
புதிதாகப் பிறந்த குழந்தை, முறையான ஊட்டச்சத்திற்குத் தாயின் பாலையே முழுமையாகச் சார்ந்திருக்கிறது. பிறந்தது முதல் ஆறு மாத காலம் வரை குழந்தையின் ஊட்டச்சத்திற்கான முதன்மை ஆதாரமாகத் தாய்ப்பாலே இருக்கிறது. ஒரு புதிய தலைமுறையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அதுவே முதல் ஆதாரம். தாய்ப்பால் மூலமாகதான் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், புரதமும் கிடைக்கிறது.
அனைத்து விதமான சத்துகளும் சரியான விகிதத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள அமுதம் தாய்ப்பால். தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக கடந்த 1990ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரமான 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
நம்முடைய அடுத்த தலைமுறையின் முக்கிய ஆதாரமாக விளங்கும் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு Birth Basix: Pregnancy Physiotherapy, Yoga and Lactation Support நிறுவனர் மற்றும் pelvic floor physiotherapist board certified Lactation Consultant டாக்டர் சோனாலி சந்தானம் அவர்கள் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்ட தகவல்களிலிருந்து தொகுப்பு....