கலப்புத் திருமணங்களுக்குப் பாதுகாப்பு!

மும்பை பரபர
கலப்புத் திருமணங்களுக்குப் பாதுகாப்பு!
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்கிற பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாள். இது சம்பந்தமாக, அப்தாப் அலிகான் என்பவரைக் கைது செய்துள்ளனர். இருவரும் ‘லிவ்-இன்’ வாழ்க்கை நடத்தி யிருக்கின்றனர்.

இது நாட்டையே உலுக்கிய சம்பவமாகும். பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு மதம், ஜாதியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்யும் காரணம், இது போன்ற கொலை, தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.

கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களில் பலர் பெற்றோர்களுடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் ‘பாதுகாப்பு குழு’ ஒன்றினை கூடிய விரைவில் அமைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இது ஒரு புது முயற்சியாகும்.

கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு உதவி தேவைப்படுகையில், பிரிந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள பாதுகாப்பு குழு உதவி செய்யும். கிட்டத்தட்ட கெளன்சிலிங் மாதிரி எனலாம். இதன்மூலம் கொலைகள் நடைபெறுவதைத் தடுக்க இயலும் என நம்பப்படுகிறது.

வேறு மதம், இனம் ஆகியவைகளில் கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களைப் பாதுகாக்கும் வகையில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், என்.ஜி.ஓக்கள் உள்ளிட்டோர் அடங்கிய 10 பேர்கள் கொண்ட குழுவாக இது அமையும்.

****************************

 எதிரி எதிரி ரோலில் ப்ருத்விராஜ்!

மிதாப் பச்சன் – கோவிந்தா நடித்து 1998 இல் வெளிவந்த “படே மியான் சோடே மியான்” ஹிந்திப்படம் பயங்கர ஹிட்டானது. இதைத் தொடர்ந்து தற்சமயம் அதே பெயரில் அலி அப்பாஸ் ஸாபர் (Zaffer) இதை எடுக்க ஆரம் பித்துள்ளார்.

அக் ஷய் குமார், டைகர் ஷராப் ஷராப் இருவரும் நடிக்கும் இப்படத்தில் எதிரி ரோலில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்க உள்ளார்.

“சக்தி வாய்ந்த கலைஞராகிய பிருத்விராஜுடன் இணைந்து வேலை செய்வதைப் பெருமையாக எண்ணுகிறேன்” என்கிறார் இயக்குனர் Zaffer.

தயாரிப்பாளரோ ஒரு படி மேலே போய், ‘பிருத்விராஜ் நடிப்பதால் அதிகமான த்ரில்கள் இருக்குமென எதிர்பார்க்கிறேன்” என்கிறார். பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com