விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரபலமடைந்துள்ள 'புஷ்பா', 'ஜெயிலர்', 'RRR' விநாயகர் சிலைகள்?– பவானி சங்கரன், திருச்சி .K.G.F.சிலையை விட்டுட்டீங்களே! நல்லவேளை, 'லெஜன்ட்' சிலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்! 'புதுமை'ங்கிற பெயர்ல இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கிறுக்குத்தனமெல்லாம் நடக்குமோ தெரியலை! அவரு சாமியா? சினிமா ஹீரோவா? படுத்தாதீங்க கலை ஆர்வக்கோளாறுகளே!.**************************.ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு 5% ஜி.எஸ்.டி.யாமே?!–வாணி வெங்கடேஷ், சென்னை.விரைவில் எதிர்பாருங்கள் நிம்மி மம்மியின் அதிரடி வரி அறிவிப்புகள்!.ரயில்வே ஸ்டேஷன் போனா வரி!ரயில்வே அறிவிப்பு கேட்டா வரி!ரயில் ஏறினா வரி, இறங்கினா வரி!ரயில்ல போற மாதிரி கனவுவந்தா கூட வரி!டீ.வி.யில 'கிழக்கே போகும் ரயில்' படம் பார்த்தாகூட வரியோ வரி!இன்னும் எதில எல்லாம் வரி போடலாம்னு ஸ்டூடியோல செட்டிங் போட்டு யோசிப்பாங்க போல!வாழிய பாரத மணித்திருநாடு!.**************************.தங்கள் நினைவில் நிற்கும் சுதந்திரப் போராட்டத் தியாகி யார்?–கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.நாவலாசிரியை, நாடக இயக்குநர், பத்திரிகையாளர், சமூக சேவகி, கர்நாடக இசைப் பாடகி, காங்கிரஸ் உறுப்பினர் என ஏகப்பட்ட திறமைகளைத் தன்னுள் கொண்டிருந்த திருமதி வை.மு. கோதைநாயகி அம்மாள். இதையெல்லாம் அவர் செய்தது தமது 23ம் வயதில்!.அது மட்டுமா? பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மதுவிலக்கு, விதவைத் திருமணம் போன்றவற்றை தமது நாவல்களில் வலியுறுத்திய இவர், சுதந்திரப் போராளியும்கூட! மடிசார் அணிந்து சிறைவாசம் அனுபவித்தவர்! பெண்களின் விடுதலைக்காகவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் போராடிய மிகப்பெரும் ஆளுமை வை.மு.கோ!.தம்முடைய ஏழு ஏக்கர் நிலத்தையும் வினோபாஜியின் 'பூதான்' திட்டத்துக்குத் தந்ததோடு, கடைசிவரை கதர் மட்டுமே அணிந்து வாழ்ந்தவர்! மறக்க முடியுமா இவரை?.**************************.மேடம் ஜாலியா ஒரு கேள்வி! நீங்க வெளியே போயிட்டு வீட்டுக்குள்ள நுழையறீங்க. டீ.வி.யில 'சிங்கப்பெண்ணே' பாடல் ஓடிக்கிட்டிருக்கு. மெய்யாலுமே அதை ரசித்தபடி சோபாவில் சிங்கம் குந்தியிருக்கு. உங்க ரியாக் ஷன்…?–என். கோமதி, நெல்லை.இந்தச் சிச்சுவேஷன் எனக்கொன்னும் ஜெர்க்கிங்கா இருக்காது கோமதி.. நான் வெளியே போய் காய்கறி, பழம், காஃபித் தூள் எல்லாம் வாங்கிட்டு, பையைத் தூக்க மாட்டாமல் தூக்கிட்டு வரும்போது, எங்க வீட்டு சிங்கம், சோஃபா மேல் ரிலாக்ஸா உட்கார்ந்து டி.வி. பார்த்துகிட்டுதான் இருக்கும்!ஆனா பரிச்சயப்பட்ட சிங்கம் என்பதால், என்னோட ரியாக் ஷன் இதுதான்!"ஃபிளாஸ்க்குல காப்பி வெச்சிருந்தேனே குடிச்சீங்களா?"
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரபலமடைந்துள்ள 'புஷ்பா', 'ஜெயிலர்', 'RRR' விநாயகர் சிலைகள்?– பவானி சங்கரன், திருச்சி .K.G.F.சிலையை விட்டுட்டீங்களே! நல்லவேளை, 'லெஜன்ட்' சிலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்! 'புதுமை'ங்கிற பெயர்ல இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கிறுக்குத்தனமெல்லாம் நடக்குமோ தெரியலை! அவரு சாமியா? சினிமா ஹீரோவா? படுத்தாதீங்க கலை ஆர்வக்கோளாறுகளே!.**************************.ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு 5% ஜி.எஸ்.டி.யாமே?!–வாணி வெங்கடேஷ், சென்னை.விரைவில் எதிர்பாருங்கள் நிம்மி மம்மியின் அதிரடி வரி அறிவிப்புகள்!.ரயில்வே ஸ்டேஷன் போனா வரி!ரயில்வே அறிவிப்பு கேட்டா வரி!ரயில் ஏறினா வரி, இறங்கினா வரி!ரயில்ல போற மாதிரி கனவுவந்தா கூட வரி!டீ.வி.யில 'கிழக்கே போகும் ரயில்' படம் பார்த்தாகூட வரியோ வரி!இன்னும் எதில எல்லாம் வரி போடலாம்னு ஸ்டூடியோல செட்டிங் போட்டு யோசிப்பாங்க போல!வாழிய பாரத மணித்திருநாடு!.**************************.தங்கள் நினைவில் நிற்கும் சுதந்திரப் போராட்டத் தியாகி யார்?–கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.நாவலாசிரியை, நாடக இயக்குநர், பத்திரிகையாளர், சமூக சேவகி, கர்நாடக இசைப் பாடகி, காங்கிரஸ் உறுப்பினர் என ஏகப்பட்ட திறமைகளைத் தன்னுள் கொண்டிருந்த திருமதி வை.மு. கோதைநாயகி அம்மாள். இதையெல்லாம் அவர் செய்தது தமது 23ம் வயதில்!.அது மட்டுமா? பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மதுவிலக்கு, விதவைத் திருமணம் போன்றவற்றை தமது நாவல்களில் வலியுறுத்திய இவர், சுதந்திரப் போராளியும்கூட! மடிசார் அணிந்து சிறைவாசம் அனுபவித்தவர்! பெண்களின் விடுதலைக்காகவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் போராடிய மிகப்பெரும் ஆளுமை வை.மு.கோ!.தம்முடைய ஏழு ஏக்கர் நிலத்தையும் வினோபாஜியின் 'பூதான்' திட்டத்துக்குத் தந்ததோடு, கடைசிவரை கதர் மட்டுமே அணிந்து வாழ்ந்தவர்! மறக்க முடியுமா இவரை?.**************************.மேடம் ஜாலியா ஒரு கேள்வி! நீங்க வெளியே போயிட்டு வீட்டுக்குள்ள நுழையறீங்க. டீ.வி.யில 'சிங்கப்பெண்ணே' பாடல் ஓடிக்கிட்டிருக்கு. மெய்யாலுமே அதை ரசித்தபடி சோபாவில் சிங்கம் குந்தியிருக்கு. உங்க ரியாக் ஷன்…?–என். கோமதி, நெல்லை.இந்தச் சிச்சுவேஷன் எனக்கொன்னும் ஜெர்க்கிங்கா இருக்காது கோமதி.. நான் வெளியே போய் காய்கறி, பழம், காஃபித் தூள் எல்லாம் வாங்கிட்டு, பையைத் தூக்க மாட்டாமல் தூக்கிட்டு வரும்போது, எங்க வீட்டு சிங்கம், சோஃபா மேல் ரிலாக்ஸா உட்கார்ந்து டி.வி. பார்த்துகிட்டுதான் இருக்கும்!ஆனா பரிச்சயப்பட்ட சிங்கம் என்பதால், என்னோட ரியாக் ஷன் இதுதான்!"ஃபிளாஸ்க்குல காப்பி வெச்சிருந்தேனே குடிச்சீங்களா?"