ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on
ஹலோ அம்மா,

நீ எங்க இருக்க? கண் விழிச்சுப் பார்த்தா யார் யாரோ என்ன தூக்கறாங்களே தவிர, உன்ன காணலியே அம்மா… நான் அழுதா, என்னவோ கரைச்சு வாயில ஊட்டறாங்க. இல்ல…இல்ல… ஊத்தறாங்க… ஆனா அது எனக்குப் பிடிக்கவே இல்லையேம்மா?

யாரும்மா உனக்கு செளந்தர்யான்னு பேரு வெச்சது? நீ நிஜம்மாவே அழகுதாம்மா! உன்னோட முகத்தைப் பார்க்காம எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது… அழுகையா வருதும்மா!

அம்மா, நம்ப நாட்டுல மெடிக்கல் சீட் கிடைக்கிறது கஷ்டமாமே! அப்படியே கிடைச்சாலும் டாக்டருக்குப் படிக்கிறது அதைவிட கஷ்டமாமே! நீ வெளிநாடெல்லாம் போய் படிச்சு, டாக்டரா வேலை செஞ்சியாம்! நம்ப அப்பாவும் டாக்டராமே! ஓ… நான் டாக்டர்ஸ் சன்! சூப்பர்… இல்லம்மா?

பல பேரு 'குழந்தையில்லை'ன்னு வேதனைப்பட்டுக்கிட்டு லட்சக்கணக்குல செலவு செஞ்சு தவம் கிடக்கிறப்போ, நான் லட்டாட்டம் சுட்டிப் பையன் பிறந்திருக்கேனே… நீ ஹேப்பி இல்லையாம்மா?

அப்புறம்.. முக்கியமா ஒண்ணு… இந்த முதல் மந்திரிப் பதவிங்கிறது ரொம்பவே பவர்ஃபுல் போஸ்ட்டாமே? உன்னோட தாத்தா கர்நாடக மாநிலத்துக்கே முதல் மந்திரியா இருந்தவராமே! அப்ப காசு, பணத்துக்கோ, ஆள், ஆம்புக்கோ குறைச்சல் இருக்காது இல்லம்மா?

அப்போ, எனக்கு ஒரு டவுட்டும்மா…

ழகு, பணம், வேலை, அதிகாரம், குடும்பம், குழந்தை, ஹை-ஸ்டைல் வாழ்க்கை எல்லாமே அமைஞ்சும் நீ ஏம்மா தற்கொலை செஞ்சுக்கிட்ட? அதுவும் ஒன்பது மாசமே ஆன என்னைத் தனியா விட்டுட்டு? ஏம்மா… ஏன்?

அப்போ அதையும் மீறி எதை நீ எதிர்பார்த்து ஏமாந்து போன? எனக்குப் புரியவே இல்லையேம்மா!

பிரசவத்துக்குப் பிறகு சில மம்மீஸ்க்கு வரக் கூடிய டிப்ரஷன் ஏற்பட்டு, அதனால நீ இந்த முடிவை எடுத்தததாகப் பேசிக்கிறாங்கம்மா. நீயே ஒரு டாக்டர்தானேம்மா? மனசைத் திடமாக்கும் மருந்துகள் பற்றி நீ ஆலோசிச்சு இருக்கலாமே! ஏம்மா செய்யலை? குடும்ப வாழ்க்கை பிடிக்கலைன்னா… பரவாயில்லை… நீ டாக்டர் தொழிலில் பேர் வாங்கி, நோயாளிகளுக்கு உதவி இருக்கலாமே அம்மா!

நான் பச்சைக் குழந்தை. எனக்கு உன் மனசு புரியலை! நான் வளர்ந்து ஆளாகும்போது, தாயைப் போல இல்லாமல் மனஉறுதியுடன், வாழ்க்கை வீசும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்று வாழணும்னு மட்டும் ஆசீர்வதி! அது போதும்… ஐ மிஸ் யூ அம்மா! லவ்ஸ்!
-உன் செல்ல மகன்

பா.ஜ.க. மூத்த தலைவர், கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவின் மகள் வயிற்றுப் பேத்தி டாக்டர் செளந்தர்யா, திருமணமான நாலாவது வருடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

டித்த, பணம் படைத்த, செல்வாக்கு மிக்க, பெண்கள், அது ஏதும் அற்ற அப்பாவிப் பெண்களுக்கு ஒளிவிளக்காக, வழிகாட்டியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை! இதுபோல, உணர்ச்சிவசப்பட்டு, குழந்தையை பரிதவிக்கவிட்டு, அரை முழக் கயிற்றில் தொங்குவது விவரமில்லாத ஏழைப் பெண்களுக்குக் காட்டும் தவறான முன் உதாரணம் ஆகிவிடாதா?

ஸாரி, செளந்தர்யா…
ஐ மீன் டாக்டர் செளந்தர்யா!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com