வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– வசந்தா மாரிமுத்து, சென்னை.இந்தக் குளிர் பருவ காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் இருந்தால் வியாதிகள், கிருமிகள் நெருங்காது. அதைக் கொடுக்கும் உணவுகளையும், ஜுஸ் வகைகளையும் சாப்பிடும்போது, உடலில் நோய் எதிப்பு சக்திகள் கூடும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் சில ஜூஸ் வகைகளைக் காண்போம்..அகத்திக் கீரை ஜூஸ்:.தேவையானவை: அகத்திக் கீரை – ஒரு கப், பூண்டு – 3 பல், மிளகுத் தூள் – அரை ஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன், தேங்காய்ப்பால் – 2 டீஸ்பூன், வெல்லம் – கால் கப்..செய்முறை : அகத்திக் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து அத்துடன் பூண்டு, மிளகுத் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு துணியில் வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் தேன், தேங்காய்ப்பால், வெல்லத்தூள் சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து பருகவும். தேங்காய்ப்பால் சேர்க்காமல் வெறும் தண்ணீர் மட்டும் சேர்த்தும் குடிக்கலாம்..பயன்கள் : குளிர் காலத்தில் அடிக்கடி வரும் வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும். கண் பார்வை வலுப்பெறும்..முட்டைகோஸ் ஜூஸ்:.தேவையானவை : முட்டைகோஸ் – அரை கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் ஸ்பூன், கேரட் துருவல் – ஒரு கப், இந்துப்பு – ஒரு சிட்டிகை..செய்முறை : முட்டைகோஸ், கேரட் துருவல், மிளகுத் தூள், சீரகத் தூள் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து ஒரு துணியில் வடிகட்டவும்.தேவையான தண்ணீரில் இந்துப்பு கலந்து பருகவும்..பயன்கள் : குளிர்காலத்தில் அடிக்கடி ஏற்படும் முட்டுவலி சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..பீட்ரூட் ஜூஸ்:.தேவையானவை : பீட்ரூட் துருவல் – இரண்டு டீஸ்பூன், இஞ்சிச் சாறு – அரை டீஸ்பூன், வெல்லத் தூள் – சிறிது, எலுமிச்சை சாறு – ஐந்து சொட்டுகள், தேன் – அரை டீஸ்பூன்..செய்முறை : பீட்ரூட் துருவலை அரைத்து சாறு எடுக்கவும். இத்துடன் இஞ்சி சாறு, வெல்லத்தூள், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் தேவையான தண்ணீரில் கலந்து பருகவும்..பயன்கள் : ரத்த சோகையை விரட்டும். நான்கு அல்லது ஐந்து பேரீச்சம் பழத்தைப் போட்டு அரைத்து சாப்பிட, ரத்த சோகை நீங்கும்..பாகற்காய் ஜூஸ்:.தேவையானவை : கொட்டை நீக்கிய பாகற்காய் துண்டுகள் – ஒரு டீஸ்பூன், மாங்காய் துருவல் – 1 டீஸ்பூன், இஞ்சிச் சாறு – கால் டீஸ்பூன், இந்துப்பு – ஒரு சிட்டிகை, எலுமிச்சை சாறு – அரை கப்..செய்முறை : பாகற்காய் துண்டுகளை நன்கு கழுவி, எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து ஊற வைக்கவும். பின் இத்துடன் மாங்காய்த் துருவல், இஞ்சிச் சாறு கலந்து அரைத்து வடிகட்டி தேவைக்கு தண்ணீரும் இந்துப்பும் கலந்து பருகவும்..பயன்கள் : நீரிழிவு நோய்க்கு இதம் தரும். குடல் பூச்சிகள் ஒழிந்துவிடும்..வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!.வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தைப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும், இதனை சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரித்து ஞாபக மறதியைத் தடுக்கலாம். சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது. வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமசீர் அடைந்துவிடும்.வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள். செரிமானத்தைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு..பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாகச் செய்து தரலாம். வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது. சர்க்கரை தயாரிப்பின்போது அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயனங்கள் கலந்து சேர்ப்பதால் இரும்புச் சத்து அழிக்கப்படுகிறது. வெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு ஏற்படுவதில்லை..குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக்கூடிய குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும். அனிமியாவுக்கு இரும்புச் சத்தும் புரத உணவும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையின்போது உடல் சோர்வாகவும் காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்குத் தலைச் சுற்றலும் இருக்கும். அந்நிலையில் அவர்கள் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்..கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் :.கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கச் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைத்து, அதன் மூலம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலுக்கு சுகமில்லாதபோது கொஞ்சம் கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, சுக்குத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் மேல்வலி குறைந்து சுறுசுறுப்பாகி விடுவர். பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி கிடைக்கிறது. உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் இதில் நிறைந்துள்ளதால் உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. அதிக இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ரத்த சோகை தடுப்புக்கு இது நல்லது. கல்லீரலில் ஏற்படும் நச்சுகளை வெளியேற்றி, கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு களி செய்து கொடுப்பதால் இடுப்பு எலும்பு வலு பெறும். கருப்பைக்கு வலுவைத் தரும். செரிமானம் தரும். குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் ஏற்படாதவாறு செயல்படும். கருப்பட்டி உட்கொண்டு பலன் பெறுவோம்.
வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– வசந்தா மாரிமுத்து, சென்னை.இந்தக் குளிர் பருவ காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் இருந்தால் வியாதிகள், கிருமிகள் நெருங்காது. அதைக் கொடுக்கும் உணவுகளையும், ஜுஸ் வகைகளையும் சாப்பிடும்போது, உடலில் நோய் எதிப்பு சக்திகள் கூடும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் சில ஜூஸ் வகைகளைக் காண்போம்..அகத்திக் கீரை ஜூஸ்:.தேவையானவை: அகத்திக் கீரை – ஒரு கப், பூண்டு – 3 பல், மிளகுத் தூள் – அரை ஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன், தேங்காய்ப்பால் – 2 டீஸ்பூன், வெல்லம் – கால் கப்..செய்முறை : அகத்திக் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து அத்துடன் பூண்டு, மிளகுத் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு துணியில் வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் தேன், தேங்காய்ப்பால், வெல்லத்தூள் சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து பருகவும். தேங்காய்ப்பால் சேர்க்காமல் வெறும் தண்ணீர் மட்டும் சேர்த்தும் குடிக்கலாம்..பயன்கள் : குளிர் காலத்தில் அடிக்கடி வரும் வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும். கண் பார்வை வலுப்பெறும்..முட்டைகோஸ் ஜூஸ்:.தேவையானவை : முட்டைகோஸ் – அரை கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் ஸ்பூன், கேரட் துருவல் – ஒரு கப், இந்துப்பு – ஒரு சிட்டிகை..செய்முறை : முட்டைகோஸ், கேரட் துருவல், மிளகுத் தூள், சீரகத் தூள் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து ஒரு துணியில் வடிகட்டவும்.தேவையான தண்ணீரில் இந்துப்பு கலந்து பருகவும்..பயன்கள் : குளிர்காலத்தில் அடிக்கடி ஏற்படும் முட்டுவலி சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..பீட்ரூட் ஜூஸ்:.தேவையானவை : பீட்ரூட் துருவல் – இரண்டு டீஸ்பூன், இஞ்சிச் சாறு – அரை டீஸ்பூன், வெல்லத் தூள் – சிறிது, எலுமிச்சை சாறு – ஐந்து சொட்டுகள், தேன் – அரை டீஸ்பூன்..செய்முறை : பீட்ரூட் துருவலை அரைத்து சாறு எடுக்கவும். இத்துடன் இஞ்சி சாறு, வெல்லத்தூள், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் தேவையான தண்ணீரில் கலந்து பருகவும்..பயன்கள் : ரத்த சோகையை விரட்டும். நான்கு அல்லது ஐந்து பேரீச்சம் பழத்தைப் போட்டு அரைத்து சாப்பிட, ரத்த சோகை நீங்கும்..பாகற்காய் ஜூஸ்:.தேவையானவை : கொட்டை நீக்கிய பாகற்காய் துண்டுகள் – ஒரு டீஸ்பூன், மாங்காய் துருவல் – 1 டீஸ்பூன், இஞ்சிச் சாறு – கால் டீஸ்பூன், இந்துப்பு – ஒரு சிட்டிகை, எலுமிச்சை சாறு – அரை கப்..செய்முறை : பாகற்காய் துண்டுகளை நன்கு கழுவி, எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து ஊற வைக்கவும். பின் இத்துடன் மாங்காய்த் துருவல், இஞ்சிச் சாறு கலந்து அரைத்து வடிகட்டி தேவைக்கு தண்ணீரும் இந்துப்பும் கலந்து பருகவும்..பயன்கள் : நீரிழிவு நோய்க்கு இதம் தரும். குடல் பூச்சிகள் ஒழிந்துவிடும்..வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!.வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தைப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும், இதனை சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரித்து ஞாபக மறதியைத் தடுக்கலாம். சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது. வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமசீர் அடைந்துவிடும்.வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள். செரிமானத்தைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு..பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாகச் செய்து தரலாம். வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது. சர்க்கரை தயாரிப்பின்போது அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயனங்கள் கலந்து சேர்ப்பதால் இரும்புச் சத்து அழிக்கப்படுகிறது. வெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு ஏற்படுவதில்லை..குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக்கூடிய குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும். அனிமியாவுக்கு இரும்புச் சத்தும் புரத உணவும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையின்போது உடல் சோர்வாகவும் காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்குத் தலைச் சுற்றலும் இருக்கும். அந்நிலையில் அவர்கள் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்..கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் :.கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கச் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைத்து, அதன் மூலம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலுக்கு சுகமில்லாதபோது கொஞ்சம் கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, சுக்குத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் மேல்வலி குறைந்து சுறுசுறுப்பாகி விடுவர். பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி கிடைக்கிறது. உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் இதில் நிறைந்துள்ளதால் உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. அதிக இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ரத்த சோகை தடுப்புக்கு இது நல்லது. கல்லீரலில் ஏற்படும் நச்சுகளை வெளியேற்றி, கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு களி செய்து கொடுப்பதால் இடுப்பு எலும்பு வலு பெறும். கருப்பைக்கு வலுவைத் தரும். செரிமானம் தரும். குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் ஏற்படாதவாறு செயல்படும். கருப்பட்டி உட்கொண்டு பலன் பெறுவோம்.