

இரவு பெய்த விடாத மழை..!
இருள் மறைந்து காலைப் பொழுது விடிந்தது. செல்வி, மழை நீரால் ஊறிப்போன வீட்டின் தரையை துணியால் துடைத்து எடுத்தார். வீட்டிற்கு வெளியே நச நசவென்று சகதி காடாக இருந்தது. காலை வெயில் சுள்ளென்று பிரகாசமாக அடித்தது. சமையலை முடித்து, சாப்பிட்டுவிட்டு, மகளுக்கும் ஊட்டி விட்டு, பள்ளிக்கூடம் லீவு என்பதால், சத்யாவை தனது அம்மா வீட்டில் விட்டார்.
ஆட்டோ வந்ததும், ஆட்டோவில் ஏறி ஆள்களோடு வேலைக்கு புறப்பட்டார். கம்பெனிக்கு எட்டு கிலோமீட்டர் செல்ல வேண்டும். கம்பெனி வந்ததும் கீழே இறங்கி, உள்ளே நடந்து செல்லும் போது, வலது பக்கத்தில் ஒரு வேப்ப மரத்திற்கு கீழேயுள்ள பிள்ளையார் சிலையை பார்த்து, “அப்பனே விநாயகா நல்லபடியா வேல போகணும்பா” என்று வேண்டிக் கொண்டார்.