கவிதைத் துறல்!

கவிதைத் துறல்!
Published on

– பவானி, திருச்சி

 சிறப்பு

மெளன அஞ்சலி செலுத்த
ஊரே
திரண்டு வந்தால்
இறப்பும் பெறுகிறது
சிறப்பு.
…………………………………………………

 வாழ்க்கை

இழப்பதற்கு
ஒன்றும் இல்லை
என்றான பிறகுதான்
பலருக்குப் புரிகிறது
வாழ்க்கையின்
அர்த்தம்.
…………………………………………………

வீராப்பு

ட்டுப் புடைவையோ
பருத்தி ஆடையோ
குறுக்கே
எதை வைத்தாலும்
வெட்டுவேன்
வீராப்பு காட்டுகிறது
கத்தரிக்கோல்.
…………………………………………………

வில்லன்

ணம்
கதாநாயகன் ஆகியதும்
வில்லன் பாத்திரம்
ஏற்கிறது
குணம்.
…………………………………………………

குணம்

றுவது சினம்
ஆறாதது மன ரணம்
ஆறறிவு கொண்டு
ஆராய்வது
குணம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com