சிறுகதை: பொம்மை!

Newly married couple
Newly married couple
முருகன்

ஆசிரியர் இயற்பெயர் ஜி.சுப்பிரமணியன். வயது 73. சுமார் நாற்பது ஆண்டுகளாக சிறார்களுக்கு சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் எழுதி அவைகள் பல சிறார் இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அது தவிர அன்னாரின் ஏழு கதை புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன இதில் இரண்டு இந்தி சிறார் கதை புத்தகங்கள். ஆசிரியர் அவர்கள் கீழ்கண்ட யு டியூப் சேனல்களையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1. Suppinithathasiruvarkathaigal 2. Hindi stories – children – suppinidhadha 3. Mannaimurugan touring talkies

Updated on
Mangayar malar strip
Mangayar malar strip

என் அம்மாவின் உத்தரவு. குலசாமிக்கு அர்ச்சனை செய்ய சொந்த கிராமம் வந்திருந்தேன். என் இரு சக்கர வாகனத்துலயே வந்தேன். கிராமத்துக்கு போகும் முன் வழக்கமாக நான் தாண்ட வேண்டியது நான் பிறந்து, வளர்ந்து, படித்த நகரம். அதில் இருந்து பத்து கிலோ மீட்டரில்தான் என் சொந்த கிராமம். இப்போது நான் படித்த நகரத்தில் இறங்கி, கைலாசநாதர் கோயிலை தரிசிக்க சென்றேன்.

ஒரு ஒட்டடை குச்சி வாலிபன் துர்க்கை அம்மனை சுற்று சுற்றி வந்தான். அவன் முக ஜாடை... அப்படியே என் பள்ளித்தோழன் ஓமக்குச்சி கோவிந்தன் ஜாடை தான்.

"ஏ தம்பி!" அவனை அழைத்தேன். 'வருகிறேன் பொறு' என்பதாக கையால் சைகை செய்து விட்டு சுற்றிக்கொண்டிருந்தான். அதற்குள் நான் கோயிலை முழுவதுமாக சுற்றி விட்டு மீண்டும் துர்க்கை சன்னதி வந்த போது மூச்சு இரைக்க வந்து அமர்ந்தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com