முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு கவிஞர் இருப்பார்….அப்புறம் வீட்டுக்கு ஒரு ப்ளாக் ரைட்டர்!.இப்போது தெருவுக்கு நாலு யூ-ட்யூபர்கள் இருக்கின்றனர்..அதிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் "நான் எந்த விதத்துல மட்டம்?"னு இறங்கி அடிக்கிறார்கள். "டியர் ஃப்ரென்ட்ஸ்… வெல்கம் டு மை சேனல்! ப்ளீஸ் இதை ஷேர் பண்ணுங்க… லைக் பண்ணுங்க… சப்ஸ்க்ரைப் பண்ணுங்க…"ன்னு கெஞ்சதாகக் குறையா கேட்கறாங்க!.கார சட்னி, நாலுப்புள்ளி கோலம், முடி வளர தைலம், புடைவை வியாபாரம், மேக்கப் டிப்ஸ் என எதையும் விட்டு வைப்பதில்லை. இதில் சாதா பெண்களுடன், சீதா, ஐஸ்வர்யா போன்ற நடிகைகளும் அடக்கம்!.இந்த யூ-ட்யூப் வீடியோக்களால், பெண்களின் தனிப்பட்ட திறமைகள், வியாபாரம் போன்றவை வெளிவருகிறது என்பது உண்மைதான்! ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்கு 'கிளிக்' ஆகாதபோது, மன அழுத்தத்துக்கு ஆளாகி, நொந்துபோகிறார்கள். ஹரியானாவிலும், ஆந்திராவிலும் சில சில யூ-ட்யூபர்கள் தாங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால், தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வொய் திஸ் தற்கொலை வெறி?.கத்துக்குட்டி, ஆர்வக் கோளாறு யூ – ட்யூபர்களின் ரவுசு ஒரு பக்கம் என்றால், முகநூலில் பெண்களின் அட்டகாசம் ஓவரோ ஓவர்! முகநூலில் என்னை வெறுப்பு அடைய வைத்த ஒரு பெண்ணின் புலம்பல் இதோ: ப்ளீஸ் நீங்களும் படியுங்க கண்மணிஸ்!."ஃபோட்டோ தரலைன்னா, 'unfriend' என்பர்!.ஃபோன் நம்பர் தரலைன்னா, 'Fake id' என்பர்….வாட்ஸ் ஆப் நம்பர் கொடுத்தா, 'வர்றியா?' என்பர்….கேட்டதும் தந்துட்டா 'item' என்பர்!.அவர்களின் விருப்பப்படி நடக்காவிட்டால் 'அவுசாரி என்பர்..இவை எல்லாம் பெண்கள் 'online' ல் சந்திக்கும் கொடுமைகள்..சந்தித்துக் கொண்டுதான் முகநூலில் இருக்கிறோம்!".ஏம்மா, ஆன்லைன் அம்மணி…? இப்படி ஒரு பதிவு போடறீங்களே, இது நல்லவா இருக்கு? பெண்கள் 'online' ல் சந்திக்கும் கொடுமைகளைக் காட்டிலும் பெரிய கொடுமையா இருக்கே உங்கப் பதிவு! சரி, அத விடுங்க. அப்படி அசிங்கப்பட்டாவது 'online'ல் இருக்க என்ன அவசியம்? நேர்த்திக்கடனா என்ன…? நெருப்புல கைய வெச்சா சுடும்னு தெரியாத அளவுக்கு, பச்சைக் குழந்தையா நீங்கள்லாம்?!.சரி, இந்த ஆபாசக் கூத்து எல்லாம் பெரியவங்களோட போகுதான்னா… குழந்தைகளையும் இல்ல கெடுக்குது! ஓர் இளம்பெண் கணக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறார். மிகவும் இறுக்கமான, செயற்கையான உள்ளாடை அணிந்து, உடலைக் காட்டும் டீ.ஷர்ட்டுடன்!.ஏழையான, கிராமத்துப் பெண்களையும் இந்த யூ-ட்யூபர்கள் விடுவதாயில்லை. மார்பகம் தெரிய மக்காசோளம் சுடுகிறார் ஒரு பெண். அதற்கு ஒரு ரசிகர் கூட்டம்!.பெண்களை, அவளது உடலை, (அது எந்த வடிவத்தில் இருந்தாலும்) இன்னும் எத்தனை விதமாகத்தான் எக்ஸ்ப்ளாய்ட் செய்து வருமானம் ஈட்டுவார்களோ தெரியலை..இந்தப் பெண்களும், 'ஈஸி மணி என்பதால், எதையோ படம் பிடித்துக்கொண்டு போ என்கிறார்கள் போல!.அப்புறம் ஒரு கட்டத்துக்குப் பிறகு, பாலியல் வக்கிரங்கள் எல்லாமே சலித்துப்போய், மானமிழந்து, பணவரவு குறைந்து, ஒரு ஃபெய்லியர் மூடில் தூக்கில் தொங்குகிறார்கள்..பெண் வன்கொடுமை, பெண்களை மானபங்கப்படுத்துதல், பாலியல் அத்துமீறல் போன்ற குற்றங்களுக்காக, ஆண்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய மகளிரே, "பணம், புகழ்தான் பிரதானம்" என்று விரசமாக கன்டென்ட் போடும்போது, கலாசாரம் சீரழியாமல் என்ன செய்யும்?.எல்லா துறைக்கும் சில விதிமுறைகள் உள்ளது. சென்சார் உள்ளது… புகார் கொடுக்க ஓர் அமைப்பு உள்ளது. ஆனால் யூ-ட்யூப் சேனல் ஆரம்பிக்க மட்டும் எந்த உரிமமும் தேவையில்லை. அதனால் ஒரு ஒழுங்கோ, கட்டுப்பாடோ இல்லாமல் கன்டென்ட் போட்டு ஹிட் அடிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்..இதற்கு என்ன செய்யணும்? ஊடகவியல் அமைப்புகள், அரசு மற்றும் காவல்துறையுடன் சேர்ந்து ஒரு தரக்கட்டுப்பாட்டைக் கொண்டு வரணும்… யூ-ட்யூப் சேனலில் தோன்றுபவர்களும், குறிப்பாக பெண்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துக்கணும்..கொரோனாவிலும் கொடியது ஒன்றுண்டு….தொற்று நோயல்ல; புற்று நோயல்ல!.இது பற்று நோய்….யூ-ட்யூபில் எதையாவது போட்டு, காமென்ட்ஸ் வந்ததா, 'லைக்ஸ்' வந்ததா, ஷேர் செய்தார்களா, என்ன… யாருமே கண்டுக்கலையே. என்று மனசைப் பிசைந்துப் பிராண்டி, தூக்கம் தொலைக்க வைத்து, சதா அதையே நினைத்து பைத்தியமாக்கும் பற்று நோய்! அதாவது 'அடிக் ஷன்' ஏற்படுத்தும் நோய்!.இது தேவையா? யோசிப்போமா கண்மணிஸ்!
முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு கவிஞர் இருப்பார்….அப்புறம் வீட்டுக்கு ஒரு ப்ளாக் ரைட்டர்!.இப்போது தெருவுக்கு நாலு யூ-ட்யூபர்கள் இருக்கின்றனர்..அதிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் "நான் எந்த விதத்துல மட்டம்?"னு இறங்கி அடிக்கிறார்கள். "டியர் ஃப்ரென்ட்ஸ்… வெல்கம் டு மை சேனல்! ப்ளீஸ் இதை ஷேர் பண்ணுங்க… லைக் பண்ணுங்க… சப்ஸ்க்ரைப் பண்ணுங்க…"ன்னு கெஞ்சதாகக் குறையா கேட்கறாங்க!.கார சட்னி, நாலுப்புள்ளி கோலம், முடி வளர தைலம், புடைவை வியாபாரம், மேக்கப் டிப்ஸ் என எதையும் விட்டு வைப்பதில்லை. இதில் சாதா பெண்களுடன், சீதா, ஐஸ்வர்யா போன்ற நடிகைகளும் அடக்கம்!.இந்த யூ-ட்யூப் வீடியோக்களால், பெண்களின் தனிப்பட்ட திறமைகள், வியாபாரம் போன்றவை வெளிவருகிறது என்பது உண்மைதான்! ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்கு 'கிளிக்' ஆகாதபோது, மன அழுத்தத்துக்கு ஆளாகி, நொந்துபோகிறார்கள். ஹரியானாவிலும், ஆந்திராவிலும் சில சில யூ-ட்யூபர்கள் தாங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால், தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வொய் திஸ் தற்கொலை வெறி?.கத்துக்குட்டி, ஆர்வக் கோளாறு யூ – ட்யூபர்களின் ரவுசு ஒரு பக்கம் என்றால், முகநூலில் பெண்களின் அட்டகாசம் ஓவரோ ஓவர்! முகநூலில் என்னை வெறுப்பு அடைய வைத்த ஒரு பெண்ணின் புலம்பல் இதோ: ப்ளீஸ் நீங்களும் படியுங்க கண்மணிஸ்!."ஃபோட்டோ தரலைன்னா, 'unfriend' என்பர்!.ஃபோன் நம்பர் தரலைன்னா, 'Fake id' என்பர்….வாட்ஸ் ஆப் நம்பர் கொடுத்தா, 'வர்றியா?' என்பர்….கேட்டதும் தந்துட்டா 'item' என்பர்!.அவர்களின் விருப்பப்படி நடக்காவிட்டால் 'அவுசாரி என்பர்..இவை எல்லாம் பெண்கள் 'online' ல் சந்திக்கும் கொடுமைகள்..சந்தித்துக் கொண்டுதான் முகநூலில் இருக்கிறோம்!".ஏம்மா, ஆன்லைன் அம்மணி…? இப்படி ஒரு பதிவு போடறீங்களே, இது நல்லவா இருக்கு? பெண்கள் 'online' ல் சந்திக்கும் கொடுமைகளைக் காட்டிலும் பெரிய கொடுமையா இருக்கே உங்கப் பதிவு! சரி, அத விடுங்க. அப்படி அசிங்கப்பட்டாவது 'online'ல் இருக்க என்ன அவசியம்? நேர்த்திக்கடனா என்ன…? நெருப்புல கைய வெச்சா சுடும்னு தெரியாத அளவுக்கு, பச்சைக் குழந்தையா நீங்கள்லாம்?!.சரி, இந்த ஆபாசக் கூத்து எல்லாம் பெரியவங்களோட போகுதான்னா… குழந்தைகளையும் இல்ல கெடுக்குது! ஓர் இளம்பெண் கணக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறார். மிகவும் இறுக்கமான, செயற்கையான உள்ளாடை அணிந்து, உடலைக் காட்டும் டீ.ஷர்ட்டுடன்!.ஏழையான, கிராமத்துப் பெண்களையும் இந்த யூ-ட்யூபர்கள் விடுவதாயில்லை. மார்பகம் தெரிய மக்காசோளம் சுடுகிறார் ஒரு பெண். அதற்கு ஒரு ரசிகர் கூட்டம்!.பெண்களை, அவளது உடலை, (அது எந்த வடிவத்தில் இருந்தாலும்) இன்னும் எத்தனை விதமாகத்தான் எக்ஸ்ப்ளாய்ட் செய்து வருமானம் ஈட்டுவார்களோ தெரியலை..இந்தப் பெண்களும், 'ஈஸி மணி என்பதால், எதையோ படம் பிடித்துக்கொண்டு போ என்கிறார்கள் போல!.அப்புறம் ஒரு கட்டத்துக்குப் பிறகு, பாலியல் வக்கிரங்கள் எல்லாமே சலித்துப்போய், மானமிழந்து, பணவரவு குறைந்து, ஒரு ஃபெய்லியர் மூடில் தூக்கில் தொங்குகிறார்கள்..பெண் வன்கொடுமை, பெண்களை மானபங்கப்படுத்துதல், பாலியல் அத்துமீறல் போன்ற குற்றங்களுக்காக, ஆண்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய மகளிரே, "பணம், புகழ்தான் பிரதானம்" என்று விரசமாக கன்டென்ட் போடும்போது, கலாசாரம் சீரழியாமல் என்ன செய்யும்?.எல்லா துறைக்கும் சில விதிமுறைகள் உள்ளது. சென்சார் உள்ளது… புகார் கொடுக்க ஓர் அமைப்பு உள்ளது. ஆனால் யூ-ட்யூப் சேனல் ஆரம்பிக்க மட்டும் எந்த உரிமமும் தேவையில்லை. அதனால் ஒரு ஒழுங்கோ, கட்டுப்பாடோ இல்லாமல் கன்டென்ட் போட்டு ஹிட் அடிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்..இதற்கு என்ன செய்யணும்? ஊடகவியல் அமைப்புகள், அரசு மற்றும் காவல்துறையுடன் சேர்ந்து ஒரு தரக்கட்டுப்பாட்டைக் கொண்டு வரணும்… யூ-ட்யூப் சேனலில் தோன்றுபவர்களும், குறிப்பாக பெண்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துக்கணும்..கொரோனாவிலும் கொடியது ஒன்றுண்டு….தொற்று நோயல்ல; புற்று நோயல்ல!.இது பற்று நோய்….யூ-ட்யூபில் எதையாவது போட்டு, காமென்ட்ஸ் வந்ததா, 'லைக்ஸ்' வந்ததா, ஷேர் செய்தார்களா, என்ன… யாருமே கண்டுக்கலையே. என்று மனசைப் பிசைந்துப் பிராண்டி, தூக்கம் தொலைக்க வைத்து, சதா அதையே நினைத்து பைத்தியமாக்கும் பற்று நோய்! அதாவது 'அடிக் ஷன்' ஏற்படுத்தும் நோய்!.இது தேவையா? யோசிப்போமா கண்மணிஸ்!