விவேகானந்தரின் பிறந்த நாள் ஜனவரி 12.இளைஞர் தினமாகவும இந்நாள் கொண்டாடப்படுகிறது.அவர் கூறிய பயனுள்ள பொன்மொழிகள் சில..தொழ வேண்டிய முதல் தெய்வம் நமது தேச மக்கள்.மலை போன்ற சகிப்புத் தன்மை, முயற்சி, பரிசுத்தம் இவையே நற்காரியங்களில் வெற்றி தரும் ரகசியங்கள்.இகழ்ந்து பேசும் கேவலமான நோயை விட்டு விடுங்கள்.அன்பு செய், உதவி செய், நிபந்தனை வைக்காதே.உலகம் வேண்டும் நல்லொழுக்கம் சுயநலமற்றத் தன்மை.கல்வியின் நோக்கம் ஒழுக்கம். அது, மனிதனை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.உலகம் எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிதாக இதயத்தை விரிவடையச் செய்ய வேண்டும்.எது வலிமை அளிப்பதோ அது உண்மை, தூய்மையானது. உண்மை ஞானம் தருவது.மற்றவருடைய பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல் எதுவும் சாதிக்க முடியாது.திட்டமில்லாத வாழ்வு, ஒளியில்லாத வீட்டிற்குச் சமம்.இயந்திரங்கள் மனித சமூகத்துக்கு சுகம் கொடுத்ததில்லை; கொடுக்கப்போவதுமில்லை.மனிதரின் வேலை பளுவைக் குறைக்கும் இயந்திரம், உண்மையில் சுமையை அதிகரிக்கிறது.துரு பிடித்துத் தேய்வதை விட, உழைத்துத் தேய்வது மேலானது.பொய், களவு, கொலை, பாவச் செயல்கள் அனைத்துக்கும் காரணம் பலவீனமே.மனிதன், மிருகம்-மனிதன்-தெய்வம் மூன்று பேரின் சேர்க்கை ஆவான்.– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.அன்பின் வலிமை, வெறுப்பின் வலிமையை விட மிகப் பெரியது.அன்பின் வழியாகச் செய்யும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.இதயமில்லாமல், வெறும் புத்திகூர்மை மட்டுமிருந்தால் அது ஒருவனை சுயநலக்காரனாக மாற்றிவிடும்.இன்னும் நாம் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் செய்ய ஆற்றல் பெற வேண்டுமா? முதலில் பொறாமையை ஒழியுங்கள்.உண்மையானவர்களும் அன்புடையவர்களும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை.உயர்ந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சியளிப்பது வெற்றியன்று; போராட்டமே!நற்செயல் மேலானது. அதைவிட மேலானது நல்லெண்ணம்!மணிக்கணக்கில் பேசுவதைக் காட்டிலும் குறைந்த அளவு காரியங்களைச் செய்வது மேலானது.முன்னேற்றம் அடைவதற்கு முதலில் தன்னம்பிக்கையும், அடுத்ததாக இறைவன் மீது நம்பிக்கையும் வேண்டும்.– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி..………………………..மன்னரின் ஓவியம்.ஒருமுறை விவேகானந்தர் மன்னர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தார். மன்னருக்கு ஆன்மிகத்தில் அவ்வளவாக நாட்டமில்லை. குறிப்பாக, விக்ரக ஆராதனையை அவர் கேலி கூட செய்வார். விவேகானந்தர் வந்தபோது அவரிடமும் விக்ரக வழிபாட்டை கிண்டலடித்து விமரிசனம் செய்தார்..மன்னருக்கு அவருடைய வழியிலேயே பாடம் புகட்ட வேண்டும் என்று விவேகானந்தர் நினைத்துக் கொண்டார். விக்ரகம் என்பது கடவுளின் ஒரு அடையாளம் என்றும், அதனை வழிபடுவதன் மூலம் நாம் கடவுளையே காண முடியும் என்றும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் விவேகானந்தர். ஆனால், மன்னர் திருப்தியடைவதாக இல்லை..விவேகானந்தர் அரசவை பிரமுகர்களை வரவழைத்தார். அந்த அறையில் இருந்த மன்னரின் ஓவியத்தை அவர்களிடம் காட்டினார். "இது மன்னர் அவர்களின் ஓவியம். இதன் மீது உமிழுங்கள் என்று அவர்களிடம் சொன்னார். அவர்கள் பதைபதைத்து விட்டார்கள்.."என்ன கொடுமை இது? மன்னர் ஓவியத்தை அவமரியாதை செய்யலாமா?" என்று கேட்டார்கள்.."இது வெறும் ஓவியம்தானே. இதற்கு உயிர் இருக்கிறதா என்ன? நீங்கள் அவமரியாதை செய்தாலும் அதைக் கண்டு இந்த ஓவியம் கோபம் கொள்ளப்போகிறதா என்ன? பிறகு ஏன் தயங்குகிறீர்கள்?" என்று கேட்டார்..விவேகானந்தர். ''இது உயிரற்ற ஓவியமாக இருந்தாலும் இதனை நாங்கள் மன்னராகவே பாவிக்கிறோம்" என்று அவர்கள் ஒன்றுபட்டு உரத்த குரலில் சொன்னார்கள்.."விக்ரக வழிபாடும் இப்படிப்பட்டதுதான் மன்னா! நாம் பார்க்க முடியாத கடவுளை ஒரு உருவமாக நாம் வழிபடுகிறோம். அதனால் ஒன்றும் தவறில்லை. கடவுளையே நேரடியாக வழிபடுவது போலத்தான் அதுவும்" என்றார். மன்னரும் புரிந்துகொண்டார்..குறி தப்பாமல் இருக்க….இளைஞர் சிலர் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றை குறி வைத்து சுட்டனர். பல தடவை சுட்டும் தாங்கள் வைத்த குறியைச் சுட முடியவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த விவேகானந்தர், அவர்களுடைய தோல்வியைக் கண்டு புன்முறுவல் பூத்ததை ஒரு வாலிபன் கண்டுவிட்டான்..'எங்களை கேலி செய்கிறீர்களே, நீங்கள்தாம் சுடுங்களேன் பார்க்கலாம்' என்று அவன் கேட்டான். துப்பாக்கியை வாங்கிய விவேகானந்தர், அவர்கள் காட்டிய ஒவ்வொரு குறியையும் சரியாகச் சுட்டார். 'நீங்கள் துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்த பழக்கம் உள்ளவர் போலும்' என்று கூறினார்கள்..அதற்கு விவேகானந்தர், 'தாம் ஒருநாள்கூட துப்பாக்கியால் சுட்டதில்லை என்றும், ஆனால் தாம் வெற்றியடைந்ததற்கு மனதை ஒருநிலைப்படுத்தத் தம்மால் முடிந்ததே காரணம் என்று கூறியதும் அவர்கள் அளவிலா வியப்படைந்தனர்.– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி
விவேகானந்தரின் பிறந்த நாள் ஜனவரி 12.இளைஞர் தினமாகவும இந்நாள் கொண்டாடப்படுகிறது.அவர் கூறிய பயனுள்ள பொன்மொழிகள் சில..தொழ வேண்டிய முதல் தெய்வம் நமது தேச மக்கள்.மலை போன்ற சகிப்புத் தன்மை, முயற்சி, பரிசுத்தம் இவையே நற்காரியங்களில் வெற்றி தரும் ரகசியங்கள்.இகழ்ந்து பேசும் கேவலமான நோயை விட்டு விடுங்கள்.அன்பு செய், உதவி செய், நிபந்தனை வைக்காதே.உலகம் வேண்டும் நல்லொழுக்கம் சுயநலமற்றத் தன்மை.கல்வியின் நோக்கம் ஒழுக்கம். அது, மனிதனை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.உலகம் எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிதாக இதயத்தை விரிவடையச் செய்ய வேண்டும்.எது வலிமை அளிப்பதோ அது உண்மை, தூய்மையானது. உண்மை ஞானம் தருவது.மற்றவருடைய பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல் எதுவும் சாதிக்க முடியாது.திட்டமில்லாத வாழ்வு, ஒளியில்லாத வீட்டிற்குச் சமம்.இயந்திரங்கள் மனித சமூகத்துக்கு சுகம் கொடுத்ததில்லை; கொடுக்கப்போவதுமில்லை.மனிதரின் வேலை பளுவைக் குறைக்கும் இயந்திரம், உண்மையில் சுமையை அதிகரிக்கிறது.துரு பிடித்துத் தேய்வதை விட, உழைத்துத் தேய்வது மேலானது.பொய், களவு, கொலை, பாவச் செயல்கள் அனைத்துக்கும் காரணம் பலவீனமே.மனிதன், மிருகம்-மனிதன்-தெய்வம் மூன்று பேரின் சேர்க்கை ஆவான்.– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.அன்பின் வலிமை, வெறுப்பின் வலிமையை விட மிகப் பெரியது.அன்பின் வழியாகச் செய்யும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.இதயமில்லாமல், வெறும் புத்திகூர்மை மட்டுமிருந்தால் அது ஒருவனை சுயநலக்காரனாக மாற்றிவிடும்.இன்னும் நாம் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் செய்ய ஆற்றல் பெற வேண்டுமா? முதலில் பொறாமையை ஒழியுங்கள்.உண்மையானவர்களும் அன்புடையவர்களும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை.உயர்ந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சியளிப்பது வெற்றியன்று; போராட்டமே!நற்செயல் மேலானது. அதைவிட மேலானது நல்லெண்ணம்!மணிக்கணக்கில் பேசுவதைக் காட்டிலும் குறைந்த அளவு காரியங்களைச் செய்வது மேலானது.முன்னேற்றம் அடைவதற்கு முதலில் தன்னம்பிக்கையும், அடுத்ததாக இறைவன் மீது நம்பிக்கையும் வேண்டும்.– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி..………………………..மன்னரின் ஓவியம்.ஒருமுறை விவேகானந்தர் மன்னர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தார். மன்னருக்கு ஆன்மிகத்தில் அவ்வளவாக நாட்டமில்லை. குறிப்பாக, விக்ரக ஆராதனையை அவர் கேலி கூட செய்வார். விவேகானந்தர் வந்தபோது அவரிடமும் விக்ரக வழிபாட்டை கிண்டலடித்து விமரிசனம் செய்தார்..மன்னருக்கு அவருடைய வழியிலேயே பாடம் புகட்ட வேண்டும் என்று விவேகானந்தர் நினைத்துக் கொண்டார். விக்ரகம் என்பது கடவுளின் ஒரு அடையாளம் என்றும், அதனை வழிபடுவதன் மூலம் நாம் கடவுளையே காண முடியும் என்றும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் விவேகானந்தர். ஆனால், மன்னர் திருப்தியடைவதாக இல்லை..விவேகானந்தர் அரசவை பிரமுகர்களை வரவழைத்தார். அந்த அறையில் இருந்த மன்னரின் ஓவியத்தை அவர்களிடம் காட்டினார். "இது மன்னர் அவர்களின் ஓவியம். இதன் மீது உமிழுங்கள் என்று அவர்களிடம் சொன்னார். அவர்கள் பதைபதைத்து விட்டார்கள்.."என்ன கொடுமை இது? மன்னர் ஓவியத்தை அவமரியாதை செய்யலாமா?" என்று கேட்டார்கள்.."இது வெறும் ஓவியம்தானே. இதற்கு உயிர் இருக்கிறதா என்ன? நீங்கள் அவமரியாதை செய்தாலும் அதைக் கண்டு இந்த ஓவியம் கோபம் கொள்ளப்போகிறதா என்ன? பிறகு ஏன் தயங்குகிறீர்கள்?" என்று கேட்டார்..விவேகானந்தர். ''இது உயிரற்ற ஓவியமாக இருந்தாலும் இதனை நாங்கள் மன்னராகவே பாவிக்கிறோம்" என்று அவர்கள் ஒன்றுபட்டு உரத்த குரலில் சொன்னார்கள்.."விக்ரக வழிபாடும் இப்படிப்பட்டதுதான் மன்னா! நாம் பார்க்க முடியாத கடவுளை ஒரு உருவமாக நாம் வழிபடுகிறோம். அதனால் ஒன்றும் தவறில்லை. கடவுளையே நேரடியாக வழிபடுவது போலத்தான் அதுவும்" என்றார். மன்னரும் புரிந்துகொண்டார்..குறி தப்பாமல் இருக்க….இளைஞர் சிலர் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றை குறி வைத்து சுட்டனர். பல தடவை சுட்டும் தாங்கள் வைத்த குறியைச் சுட முடியவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த விவேகானந்தர், அவர்களுடைய தோல்வியைக் கண்டு புன்முறுவல் பூத்ததை ஒரு வாலிபன் கண்டுவிட்டான்..'எங்களை கேலி செய்கிறீர்களே, நீங்கள்தாம் சுடுங்களேன் பார்க்கலாம்' என்று அவன் கேட்டான். துப்பாக்கியை வாங்கிய விவேகானந்தர், அவர்கள் காட்டிய ஒவ்வொரு குறியையும் சரியாகச் சுட்டார். 'நீங்கள் துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்த பழக்கம் உள்ளவர் போலும்' என்று கூறினார்கள்..அதற்கு விவேகானந்தர், 'தாம் ஒருநாள்கூட துப்பாக்கியால் சுட்டதில்லை என்றும், ஆனால் தாம் வெற்றியடைந்ததற்கு மனதை ஒருநிலைப்படுத்தத் தம்மால் முடிந்ததே காரணம் என்று கூறியதும் அவர்கள் அளவிலா வியப்படைந்தனர்.– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி