

இளமைக் காதல் இனிக்கும் ஸ்பரிசம் என்றால்

முதுமைக்காதல் 

மனதுக்கு தரும் மருந்தும்

காதல் தான்.

logo
Kalki Online
kalkionline.com