உலக தாய்ப்பால் வாரம் - 7: மன அழுத்தம் காரணமாக தாய்ப்பால் சுரப்பதில் மாற்றம் ஏற்படுமா?

Lactation Consultant டாக்டர். சோனாலி சந்தானம்
Baby with mom - World Breastfeeding Week
Baby with mom - World Breastfeeding Week
Published on
mangayar malar strip

ம்முடைய அடுத்த தலைமுறையின் முக்கிய ஆதாரமாக விளங்கும் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு Birth Basix: Pregnancy Physiotherapy, Yoga and Lactation Support நிறுவனர் மற்றும் pelvic floor physiotherapist board certified Lactation Consultant டாக்டர் சோனாலி சந்தானம் அவர்கள் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்ட தகவல்களிலிருந்து தொகுப்பு....

டாக்டர் சோனாலி, அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பிரசவகால சிகிச்சைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், மகப்பேறு கால பிசியோதெரபி சிகிச்சை முறையில் அமெரிக்கன் போர்டின் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை திடப்பொருள் சாப்பிட ஆரம்பித்தவுடன், தாய்ப்பால் கொடுக்கும் அளவு குறையுமா அல்லது அப்படியே இருக்குமா?

முதலில் திடப் பொருட்களையும் பிறகு தாய்ப்பாலையும் வழங்கினால், தாய்ப்பால் கொடுக்கும் அளவு குறையும். குழந்தைக்கு திடப்பொருட்கள் கொடுக்கும் சில மணிநேரங்கள் முன்பு தாய்ப்பால் கொடுத்துவிட்டு பின்னர் திடப்பொருளை ஊட்டினால், தாய்ப்பாலின் சுரப்பு சரியான விகிதத்தில் இருப்பதை உறுதிச் செய்துக்கொள்ளமுடியும். குழந்தைக்கு ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதுதான் முக்கியம். திடப்பொருள் உணவுகள் இரண்டாம்பட்சம்தான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com