தாம்பூலம் போடுதல்!

தாம்பூலம் போடுதல்!
Updated on

தாம்பூலம் போடுதல் என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்.இது ஆரோக்கியமானது கூட. தாம்பூல ரசத்திற்கு பல்நோய், தாகம், கிருமிகள் ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது.

கொட்டைப் பாக்கிற்கு மலச்சிக்கல், குடல் கிருமிகளை நீக்கும் தன்மை கொண்டது.

ளிப்பாக்கு நெஞ்சில் கோழை கட்டுவதை தடுக்கும். வெற்றிலை காரத்தன்மை கொண்டது. சாற்றை அருந்திய கபம், சீதளம் ஆகியவை நீங்கும்.

வெற்றிலை தலைபாரம், சளி, வயிற்று வலி, கொண்டைக் கடலை போக்கும்.

சுண்ணாம்பை தாம்பூலத்துடன் சேர்ப்பதால் செரிமான சக்தி உண்டாகும். மற்றும் குடல் தொடர்பான நோய், பல்நோய் மற்றும் நெருப்பு சுட்ட புண் காயங்களை விரைவில் ஆற்றும்.

தாம்பூலம் போடும் காலை நேரத்தில் பாக்கினை அதிகம் சேர்க்க மலம் இளகி நீங்கும். மாலையில் வெற்றிலை அதிகம் சேர்ப்பதால் வாயில் நல்ல மணம் வீசும்.

logo
Kalki Online
kalkionline.com