சோலை மலரொளியோ நினது சுந்தரப்புன்னகை தான் நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீகோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீவாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்... இதுதான் எனக்குள் நான் வகுத்திருந்த எலிசபெத் மகாராணி. ஆம். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து எலிசபெத் மகாராணி பெயரும் அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அறியும் ஆவலும் மனதினுள் இருந்து கொண்டே இருக்கும். காரணம் எனது தாயின் பெயரும் எலிசபெத்.அதேபோல எனக்கு திருமணம் ஆகிய புதிதில் ஒரு மழை நேர மாலை. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கால்களில் சேறு பட்டு எனக்கோர் சங்கடம் தர மேலும் நடக்க இயலாமல் நான் பின்தங்கி நிற்க, "அட! பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வரயா? நீ என்ன எலிசபெத் மகாராணியா?’’ என கணவர் கிண்டல் செய்ய "ஆம் நான் எலிசபெத் மகாராணிதான்" என நெஞ்சு நிமிர்த்தி சொல்லி இருக்கிறேன்..இப்படி சாமானிய பெண்ணுக்கும் புரியும் தூரத்தில் வாழ்க்கைக்கோர் உதாரணமாக அவரைப் பார்க்கும் பார்வை இன்னும் ஆழமானது எனக்குள்.ஆளுமையின் அடையாளமாய் - நிறை வாழ்வின் எடுத்துக்காட்டாய்- மகாராணியினுள் ஒளிர்ந்த தாய்மையாய்- பெண் குலத்துக்கோர் முன்னோடியாய்... இப்படி பல கோணங்களில் பார்த்து ரசித்திருக்கிறேன் அவரை.. 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்த அவருக்கு தனது தந்தை வழி பூட்டி வழியில் அலெக்ஸாண்ரா என்றும், தந்தை வழி பாட்டி வழியே மேரி என்றும், தாய் வழியில் எலிசபெத் என்றும் முன்னோர்களின் பெயர் சேர்த்து "எலிசபெத் அலெக்ஸாண்ரா மேரி "என பெயர் சூட்டப்பட்டார். உறவின் மேன்மையை உணர்த்தும் இச்செயல் எப்போதும் என்னை புன்னகைக்க வைக்கும். உலகின் நீண்ட கால ராணி (70 ஆண்டுகள் 214 நாட்கள்) - 70 ஆண்டுகள் அரசாட்சி நடத்தி பவள விழா கண்டது - உலகின் மிகப்பெரிய பணக்கார மகாராணி - எப்போதும் கம்பீரத்துடன் வலம் வந்தது - மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வு - தனிப்பட்ட பிறந்தநாள் மற்றும் அதிகாரப்பூர்வ பொதுக்கொண்டாட்டம் என இரண்டு பிறந்தநாள் கொண்டவர்-காமன்வெல்த் தலைவராக இவரது முகம் முப்பத்து மூன்று நாடுகளின் நாணயங்களில் இடம் பெற்றிருப்பது - இவரது ராஜ கிரீடத்தில் கோஹினூர் வைரம் உட்பட 1,333 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது - 5300 ஜோடி அன்னப்பறவைகள் (லண்டன் தேம்ஸ் நதியில்) மற்றும் இங்கிலாந்து நீர் எல்லைகளுக்குட்பட்ட அனைத்து திறந்த நீர் மீன் வளத்திற்கு சொந்தக்காரர் - உலகின் மிகப்பெரிய தனியார் கலைத் தொகுப்பின் உரிமையாளர் - உலகின் மிகப்பெரிய தனிநபர் வீடு (பக்கிங்காம் அரண்மனை)... அவரைச் சார்ந்த சொத்துக்களும் மற்றவைகளும் எழுத எழுத வளர்ந்து கொண்டே இருக்கும். இருப்பினும் நான் மேற்கூறியவை என் மனதுக்குள் ஒருவித மலைப்பை ஏற்படுத்தியவை. ஓர் பெண்ணாய் பெருமைப்பட்டுக் கொண்டவை..குடும்பத் தலைவியாக, தனது முதல் குழந்தையான சார்லஸுன் (நான்கு வயது) தாயாய் வாழ்ந்து வந்த அவருக்கு 25 ஆம் வயதில் மகாராணியாய் முடி சூட்டப்பட்டது. அரசாங்க வாழ்க்கையில், ஆப்பிரிக்காவின் காலனித்துவ அகற்றம் - இங்கிலாந்தின் அதிகார பகிர்வு - ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குதல் மற்றும் அதிலிருந்து வெளியேறுதல் போன்ற பல அரசியல் மாற்றங்களுக்கு தலைமையாய் - பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இன்று வரை உயிர்ப்புடன் வைத்திருப்பது - சமூக மாற்றத்துக்கான முன்னோடியாய் - மன்னராட்சி முறையில் மாற்றம் குறிப்பாக அரச குடும்பத்திற்கும் அரண்மனைக்கும் தேவையான செலவினங்களை இங்கிலாந்து மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கும் முறையை மாற்றியது - இரண்டாம் உலகப் போரில் பங்கேற்பு... என பல்வேறு அரசியல் சமுதாய சட்ட சீர்திருத்தங்கள்... எந்த சிக்கலானாலும் மிக இலகுவாக அவர் கையாண்ட முறைகள் - எந்த நாட்டின் மீது போர் தொடுக்கும் அதிகாரம் இருந்தும் இதுவரை போர் தொடுக்காத மாண்பு - இங்கிலாந்தில் கார் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் இவருக்கு தேவையில்லை. போக்குவரத்து விதிகளை மீறினால் தண்டிக்க இயலாது .இதுவரை அப்படி ஏதும் செய்யவில்லை. தனது உரிமைகளை எந்நிலையிலும் தவறாக பயன்படுத்தாமை... இவைகளையெல்லாம் படிக்கும் சமயமெல்லாம் நான் அவர் மேல் காதல் கொண்டது சரிதானே!.நவம்பர் 1947 இல் இவர் கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் முன்னாள் இளவரசர் பிலிப் மவுண்ட் பேட்டன் அவர்களை மணந்தார் .இவர்களது திருமண பந்தம் ஏப்ரல் 2021 இல் பிலிப் இறக்கும் வரை அதாவது 73 ஆண்டுகள் நீடித்தது. நிறை வாழ்வு வாழ்ந்த இந்த ராஜ தம்பதிகளுக்கு 4 பிள்ளைகள் பிறந்தார்கள். Prince Charles ,The Prince of Wales (1948), Princess Anne, The Princess Royal (1950),Prince Andrew, The Duke of York (1960), and The prince Edward , The Earl of Wessex(1964)..இளவரசி எலிசபெத்தை மணம் முடித்து ராணியின் கணவராக ஆன போதிலும் லெப்டினன்ட் கமாண்டோவாகவே தனது பணியை தொடர்ந்தார் பிலிப்.1953 - ல் எலிசபெத் முடிசூட்டப்பட்ட போது அவருக்கு எடின்பரோ நகரின் டியூக் என்ற முறையில் முதலில் ராணியை முத்தமிட்டு "நான் பிலிப், தங்களின் உண்மையான சேவகனாக இறுதி வரை இருப்பேன் .இறைவா உதவி செய்யுங்கள் "என்று அவர் கூறியதும், ராஜதம்பதியினரின் 50 ஆவது ஆண்டு விழாவில் (1997) தனது கணவரை பற்றி "மிகவும் எளிமையானவர். எனக்கு மிகச் சிறந்த பின்புலமாக இத்தனை ஆண்டுகளாக இருந்தார்" என்றதும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த மரியாதையையும், அன்பினையும் வெளிப்படுத்துகிறது. மகாராணி என்றாலும் அவரும் பெண் அல்லவா! குடும்ப சமுதாய உறவு சிக்கல்களை சமாளித்துதானே ஆக வேண்டும். அவரது தந்தையின் மறைவு , இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட் பேட்டன் பிரபுவின் கொலை, 1992 ல் பிள்ளைகளின் மண முறிவுகள், 1997 இல் அவரது மகனின் முன்னாள் மனைவி டயானாவின் மறைவு, தாய் எலிசபெத்தின் மறைவு மற்றும் தங்கை இளவரசி மார்கிரெட்டின் மறைவு ஆகியன அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட மன வருத்தங்களாக அமைந்தன. பிள்ளைகளின் பிறப்பும் திருமணமும் பேரக் குழந்தைகளின் பிறப்பும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கிய நாட்களாகின. ஆட்சியின் மைல் கற்களாக அமைந்த வெள்ளி (1977) தங்க (2002) வைர (2012) பவள (2022) விழா கொண்டாட்டங்களும் அவர் மனதை நிறைத்த நேரங்களாய் அமைந்தன. மகாராணியின் மறைவையொட்டி அவரின் மூத்த மகன் சார்லஸ் (வயது 73) அடுத்த மன்னராக முடிசூட்டப்படுகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து மகாராணியின் மறைவுக்கு இரங்கல் செய்தியும் வெகுஜன மக்களின் கண்ணீரும் அவர் மக்கள் மனதிலும் கோலோச்சிய இறைமாட்டிதான் என்பதைக் காட்டுகின்றன. ஓர் பெண்ணாய் எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அவர் பல நேரங்களில் எனக்குள் ஒரு கேள்வியை எழுப்புவார்."நாம் செய்த கர்மா என்ன? அவர் செய்த கர்மா என்ன?"அதைத் தொடர்ந்து, சமீபத்திய அவரைப் பற்றிய ஜோதிட கணிப்புகளை பார்க்கும் ஆவலைத் தூண்டியது. "கோடியில் ஒருவர் ஜாதகம். ஒளிக்குவியலின் மையப்புள்ளியின் வெளிச்சம் படும் இடத்தில், குறிப்பிட்ட லக்னத்தில், குறிப்பிட்ட இடத்தில் பிறந்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்கக்கூடும் " என்ற ஜாதகம் மற்றும் அறிவியல் நோக்குடன் பல்வேறு தகவல்களை பார்க்கும் பொழுது, கடல் கடந்து ஒரு நாட்டில் வாழ்ந்த ஒரு பெண் இங்கே இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து வரும் என்னைப் போன்ற பெண்ணுக்கும் வழிகாட்டியாய் ,வாழ்க்கை பாடமாய் அமைந்திருக்கிறார் என்றால் இப்பதிவின் முதல் பகுதிக்கு மீண்டும் சென்று என் கருத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் நண்பர்களே... நன்றி : Google and The official website of The British monarchy.
சோலை மலரொளியோ நினது சுந்தரப்புன்னகை தான் நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீகோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீவாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்... இதுதான் எனக்குள் நான் வகுத்திருந்த எலிசபெத் மகாராணி. ஆம். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து எலிசபெத் மகாராணி பெயரும் அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அறியும் ஆவலும் மனதினுள் இருந்து கொண்டே இருக்கும். காரணம் எனது தாயின் பெயரும் எலிசபெத்.அதேபோல எனக்கு திருமணம் ஆகிய புதிதில் ஒரு மழை நேர மாலை. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கால்களில் சேறு பட்டு எனக்கோர் சங்கடம் தர மேலும் நடக்க இயலாமல் நான் பின்தங்கி நிற்க, "அட! பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வரயா? நீ என்ன எலிசபெத் மகாராணியா?’’ என கணவர் கிண்டல் செய்ய "ஆம் நான் எலிசபெத் மகாராணிதான்" என நெஞ்சு நிமிர்த்தி சொல்லி இருக்கிறேன்..இப்படி சாமானிய பெண்ணுக்கும் புரியும் தூரத்தில் வாழ்க்கைக்கோர் உதாரணமாக அவரைப் பார்க்கும் பார்வை இன்னும் ஆழமானது எனக்குள்.ஆளுமையின் அடையாளமாய் - நிறை வாழ்வின் எடுத்துக்காட்டாய்- மகாராணியினுள் ஒளிர்ந்த தாய்மையாய்- பெண் குலத்துக்கோர் முன்னோடியாய்... இப்படி பல கோணங்களில் பார்த்து ரசித்திருக்கிறேன் அவரை.. 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்த அவருக்கு தனது தந்தை வழி பூட்டி வழியில் அலெக்ஸாண்ரா என்றும், தந்தை வழி பாட்டி வழியே மேரி என்றும், தாய் வழியில் எலிசபெத் என்றும் முன்னோர்களின் பெயர் சேர்த்து "எலிசபெத் அலெக்ஸாண்ரா மேரி "என பெயர் சூட்டப்பட்டார். உறவின் மேன்மையை உணர்த்தும் இச்செயல் எப்போதும் என்னை புன்னகைக்க வைக்கும். உலகின் நீண்ட கால ராணி (70 ஆண்டுகள் 214 நாட்கள்) - 70 ஆண்டுகள் அரசாட்சி நடத்தி பவள விழா கண்டது - உலகின் மிகப்பெரிய பணக்கார மகாராணி - எப்போதும் கம்பீரத்துடன் வலம் வந்தது - மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வு - தனிப்பட்ட பிறந்தநாள் மற்றும் அதிகாரப்பூர்வ பொதுக்கொண்டாட்டம் என இரண்டு பிறந்தநாள் கொண்டவர்-காமன்வெல்த் தலைவராக இவரது முகம் முப்பத்து மூன்று நாடுகளின் நாணயங்களில் இடம் பெற்றிருப்பது - இவரது ராஜ கிரீடத்தில் கோஹினூர் வைரம் உட்பட 1,333 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது - 5300 ஜோடி அன்னப்பறவைகள் (லண்டன் தேம்ஸ் நதியில்) மற்றும் இங்கிலாந்து நீர் எல்லைகளுக்குட்பட்ட அனைத்து திறந்த நீர் மீன் வளத்திற்கு சொந்தக்காரர் - உலகின் மிகப்பெரிய தனியார் கலைத் தொகுப்பின் உரிமையாளர் - உலகின் மிகப்பெரிய தனிநபர் வீடு (பக்கிங்காம் அரண்மனை)... அவரைச் சார்ந்த சொத்துக்களும் மற்றவைகளும் எழுத எழுத வளர்ந்து கொண்டே இருக்கும். இருப்பினும் நான் மேற்கூறியவை என் மனதுக்குள் ஒருவித மலைப்பை ஏற்படுத்தியவை. ஓர் பெண்ணாய் பெருமைப்பட்டுக் கொண்டவை..குடும்பத் தலைவியாக, தனது முதல் குழந்தையான சார்லஸுன் (நான்கு வயது) தாயாய் வாழ்ந்து வந்த அவருக்கு 25 ஆம் வயதில் மகாராணியாய் முடி சூட்டப்பட்டது. அரசாங்க வாழ்க்கையில், ஆப்பிரிக்காவின் காலனித்துவ அகற்றம் - இங்கிலாந்தின் அதிகார பகிர்வு - ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குதல் மற்றும் அதிலிருந்து வெளியேறுதல் போன்ற பல அரசியல் மாற்றங்களுக்கு தலைமையாய் - பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இன்று வரை உயிர்ப்புடன் வைத்திருப்பது - சமூக மாற்றத்துக்கான முன்னோடியாய் - மன்னராட்சி முறையில் மாற்றம் குறிப்பாக அரச குடும்பத்திற்கும் அரண்மனைக்கும் தேவையான செலவினங்களை இங்கிலாந்து மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கும் முறையை மாற்றியது - இரண்டாம் உலகப் போரில் பங்கேற்பு... என பல்வேறு அரசியல் சமுதாய சட்ட சீர்திருத்தங்கள்... எந்த சிக்கலானாலும் மிக இலகுவாக அவர் கையாண்ட முறைகள் - எந்த நாட்டின் மீது போர் தொடுக்கும் அதிகாரம் இருந்தும் இதுவரை போர் தொடுக்காத மாண்பு - இங்கிலாந்தில் கார் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் இவருக்கு தேவையில்லை. போக்குவரத்து விதிகளை மீறினால் தண்டிக்க இயலாது .இதுவரை அப்படி ஏதும் செய்யவில்லை. தனது உரிமைகளை எந்நிலையிலும் தவறாக பயன்படுத்தாமை... இவைகளையெல்லாம் படிக்கும் சமயமெல்லாம் நான் அவர் மேல் காதல் கொண்டது சரிதானே!.நவம்பர் 1947 இல் இவர் கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் முன்னாள் இளவரசர் பிலிப் மவுண்ட் பேட்டன் அவர்களை மணந்தார் .இவர்களது திருமண பந்தம் ஏப்ரல் 2021 இல் பிலிப் இறக்கும் வரை அதாவது 73 ஆண்டுகள் நீடித்தது. நிறை வாழ்வு வாழ்ந்த இந்த ராஜ தம்பதிகளுக்கு 4 பிள்ளைகள் பிறந்தார்கள். Prince Charles ,The Prince of Wales (1948), Princess Anne, The Princess Royal (1950),Prince Andrew, The Duke of York (1960), and The prince Edward , The Earl of Wessex(1964)..இளவரசி எலிசபெத்தை மணம் முடித்து ராணியின் கணவராக ஆன போதிலும் லெப்டினன்ட் கமாண்டோவாகவே தனது பணியை தொடர்ந்தார் பிலிப்.1953 - ல் எலிசபெத் முடிசூட்டப்பட்ட போது அவருக்கு எடின்பரோ நகரின் டியூக் என்ற முறையில் முதலில் ராணியை முத்தமிட்டு "நான் பிலிப், தங்களின் உண்மையான சேவகனாக இறுதி வரை இருப்பேன் .இறைவா உதவி செய்யுங்கள் "என்று அவர் கூறியதும், ராஜதம்பதியினரின் 50 ஆவது ஆண்டு விழாவில் (1997) தனது கணவரை பற்றி "மிகவும் எளிமையானவர். எனக்கு மிகச் சிறந்த பின்புலமாக இத்தனை ஆண்டுகளாக இருந்தார்" என்றதும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த மரியாதையையும், அன்பினையும் வெளிப்படுத்துகிறது. மகாராணி என்றாலும் அவரும் பெண் அல்லவா! குடும்ப சமுதாய உறவு சிக்கல்களை சமாளித்துதானே ஆக வேண்டும். அவரது தந்தையின் மறைவு , இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட் பேட்டன் பிரபுவின் கொலை, 1992 ல் பிள்ளைகளின் மண முறிவுகள், 1997 இல் அவரது மகனின் முன்னாள் மனைவி டயானாவின் மறைவு, தாய் எலிசபெத்தின் மறைவு மற்றும் தங்கை இளவரசி மார்கிரெட்டின் மறைவு ஆகியன அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட மன வருத்தங்களாக அமைந்தன. பிள்ளைகளின் பிறப்பும் திருமணமும் பேரக் குழந்தைகளின் பிறப்பும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கிய நாட்களாகின. ஆட்சியின் மைல் கற்களாக அமைந்த வெள்ளி (1977) தங்க (2002) வைர (2012) பவள (2022) விழா கொண்டாட்டங்களும் அவர் மனதை நிறைத்த நேரங்களாய் அமைந்தன. மகாராணியின் மறைவையொட்டி அவரின் மூத்த மகன் சார்லஸ் (வயது 73) அடுத்த மன்னராக முடிசூட்டப்படுகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து மகாராணியின் மறைவுக்கு இரங்கல் செய்தியும் வெகுஜன மக்களின் கண்ணீரும் அவர் மக்கள் மனதிலும் கோலோச்சிய இறைமாட்டிதான் என்பதைக் காட்டுகின்றன. ஓர் பெண்ணாய் எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அவர் பல நேரங்களில் எனக்குள் ஒரு கேள்வியை எழுப்புவார்."நாம் செய்த கர்மா என்ன? அவர் செய்த கர்மா என்ன?"அதைத் தொடர்ந்து, சமீபத்திய அவரைப் பற்றிய ஜோதிட கணிப்புகளை பார்க்கும் ஆவலைத் தூண்டியது. "கோடியில் ஒருவர் ஜாதகம். ஒளிக்குவியலின் மையப்புள்ளியின் வெளிச்சம் படும் இடத்தில், குறிப்பிட்ட லக்னத்தில், குறிப்பிட்ட இடத்தில் பிறந்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்கக்கூடும் " என்ற ஜாதகம் மற்றும் அறிவியல் நோக்குடன் பல்வேறு தகவல்களை பார்க்கும் பொழுது, கடல் கடந்து ஒரு நாட்டில் வாழ்ந்த ஒரு பெண் இங்கே இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து வரும் என்னைப் போன்ற பெண்ணுக்கும் வழிகாட்டியாய் ,வாழ்க்கை பாடமாய் அமைந்திருக்கிறார் என்றால் இப்பதிவின் முதல் பகுதிக்கு மீண்டும் சென்று என் கருத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் நண்பர்களே... நன்றி : Google and The official website of The British monarchy.