-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.பஞ்சமுக விநாயகர் பார்த்திருக்கிறோம். தரிசித்து இருக்கிறோம். அது என்ன? பஞ்சகவ்ய விநாயகர்? பஞ்சகவ்யம் என்பது இயற்கை விவசாயத்துக்கு விளை நிலங்களில் பயன்படுத்தப்படும் இயற்கை இடு உரம் ஆகும். பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் ஐந்து வகை மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிப்பதுதான் பஞ்சகவ்யம். இது வயல்களில், காடுகளில், தோட்டம் துரவுகளில் அந்த மண் வளத்துக்காக இடப்படும் இயற்கை இடு பொருள் ஆகும். இது ஒருவகை நீர்மக்கலவையாகும். அதாவது சற்றே கெட்டியான திரவப் பொருளாகும். ஆனால், இக்கட்டுரை இந்நீர்மக்கலவை வயல்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்ததல்ல. நீர்மக்கலவையான பஞ்சகவ்யத்தில் இருந்து விநாயகர் எவ்விதம் உருவாக்கிட முடியும்?.திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே சாத்தனூர் கிராமத்தில் வசித்துவரும் இலக்கியா அறிவுச்செல்வன் கூறுவதைக் கேட்போம்!."பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து வகைமூலப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதுதான் பஞ்சகவ்யம். பசுஞ்சாணம், கோமியம், பசும் பால், பசு நெய், தயிர் இந்த ஐந்து வகைப் பொருட்களைக்கொண்டு உருவாக்கப்படுவதுதான் பஞ்சகவ்யம். மேற்கண்டஐந்து பொருட்களிலும் குறிப்பிட்ட சதவிகிதம் கலவையாக சேர்த்து பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும்..இதிலிருந்து பஞ்சகவ்ய விநாயகர், பஞ்சகவ்ய அகல்விளக்குகள் போன்றவற்றுக்கு பஞ்சகவ்யத்தினை திடப்பொருளாக உருவாக்குவோம். அதாவது பசுஞ்சாணம் சற்றே கூடுதல் அளவில் சேர்த்துக்கொள்வோம். அப்போது பஞ்சகவ்யம் அடர் திரவப் பொருளாக இல்லாமல், அடர் திடப் பொருளாக கிடைத்துவிடும். பஞ்சகவ்ய திடப் பொருளில்தான் நாம் மேற்கண்டவைகளை உருவாக்கிட முடியும்" என்கிறார் இலக்கியா.."இதற்கென நாங்கள் வீட்டில் ஐந்தாறு பசுக்களை வைத்து வளர்த்து வருகிறோம். பசுஞ்சாணத் திருநீறும் எங்களின் ஸ்பெசல் தயாரிப்பு ஆகும். பஞ்சகவ்ய விநாயகர்கள் திருவுருவங்களை அதற்கான அச்சுக்களில் பஞ்சகவ்ய திடப் பொருளினை இட்டு நிரப்பி, பின்னர் விடுவித்து விநாயகர் திருவுருவங்களை உருவாக்குகிறோம். அதனை கைவிரல்கள் கொண்டு மேலும் அழகாக வடிவமைத்து, நன்றாக உலர்ந்ததும் வாட்டர் கலர் பெயின்ட் பூசுகிறோம். பஞ்சகவ்ய வண்ண வண்ண விநாயகர் கிடைத்துவிடுகிறார். பஞ்சகவ்யத்துக்கு என பல ஆற்றல்களும் பல சக்திகளும் உள்ளன. இதனை பூஜையறையில் வைத்து வழிபட்டு வருவதால் பல நன்மைகள் நம் வாழ்வில் கிடைத்துவரும். நம் மனதில் எதிர்மறை எண்ணங்களுக்குப் பதிலாக நேர்மறை எண்ணங்கள் தோன்றும். தோன்றிக்கொண்டே இருக்கும்."."பஞ்சகவ்ய விநாயகர்களை நான்கு இஞ்ச உயரம் முதல் ஏழு இஞ்ச உயரம் வரை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். நூறு ரூபாய் முதல் நாநூறு அல்லது ஐந்நூறு ரூபாய் வரை இதற்கெனத் தொகை பெற்று அனுப்புகிறோம். பஞ்சகவ்ய விநாயகர் மட்டுமல்லாது பசுஞ்சாணத் திருநீறு, பஞ்சகவ்ய விளக்குகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறோம்" என்கிறார் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே சாத்தனூர் கிராமத்தைச் சார்ந்த இலக்கியா அறிவுச்செல்வன்.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.பஞ்சமுக விநாயகர் பார்த்திருக்கிறோம். தரிசித்து இருக்கிறோம். அது என்ன? பஞ்சகவ்ய விநாயகர்? பஞ்சகவ்யம் என்பது இயற்கை விவசாயத்துக்கு விளை நிலங்களில் பயன்படுத்தப்படும் இயற்கை இடு உரம் ஆகும். பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் ஐந்து வகை மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிப்பதுதான் பஞ்சகவ்யம். இது வயல்களில், காடுகளில், தோட்டம் துரவுகளில் அந்த மண் வளத்துக்காக இடப்படும் இயற்கை இடு பொருள் ஆகும். இது ஒருவகை நீர்மக்கலவையாகும். அதாவது சற்றே கெட்டியான திரவப் பொருளாகும். ஆனால், இக்கட்டுரை இந்நீர்மக்கலவை வயல்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்ததல்ல. நீர்மக்கலவையான பஞ்சகவ்யத்தில் இருந்து விநாயகர் எவ்விதம் உருவாக்கிட முடியும்?.திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே சாத்தனூர் கிராமத்தில் வசித்துவரும் இலக்கியா அறிவுச்செல்வன் கூறுவதைக் கேட்போம்!."பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து வகைமூலப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதுதான் பஞ்சகவ்யம். பசுஞ்சாணம், கோமியம், பசும் பால், பசு நெய், தயிர் இந்த ஐந்து வகைப் பொருட்களைக்கொண்டு உருவாக்கப்படுவதுதான் பஞ்சகவ்யம். மேற்கண்டஐந்து பொருட்களிலும் குறிப்பிட்ட சதவிகிதம் கலவையாக சேர்த்து பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும்..இதிலிருந்து பஞ்சகவ்ய விநாயகர், பஞ்சகவ்ய அகல்விளக்குகள் போன்றவற்றுக்கு பஞ்சகவ்யத்தினை திடப்பொருளாக உருவாக்குவோம். அதாவது பசுஞ்சாணம் சற்றே கூடுதல் அளவில் சேர்த்துக்கொள்வோம். அப்போது பஞ்சகவ்யம் அடர் திரவப் பொருளாக இல்லாமல், அடர் திடப் பொருளாக கிடைத்துவிடும். பஞ்சகவ்ய திடப் பொருளில்தான் நாம் மேற்கண்டவைகளை உருவாக்கிட முடியும்" என்கிறார் இலக்கியா.."இதற்கென நாங்கள் வீட்டில் ஐந்தாறு பசுக்களை வைத்து வளர்த்து வருகிறோம். பசுஞ்சாணத் திருநீறும் எங்களின் ஸ்பெசல் தயாரிப்பு ஆகும். பஞ்சகவ்ய விநாயகர்கள் திருவுருவங்களை அதற்கான அச்சுக்களில் பஞ்சகவ்ய திடப் பொருளினை இட்டு நிரப்பி, பின்னர் விடுவித்து விநாயகர் திருவுருவங்களை உருவாக்குகிறோம். அதனை கைவிரல்கள் கொண்டு மேலும் அழகாக வடிவமைத்து, நன்றாக உலர்ந்ததும் வாட்டர் கலர் பெயின்ட் பூசுகிறோம். பஞ்சகவ்ய வண்ண வண்ண விநாயகர் கிடைத்துவிடுகிறார். பஞ்சகவ்யத்துக்கு என பல ஆற்றல்களும் பல சக்திகளும் உள்ளன. இதனை பூஜையறையில் வைத்து வழிபட்டு வருவதால் பல நன்மைகள் நம் வாழ்வில் கிடைத்துவரும். நம் மனதில் எதிர்மறை எண்ணங்களுக்குப் பதிலாக நேர்மறை எண்ணங்கள் தோன்றும். தோன்றிக்கொண்டே இருக்கும்."."பஞ்சகவ்ய விநாயகர்களை நான்கு இஞ்ச உயரம் முதல் ஏழு இஞ்ச உயரம் வரை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். நூறு ரூபாய் முதல் நாநூறு அல்லது ஐந்நூறு ரூபாய் வரை இதற்கெனத் தொகை பெற்று அனுப்புகிறோம். பஞ்சகவ்ய விநாயகர் மட்டுமல்லாது பசுஞ்சாணத் திருநீறு, பஞ்சகவ்ய விளக்குகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறோம்" என்கிறார் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே சாத்தனூர் கிராமத்தைச் சார்ந்த இலக்கியா அறிவுச்செல்வன்.